மேலும் அறிய

பாலக்கோடு அருகே மீண்டும் சிறுத்தை அட்டகாசம்! ஒரே வீட்டில் மூன்றாவது முறையாக வேட்டை! பகீர் CCTV காட்சி

பாலக்கோடு அருகே வாழைத்தோட்டம் பகுதியில் வசித்து வரும் விநாயகம் என்பவரின் வீட்டில் தொடர்ச்சியாக சிறுத்தை நுழைந்து வேட்டையாடும் சம்பவம் அப்பகுதியை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலக்கோடு அருகே மீண்டும் மீண்டும் ஒரே வீட்டில் சிறுத்தை வேட்டையாடும் காட்சியின் சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. 

விலங்குகள் நடமாட்டம்:

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள தளி, தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி ஆகிய வனப்பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் அடிக்கடி உணவு தேடி அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு நுழையும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், பாலக்கோடு அருகே வாழைத்தோட்டம் பகுதியில் வசித்து வரும் விநாயகம் என்பவரின் வீட்டில் தொடர்ச்சியாக சிறுத்தை நுழைந்து வேட்டையாடும் சம்பவம் அப்பகுதியை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுத்தை அட்டூழியம்:

இன்று அதிகாலை வீட்டின் வெளியே வித்தியாசமான சத்தம் கேட்டதை தொடர்ந்து, விரைந்து வெளியே சென்ற விநாயகம், தனது வீட்டின் முன்பு சிறுத்தை ஒன்றை பார்த்துள்ளார். அதன்போது, வீட்டின் முன்புறம் உறங்கிக் கொண்டிருந்த இரு சேவல்களில் ஒன்றை அந்த சிறுத்தை பதுங்கி சென்று கவ்விச் சென்றது. இந்த பகீர் காட்சி வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகியிருந்தது.

ஒரே வீட்டில் இரண்டாவது முறை:

இதற்கு முன்பும், கடந்த மூன்று மாதங்களில் இதே வீட்டில் கோழி மற்றும் நாய்களை அந்த சிறுத்தை வேட்டையாடி சென்று விட்டதாக கூறப்படுகிறது. தற்போது அதே சிறுத்தை மீண்டும் வந்து சேவலை வேட்டையாடியுள்ளதை காட்டும் சிசிடிவி காட்சிகள், விநாயகம் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்:

சிறுத்தை உணவு தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவது, தருமபுரி-கிருஷ்ணகிரி எல்லைப் பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும்  சம்பவமாக மாறியுள்ளதாக அப்பகுதி மக்கள் கருதுகின்றனர் இந்த சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து, சிறைப்படுத்தி மீண்டும் அதை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்கான நடவடிக்கைகளை பாலக்கோடு வனத்துறையினர் உடனடியாக எடுக்க வேண்டும் என விநாயகம் குடும்பத்தினரும், அப்பகுதி பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றன

வால்பாறை சம்பவம்:

கடந்த சில நாட்களுக்கு முன் தாயின் கண் முன்பே சிறுத்தை 4 வயது சிறுமியை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தி இருந்தது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் முண்டா என்பவர் தனது குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மோனிகா.  இவர்களுக்கு 4 வயதில் ரோஷிணி என்ற மகள் உள்ளார். அந்த சிறுமி வழக்கமாக வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போதுதேயிலைத் தோட்டத்தின் அருகே சிறுத்தை ஒன்று பதுங்கியிருந்தது. சிறுமியை தாக்கி வனப்பகுதிக்குள் இழுத்து சென்றது. நீண்ட தேடுதலுக்கு பின்னர் சிறுமியின் உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டது, இதற்கு காரணமான அந்த சிறுத்தையை வனத்துறையினர் குண்டு வைத்து பிடித்த நிலையில் டாப்ஸ்லிப் வனப்பகுதியில் விடப்பட்டது 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget