மேலும் அறிய

தருமபுரியில் போக்கு காட்டி வந்த யானை; மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை

மயக்க நிலையில் இருந்த யானையை அதிகாலை 3 மணி அளவில் சிள்ளாரஹள்ளி மலைப் பகுதியில் கிரேன் மற்றும் ஜேசிபி இயந்திரம்  உதவியுடன் பிடித்தனர்.

தருமபுரி பகுதியில் 15 நாட்களாக வனத் துறையினருக்கு போக்கு காட்டி வந்த ஒற்றை ஆண் யானையை அதிகாலை மயக்க ஊசி  செலுத்தி வனத் துறையினர் பிடித்தனர்.
 
தருமபுரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக உணவு மற்றும் தண்ணீர் தேடி ஒற்றை ஆண் யானை ஊருக்குள் நுழைந்தது. இந்த யானை காரிமங்கலம், பாலக்கோடு, கம்பைநல்லூர், தருமபுரி, நல்லம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரிந்து, விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது. அப்பொழுது காரிமங்கலம் பகுதியில் அதிகாலையில் வயல்வெளிக்கு வந்த யானை இளம் பெண் ஒருவரை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த ஜெயஸ்ரீ என்ற பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தருமபுரியில் போக்கு காட்டி வந்த யானை; மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை
 

மயக்க ஊசி செலுத்தி

 
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக வத்தல்மலை அடிவாரத்தில் ஆண் யானை சுற்றி திரிந்து வந்தது. இதனை தொடர்ந்து வனத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். ஆனால் சில நேரங்களில் யானை திடீரென மாயமாகி விடுவதால், வனத் துறையினர் யானையை தேடி அலைந்து வந்தனர்.  இந்நிலையில் நேற்று காலை முதல் பொம்மிடி, சில்லாரஹள்ளி பகுதிகளில் மலை அடிவாரத்தில் யானை சுற்றித் திரிந்தது. இதனை அடுத்து வனத் துறையினருக்கு 15 நாட்களாக போக்கு காட்டி வரும் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத் துறையினர் முடிவு எடுத்தனர்.

தருமபுரியில் போக்கு காட்டி வந்த யானை; மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை
 

பிடிபட்ட யானை

 
இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வனத் துறையினர் நேற்று காலை முதல் யானை நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். தொடர்ந்து இரவு யானைக்கு மயக்க  ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்பொழுது கால்நடை மருத்துவர் பயானைக்கு மயக்க ஊசி செலுத்தினார். தொடர்ந்து மூன்று மயக்க ஊசிகள் செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மயக்க நிலையில் இருந்த யானையை அதிகாலை 3 மணி அளவில் சிள்ளாரஹள்ளி மலைப் பகுதியில் கிரேன் மற்றும் ஜேசிபி இயந்திரம்  உதவியுடன் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து பிடிக்கப்பட்ட ஆண் ஒற்றை யானையை லாரி மூலமாக அஞ்செட்டி வனப்பகுதியில் விடுவதற்கு வனத் துறையினர் எடுத்துச் சென்றனர்.
 

மக்கள் நிம்மதி

 
மேலும் கடந்த 15 நாட்களாக உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்த ஒற்றை ஆண் யானை விவசாய பயிர்களை சேதப்படுத்தியும், பொது மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில், 3 மயங்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டதால், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத் துறையினர் தடுப்பதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். தற்பொழுது இந்த ஒற்றை ஆண் யானையால் சேதப்படுத்தப்பட்ட விவசாய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
Elon Musk Net Worth: சொத்தில் சாதனை படைத்த எலான் மஸ்க்; 700 பில்லியன் டாலரை தாண்டிய முதல் நபர் - உலகத்துலயேங்க.!
சொத்தில் சாதனை படைத்த எலான் மஸ்க்; 700 பில்லியன் டாலரை தாண்டிய முதல் நபர் - உலகத்துலயேங்க.!
Epstein Files: வெளியான எப்ஸ்டீன் கோப்புகள்; மாயமான ட்ரம்ப் தொடர்பான பதிவுகள்; எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி
வெளியான எப்ஸ்டீன் கோப்புகள்; மாயமான ட்ரம்ப் தொடர்பான பதிவுகள்; எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
Elon Musk Net Worth: சொத்தில் சாதனை படைத்த எலான் மஸ்க்; 700 பில்லியன் டாலரை தாண்டிய முதல் நபர் - உலகத்துலயேங்க.!
சொத்தில் சாதனை படைத்த எலான் மஸ்க்; 700 பில்லியன் டாலரை தாண்டிய முதல் நபர் - உலகத்துலயேங்க.!
Epstein Files: வெளியான எப்ஸ்டீன் கோப்புகள்; மாயமான ட்ரம்ப் தொடர்பான பதிவுகள்; எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி
வெளியான எப்ஸ்டீன் கோப்புகள்; மாயமான ட்ரம்ப் தொடர்பான பதிவுகள்; எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி
Tata Punch vs Hyundai Exter: டாடா பஞ்ச் சிஎன்ஜி-யா.? ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜி-யா.? குறைந்த பட்ஜெட்டில் எந்த கார் சிறந்தது.?
டாடா பஞ்ச் சிஎன்ஜி-யா.? ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜி-யா.? குறைந்த பட்ஜெட்டில் எந்த கார் சிறந்தது.?
Life Insurance Tips: மக்களே கவனம்.! ஆயுள் காப்பீடு வாங்கும்போது இந்த தவறுகள செய்யாதீங்க.. இல்லைன்னா இழப்பு தான்.!
மக்களே கவனம்.! ஆயுள் காப்பீடு வாங்கும்போது இந்த தவறுகள செய்யாதீங்க.. இல்லைன்னா இழப்பு தான்.!
America Vs Venezuela: சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
Maruti Swift Without Tax: வரி இல்லாமல் மாருதி ஸ்விஃப்ட் வாங்கணுமா! இப்படி வாங்கினால் ரூ.1.89 லட்சம் மிச்சம் - விவரம் இதோ
வரி இல்லாமல் மாருதி ஸ்விஃப்ட் வாங்கணுமா! இப்படி வாங்கினால் ரூ.1.89 லட்சம் மிச்சம் - விவரம் இதோ
Embed widget