மேலும் அறிய

India 75: சுதந்திரம் அடைந்த இந்தியாவை ஆட்சி செய்த போர்ச்சுகீசியர்களின் கதை தெரியுமா..?

இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றும், போர்ச்சுக்கீசியர்களிடமிருந்து சுதந்திரம் பெறாத கதை குறித்து தெரிந்து கொள்வோம்.

இந்தியாவிற்கு வணிகம் செய்வதற்காக வந்த ஐரோப்பியர்களான போர்ச்சுகீசியர், ஆங்கிலேயர், டச்சு, டேனிஸ், பிரெஞ்சு ஆகியோர்கள், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நிலப்பகுதிகளை கைப்பற்றி ஆட்சி செய்ய ஆரம்பித்தனர்.

போர்ச்சுக்கீசியரை வரவேற்ற இந்திய மன்னர் :

 ஐரோப்பியர்களில், கடல் வழியாக இந்தியாவிற்கு முதலில் வந்தடைந்தவர், போர்ச்சுக்கீசிய நாட்டைச் சேர்ந்த வாஸ்கோடகாமா தான். அவர் முதன் முதலாக மூன்று கப்பலுடன் கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு 1498 ஆம் ஆண்டு வந்தடைகிறார். அவரை மன்னர் சாமரின் வரவேற்று, வணிகம் செய்வதற்கு அனுமதி வழங்குகிறார்.


India 75: சுதந்திரம் அடைந்த இந்தியாவை ஆட்சி செய்த போர்ச்சுகீசியர்களின் கதை தெரியுமா..?

பின்னர் 3 மாதம் தங்கியிருந்த வாஸ்கோடகாமா குழுவினர், இந்தியாவிலிருந்து, 2 கப்பல்கள் நிறைய சரக்குகளை போர்ச்சுக்கு ஏற்றிச் செல்கின்றனர். பின்னர், போர்ச்சுக்கீசிய நாட்டில் இந்திய பொருட்களை அதிக விலைக்கு விற்கின்றனர். இதை கண்ட, மற்ற ஐரோப்பியர்களும் வணிகம் மேற்கொள்ள ஆசைப்பட்டு, பலரும் இந்தியா வர ஆரம்பிக்கின்றனர். அதையடுத்து, 16-ஆம் நூற்றாண்டுகளின் ஆரம்ப காலத்தில் கொச்சி, கண்ணனூர் உள்ளிட்ட இடங்களில் போர்ச்சுக்கீசியர் வணிக தளத்தை நிறுவுகின்றனர்..

காலவரிசைப்படி ஐரோப்பியர்களின் வருகை

  1. போர்ச்சுக்கீசியர் – கி.பி. 1498
  2. ஆங்கிலேயர் – கி.பி. 1601
  3. டச்சு- கி.பி 1602
  4. டேனிஸ்- கி.பி 1616
  5. பிரெஞ்சு- கி.பி.1664

வணிகர்கள் ஆட்சியாளர்களாக மாற்றம்:

இந்தியாவில் தடை ஏதுமின்றி எளிதாக வணிகம் செய்வதற்காக, கடற்கரையோரம் இடம் வேண்டும் என நினைத்த போர்ச்சுக்கீசியர், 1530 ஆம் ஆண்டு கோவாவை ஆட்சி செய்த பிஜப்பூர் மன்னரை தோற்கடித்து, அப்பகுதியை கைப்பற்றுகின்றனர். அதையடுத்து கோவாவை தலைமையிடமாக அமைத்துக் கொள்கின்றனர். இப்படித்தான் வணிகர்களாக வந்த போர்ச்சுகீசியர் ஆட்சியாளர்களாக மாறுகின்றனர்.

சென்னை சாந்தோம் ஆலயம்:

பின்னர், சென்னை மயிலாப்பூர் பகுதியில் போர்ச்சுக்கீசியரின், குடியிருப்புகள் அதிகமாகின. அதைத் தொடர்ந்து கி.பி. 1522 – 23 ஆம் ஆண்டில் சென்னையில் சாந்தோம் ஆலயத்தை கட்டினர். இன்றும், கிறிஸ்தவ மக்களின் வழிபாட்டு தலமாகவும், புகழ்பெற்ற கிறிஸ்தவ தலமாகவும் இருப்பதை காணலாம்.


India 75: சுதந்திரம் அடைந்த இந்தியாவை ஆட்சி செய்த போர்ச்சுகீசியர்களின் கதை தெரியுமா..?

17ம் நூற்றாண்டுகளில், பிற ஐரோப்பியர்களின் வருகையால், அவர்களுடன் வணிக போட்டியிட முடியாமல், கோவா, டையூ, டாமன் பகுதிகளை தவிர பிற இடங்களை போர்ச்சுக்கல் இழக்கின்றனர்.

பின்னர் வந்த டேனிஸ், டச்சு ஆகியோர் இந்தியாவில் சில காலங்கள் வர்த்தக தளத்தை ஏற்படுத்தி வணிகத்தை மேற்கொண்டனர். இருப்பினும் ஆங்கிலேயர்கள் மற்றும் பிரெஞ்சுகளின் ஆதிக்கத்தை தாக்குபிடிக்காமல் சென்றுவிட்டனர்.

சுதந்திரமடைந்த இந்தியாவில் ஆட்சி:

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆங்கிலேயர்களிடமிருந்து 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரமடைந்தும், போர்ச்சுக்கீசியரிடம்  இருந்து சுதந்திரம் பெறவில்லை. பலருக்கும் இது ஆச்சரியமாக இருக்கலாம். ஆம் உண்மைதான், 1961 ஆம் ஆண்டு வரை கோவா டையூ, டாமன் பகுதிகளிலிருந்து போர்ச்சுக்கீசியர் வெளியேறாமல் இருந்தனர்.


India 75: சுதந்திரம் அடைந்த இந்தியாவை ஆட்சி செய்த போர்ச்சுகீசியர்களின் கதை தெரியுமா..?

அதன் பின்னர் தான் நேரு பிரதமராக இருந்த காலத்தில் ராணுவத்தின் மூலம் போரிட்டு விரட்டியடிக்கப்பட்டனர். இந்த நிகழ்வுதான் ஆபரேஷன் விஜய் என அழைக்கப்படுகிறது. இதலில் சுவாரஸ்யம் என்னவென்றால், இந்தியாவிற்கு முதலில் வந்தவர்களும் போர்ச்சுக்கீசியர்களே, கடைசியாக சென்றவர்களும் போர்ச்சுக்கீசியர்களேயாவர்…..

75th Independence Day 2022: 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சுதந்திர போராட்ட வரலாறு தொடர்பான 75 சிறப்பு கட்டுரைகளை தொடர். இது தொடரின் 3வது கட்டுரை....

முதல் கட்டுரை: India 75: நெருங்கும் சுதந்திர தினம்.. ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருவதற்கான காரணம் என்ன? தெரிந்துகொள்வோம்..

இரண்டாம் கட்டுரை: India 75: இந்தியாவுக்கான கடல்வழி பாதையை காற்றின் உதவியால் கண்டுபிடித்த போர்ச்சுக்கீசியர்கள்.. ஒரு தொகுப்பு..

அடுத்த பகுதி: தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்தை கட்டும் ஆங்கிலேயர்கள்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget