மேலும் அறிய

Viral Video: இமாச்சல பிரதேசத்தை புரட்டிபோட்ட கனமழை.. இடிந்து விழுந்த கோயில்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ

சுமார் 55 மணி நேரம் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மாநிலத்தில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பெய்த கனமழையில் சிக்கி 21 பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு இன்று தெரிவித்துள்ளார். சிம்லாவின் சம்மர் ஹில் பகுதியில்  நிலச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து ஒரு கோயில் இடிந்து விழுந்தது. இதில் சிக்கி ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை:

மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியிட்டுள்ள இமாச்சலப் பிரதேச முதலமைச்சர், "குறைந்தது 20-25 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது" என்றார். சோலன் நகரில் ஜாடோன் கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பின் காரணமாக ஏழு பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் காணாமல் போயுள்ளனர் என அதிகாரிகள் தெரிவிதத்துள்ளனர்.

கனமழையில் ஏற்பட்ட வெள்ளத்தால் இரண்டு வீடுகள் மற்றும் ஒரு மாட்டு தொழுவமும் அடித்துச் செல்லப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.  சுமார் 55 மணி நேரம் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மாநிலத்தில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. மண்டி, சிர்மூர், சிம்லா, ஹமிர்பூர், பிலாஸ்பூர் மற்றும் சோலன் ஆகிய இடங்களில் வரலாறு காணாத வெள்ளத்தாலும் நிலச்சரிவு ஏற்பட்டதாலும் மரங்கள் விழுந்ததாலும் பல வீடுகள் சேதமாகின. 12 வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தன.

மின்சார வசதியின்றி தவிக்கும் மக்கள்:

பல வீடுகளில் மின்சார வசதியும் தண்ணீர் இல்லாமலும் மக்கள் தவித்து வருகின்றனர் என கூறப்படுகிறது. கல்கா-சிம்லா, சண்டிகர்-மனாலி, சிம்லா-தரம்ஷாலா மற்றும் பௌண்டா-ஷிலை தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட 800க்கும் மேற்பட்ட சாலைகள் மாநிலம் முழுவதும் மூடப்பட்டுள்ளன. இதனால், பேருந்துகள் செல்லும் 2,000க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அடுத்த 3 அல்லது 4 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பியாஸ், பாங் அணை, ரஞ்சித் சாகர் மற்றும் சட்லஜ் நதிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மேக வெடிப்பு போன்ற நிகழ்வுகள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்பது மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை வரை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழையில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இமாச்சலப் பிரதேச முதலமைச்சர், "இந்த கடினமான காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டுள்ளோம்" என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

ஹர்னம் (38), கமல் கிஷோர் (35), ஹேம்லதா (34), ராகுல் (14), நேஹா (12), கோலு (8) மற்றும் ரக்ஷா (12) ஆகியோர் கனமழையில் சிக்கி உயிரிந்திருப்பதாக காவல்துறை கண்காணிப்பாளர் கௌரவ் சிங் தெரிவித்துள்ளார்.

 

நேற்று மாலை, வீடியோ கான்பரன்சிங் மூலம் அனைத்து மாவட்ட ஆணையர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர், அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தொழில் பயிற்சி நிறுவனங்கள், பொறியியல், பாலிடெக்னிக், மருந்தியல் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்தார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
வருமான வரி தாக்கல்: இன்றே இறுதி நாள்! தவறினால் ரூ.5000 அபராதம் உறுதி! விபரம் இதோ..
வருமான வரி தாக்கல்: இன்றே இறுதி நாள்! தவறினால் ரூ.5000 அபராதம் உறுதி! விபரம் இதோ..
மத்திய அரசு ஊழியர்களே! 8வது ஊதியக் குழுவின் FITMENT FACOTR: உங்கள் சம்பளம் எவ்வளவு?
மத்திய அரசு ஊழியர்களே! 8வது ஊதியக் குழுவின் FITMENT FACOTR: உங்கள் சம்பளம் எவ்வளவு?
ஆகஸ்ட் மாதத்தில் 14 நாட்கள் வங்கி விடுமுறை! தமிழ்நாட்டிற்கு எத்தனை நாள் தெரியுமா?
ஆகஸ்ட் மாதத்தில் 14 நாட்கள் வங்கி விடுமுறை! தமிழ்நாட்டிற்கு எத்தனை நாள் தெரியுமா?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
Embed widget