மேலும் அறிய
Advertisement
1 PM Headlines:1 மணி தலைப்புச்செய்திகள்...! உங்களைச் சுற்றி இதுவரை நடந்தது என்ன?
1 PM Headlines: காலை முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- பொங்கல் பரிசுத்தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் பயனாளர்களின் வீடுகளுக்கே சென்று, தமிழகம் முழுவதும் இன்று முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
- அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகியிடம் 1 லட்சம் கொள்ளை
- தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு பணி ஒத்திகை நடைபெற்றது.
- தாம்பரத்தில் நடைபெற்ற இந்திய வரலாற்றுப் பேரவையின் 81ஆவது மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நாட்டை சூழ்ந்துள்ள ஆபத்து வரலாற்று திரிபு தான் எனப் பேசியுள்ளார்.
- அதிமுகவின் இடைக்காலச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நிறைவு பெற்றது.
- அதிமுகவின் பெயரையும் கொடியையும் தொடர்ந்து பயன்படுத்துவோம் என் ஈபிஎஸ் தரப்பினருக்கு ஓ. பன்னீர்செல்வம் பதில் நோட்டீஸ்.
- ஈரோடு, பெருந்துறை நான்குரோட்டில் சுவற்றில் துளையிட்டு கொள்ளை முயற்சி.
- குமரிக்கடல் நோக்க் நகர்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி. கடலூர், தூத்துக்குடி மீனவர்கள் மீண்டும் வங்கக்கடலுக்கு மீன் பிடிக்கத் திரும்பினர்.
- தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 29 ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று அதிகாலை 4 மணியளவில் மண்டல பூஜை தொடங்கியது. மண்டல பூஜையை முன்னிட்டு இன்று 40 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- ஆயுர்வேதா, யுனானி, சித்தா, ஓமியோபதி ஆகிய ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று தொடங்கி உள்ளது.
இந்தியா:
- புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி நாளை முழு கடையடைப்பு போராட்டத்துக்கு அம்மாநில அதிமுகவினர் அழைப்பு.
- மேகாலயா மாநிலம், உம்ரோவில் இந்தியா - கஜகஸ்தான் ராணுவ வீரர்கள் கூட்டு ராணுவப் பயிற்சி.
- குஜராத் அருகே 300 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள்களுடன் பாகிஸ்தான் படகு சிக்கியது.
- வங்கி ‘லாக்கரை’ புதுப்பிக்க ஜனவரி 1ம் தேதி வரை கெடு: புதிய விதிகளை வெளியிட்டது ரிசர்வ் வங்கி
- வைரஸ் காய்ச்சலால் பாதிப்பு : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் அட்மிட்
உலகம்:
- சீனாவில் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை இல்லை - சீனா அதிரடி அறிவிப்பு.
- உக்ரைனின் பாதுகாப்பு படையின் வலிமையை மேம்படுத்துவதற்காக ரூ.1.8 பில்லியன் டாலர் ஆயுத உதவிகளை அமெரிக்கா அறிவித்தது.
- ரஷ்யாவின் முக்கியத்துவம் வாய்ந்த எங்கல்ஸ் விமான தளத்தில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலால் மூவர் பலி
- அமெரிக்காவை நிலைகுலையச் செய்த பனிப்புயலால் 32 பேர் உயிரிழப்பு.
விளையாட்டு:
- தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் இரட்டை சதமடித்து அசத்தியுள்ளார்.
- 2023ல் இந்தியாவில் நடக்கவுள்ள இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் ரோகித் ஷர்மா மற்றும் கே. எல். ராகுலுக்கு இந்திய அணியில் இடம் இல்லை என தகவல்
- பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் பீலேவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
- ஐந்து பேர் கொண்ட இந்திய அணி தேர்வுக் குழுவிற்கு MS தோனி, வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர் மற்றும் பாகிஸ்தானின் இன்சமாம் உல் ஹக் ஆகியோரின் பெயர்களில் போலியாக விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
ஐபிஎல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
for smartphones
and tablets
and tablets
வினய் லால்Columnist
Opinion