மேலும் அறிய

ஊத்தங்கரை அருகே 4000 ஆண்டுக்கு முன்பு வேட்டையாட பயன்படுத்திய வெட்டிக் கருவி கண்டெடுப்பு

இந்த செங்கற்கள் 2000 ஆண்டுகள் பழமையானது. இதன் மூலம் இந்த இடம் சங்க கால மக்களின் வாழ்விடமாக இருக்கக்கூடும் என்பதால், தற்போது அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மயிலாடும்பாறை பகுதியில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஊத்தங்கரை தாலுகா குன்னத்தூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட சென்னானூரில் மலை அடிவாரம் அருகே 20 ஏக்கர் பரப்பளவில் பழங்கால பானையோடுகள் அதிகம் கிடைத்துள்ளது.

இதனால் இந்த பகுதியிலும் தமிழ்நாடு அரசு அகழாய்வு பணிகளை தொடங்க வேண்டும். இங்கே முன்னோர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைப்பதாக பொது மக்களும் வரலாற்று ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர். இந்த பகுதியில் அண்மையில் தமிழக அரசு அகழாய்வு மேற்கொண்டுள்ளது. இந்த பகுதி மயிலோடும் பாறையை போன்றது. இதனை தொடர்ந்து கடந்த 6 நாட்களுக்கு முன் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டது.

இங்கு ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நுண் கற்கருவிகள் தொடங்கி, உடைந்த புதிய கற்கால கை கோடாரிகள், இரும்பு காலத்தை சேர்ந்த கருப்பு, சிவப்பு, பானையோடுகள், இரும்பு கழிவுகள், பாறை ஓவியங்கள் என வரலாற்றுக்கு முற்பட்ட கால எச்சங்களோடு, வரலாற்று காலத்தின் தொடக்கமான சங்க காலத்தை சேர்ந்து செங்கற்கள் கிடைத்துள்ளன. 

இந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் பக்கம் முழுவதும் 100 பழங்கால செங்கற்களை கொண்டு சமீபத்தில் சுவர் எழுப்பி உள்ளனர். இந்த நிலத்தின் அடியில் இந்த செங்கற்கள் வரிசையாக இருப்பதாக ஊர் மக்கள் தெரிவித்தனர். 

இந்த செங்கற்கள் 2000 ஆண்டுகள் பழமையானது. இதன் மூலம் இந்த இடம் சங்க கால மக்களின் வாழ்விடமாக இருக்கக்கூடும் என்பதால், தற்போது அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பணியின் போது,  53cm ஆழ அகழாய்வு குழுவில் உடைந்த புதிய கற்கால கருவி ஒன்று கிடைத்துள்ளது.  

இந்த கருவியின் நீளம் 6 சென்டி மீட்டர், அகலம் 4 சென்டி மீட்டர் ஆக உள்ளது. இந்த கருவி சுமார் 4000 ஆண்டுகள் பழமையானது. புதிய கற்காலத்தில் தான் முதன் முதலில் விவசாயம் செய்ய துவங்கினர். அப்போது விவசாயத்திற்கு 30 முதல் 25 சென்டி மீட்டர் நீளமுள்ள கற்கருவியைத் தான் பயன்படுத்தினர்.

பி கருவி சிறியது என்பதால், மரங்கள் மற்றும் இறைச்சியை வெட்டவும், வேட்டையாடவும் கோடாரியை போன்று இதை அப்போது மனிதன் பயன்படுத்தியுள்ளான் என்பது தெரிய வந்துள்ளதாக சென்னானூர் அகழாய்வு இயக்குனர் பரந்தாமன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பகுதியில் தொடர்ந்து அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னானூர் பகுதியில் இன்னும் பல வரலாற்றுச் சுவடுகள் கிடைக்க வாய்ப்புள்ளாதாக தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy rowdy :  ரவுடியை சுட்டுப்பிடித்த POLICE! அலறவிடும் SP வருண்குமார்! நடந்தது என்ன?Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
Breaking News LIVE, July 5: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Robot Suicide: 9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
Embed widget