மேலும் அறிய

தருமபுரியில் 68 கல்லூரிகளில் படிக்கும் 733 மாணவர்கள் மகிழ்ச்சி - காரணம் என்ன?

தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் 733 மாணவர்கள் பயனடைகின்றனர் - தருமபுரி ஆட்சியர் பெருமிதம்

தர்மபுரி மாவட்டத்தில் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் 68 கல்லூரிகளில் படிக்கும் 733 மாணவர்கள் மாதாந்திர உதவித் தொகையாக ஆயிரம் பெற்று பயனடைந்து வருகின்றனர் என மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆட்சியர் பேசுகையில், 

மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம்

தமிழகத்தில் பெண்களின் உயர்கல்வியை உறுதி செய்வதற்காக தொடங்கப்பட்ட புதுமைப்பெண் திட்டம் பெண்களின் உயர் கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளியைபோல் அரசு பள்ளிகளில் படித்த ஏழை எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும், அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை உயர்த்திடவும், தமிழ் புதல்வன் எனும் திட்டத்தை தமிழக முதல்வர் அறிவித்தார்.

இத்திட்டத்தை முதலில் கோவையில் தொடங்கி வைத்த முதல்வர்

கோவை அரசு கல்லூரியில் கடந்த 9-ஆம் தேதி முதல்வர் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து உயர் கல்வி சேரும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள் பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருக்கேற்றிட உதவும் வகையில் மாதந்தோறும் ரூ. 1000 அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார்.

தர்மபுரியில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

இதைத்தொடர்ந்து தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்திர உதவித்தொகை ஆயிரம் பெறுவதற்கான பற்று அட்டைகளை வழங்கினார்.

தர்மபுரி மாவட்டத்தில் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் 68 கல்லூரிகளில் படிக்கும் 733 மாணவர்கள் மாதாந்திர உதவித் தொகையான ஆயிரம் ரூபாயை பெற்று வருகின்றனர்.

மாணவர்கள் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இந்த நிதியை சேமிப்பாக வைத்து மேலும் உயர்கல்விக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புத்தகங்கள் வாங்குவது கல்வி சார்ந்த விஷயங்களை மட்டுமே பயன்படுத்தி தங்கள் உயர் கல்விக்கு உத்திரவாதமாக  இதையே பயன்படுத்த வேண்டும். அறிவு சார்ந்த சமுதாயம் உருவாகுவதற்கு இந்த நிதியை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

போட்டித் தேர்வுகளுக்கு இந்த உதவி தொகையை பயன்படுத்தி கொள்ள வேண்டும்

ஏதேனும் போட்டி தேர்வுகளுக்கு தேவையான நல்ல புத்தகங்களை வாங்கி படிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சாந்தி கேட்டுக் கொண்டார். 

 கல்லூரி மாணவர்கள் சிறந்த கல்வியைக் கற்றால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்

கல்லூரி மாணவர்கள் சிறந்த கல்வியை கற்றால் அவர்கள் சுயமாக தொழில் செய்வது முன்னேறுவதற்கு நல்ல வாய்ப்பாகவும், வேலை வாய்ப்பு பெறவும் உறுதுணையாக அமையும் மாணவர்கள் மனதை வைத்தால் எதையும் சாதிக்கலாம் எளிதில் வெற்றி அடையலாம்.

எனவே அரசால் மாதாந்தோறும் வழங்கப்படும் ஆயிரம் உதவி தொகை பெற்று கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் 68 கல்லூரிகளில் படிக்கும் 733 மாணவர்கள் மாதாந்திர உதவி சேவை பெற்று பயனடைந்து வருகின்றனர் என்றார்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
Embed widget