மேலும் அறிய

கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடுவதற்கு ஆதார் கட்டாயமில்லை-  UIDAI அறிவிப்பு

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி மற்றும் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு ஆதார் அட்டை இல்லை என மக்களுக்கு மறுக்கப்படுவதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

கொரோனா தொற்றின் 2 வது அலை நாடு முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி வரும் நிலையில், ஒரு புறம் மருத்துவ சிகிச்சையும் மற்றும் கொரோனா  தடுப்பூசி போடும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுவருகிறது. இந்த சூழலில் கொரோனா  தடுப்பூசி பெற ஒரு அடையாள ஆவணம் தேவைப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. மேலும் தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்துவதன் மூலம் பொது சேவை வழங்கல்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வினை கொண்டுவருவதே ஆதார் என்று யுஐடிஏஐ கூறியுள்ளது. ஆனால் அதில் சில ஆனால் விதிவிலக்குகளும் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான் இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி மற்றும் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு ஆதார் அட்டை இல்லை என மக்களுக்கு மறுக்கப்படுவதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதனையடுத்து UIDAI அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு காரணத்திற்காக ஒரு குடியிருப்பாளர் ஆதார் வைத்திருக்கவில்லை என்றால், ஆதார் சட்டத்தின் படி அவர்களுக்கு அத்தியாவசிய சேவைகள் மறுக்கப்படக்கூடாது என்று அதிகாரம் உள்ளது. எனவே கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடுவதற்கு ஆதார் கட்டாயமில்லை எனவும் தெரிவித்துள்ளது.


கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடுவதற்கு ஆதார் கட்டாயமில்லை-  UIDAI அறிவிப்பு

இருப்பினும்,  கொரோனா தடுப்பூசி பெறுவதற்கு  ஒரு அடையாள ஆவணம் தேவைப்படுகிறது.  குறிப்பாக “ஆரோக்ய சேது“ பயன்பாட்டின்படி, ஆதார் எண், ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண் (பான்), பாஸ்போர்ட், ஓய்வூதிய வங்கி கணக்கு, என்.பிஆர் ஸ்மார்ட் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை  ஆகிய ஏழு அடையாள அட்டைகளில் ஒன்றைப் பயன்படுத்தி மக்கள் தடுப்பூசிக்கு தங்களை பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளது.  

மேலும் இந்த பெருந்தொற்று சமயத்தில் ஆதார் எண்ணை பயன்படுத்தும் போது யாருக்கும் எந்த சேவையும் நன்மையும் மறுக்கப்பட மாட்டாது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதோடு ஒருவருக்கு ஆதார் இல்லையென்றால் அல்லது சில காரணங்களால் ஆதார் ஆன்லைன் சரிபார்ப்பு வெற்றிகரமாக இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது ஆதார் சட்டம், 2016 இன் பிரிவு 7 மற்றும் 2017 டிசம்பர் 19 தேதியிட்ட அமைச்சரவை செயலக அறிக்கையின் ஆகியவற்றின்படி சேவையை வழங்க வேண்டும் என்று  சட்டத்தில் இடம் உள்ளது.

குறிப்பாக தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்துவதன் மூலம் பொது சேவை வழங்கல்களில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதற்கே ஆதார் கட்டாயம் என்று கூறிய நிலையில் இதற்கான விதிவிலக்குகளும் உள்ளன. இந்நிலையில் ஏதோ சில காரணங்களுக்கு ஆதார் இல்லை என மறுக்கப்படும்போது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி சாத்தியம்?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Embed widget