மேலும் அறிய

தருமபுரியில் போக்கு காட்டி வந்த யானை; மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை

மயக்க நிலையில் இருந்த யானையை அதிகாலை 3 மணி அளவில் சிள்ளாரஹள்ளி மலைப் பகுதியில் கிரேன் மற்றும் ஜேசிபி இயந்திரம்  உதவியுடன் பிடித்தனர்.

தருமபுரி பகுதியில் 15 நாட்களாக வனத் துறையினருக்கு போக்கு காட்டி வந்த ஒற்றை ஆண் யானையை அதிகாலை மயக்க ஊசி  செலுத்தி வனத் துறையினர் பிடித்தனர்.
 
தருமபுரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக உணவு மற்றும் தண்ணீர் தேடி ஒற்றை ஆண் யானை ஊருக்குள் நுழைந்தது. இந்த யானை காரிமங்கலம், பாலக்கோடு, கம்பைநல்லூர், தருமபுரி, நல்லம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரிந்து, விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது. அப்பொழுது காரிமங்கலம் பகுதியில் அதிகாலையில் வயல்வெளிக்கு வந்த யானை இளம் பெண் ஒருவரை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த ஜெயஸ்ரீ என்ற பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தருமபுரியில் போக்கு காட்டி வந்த யானை; மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை
 

மயக்க ஊசி செலுத்தி

 
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக வத்தல்மலை அடிவாரத்தில் ஆண் யானை சுற்றி திரிந்து வந்தது. இதனை தொடர்ந்து வனத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். ஆனால் சில நேரங்களில் யானை திடீரென மாயமாகி விடுவதால், வனத் துறையினர் யானையை தேடி அலைந்து வந்தனர்.  இந்நிலையில் நேற்று காலை முதல் பொம்மிடி, சில்லாரஹள்ளி பகுதிகளில் மலை அடிவாரத்தில் யானை சுற்றித் திரிந்தது. இதனை அடுத்து வனத் துறையினருக்கு 15 நாட்களாக போக்கு காட்டி வரும் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத் துறையினர் முடிவு எடுத்தனர்.

தருமபுரியில் போக்கு காட்டி வந்த யானை; மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை
 

பிடிபட்ட யானை

 
இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வனத் துறையினர் நேற்று காலை முதல் யானை நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். தொடர்ந்து இரவு யானைக்கு மயக்க  ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்பொழுது கால்நடை மருத்துவர் பயானைக்கு மயக்க ஊசி செலுத்தினார். தொடர்ந்து மூன்று மயக்க ஊசிகள் செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மயக்க நிலையில் இருந்த யானையை அதிகாலை 3 மணி அளவில் சிள்ளாரஹள்ளி மலைப் பகுதியில் கிரேன் மற்றும் ஜேசிபி இயந்திரம்  உதவியுடன் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து பிடிக்கப்பட்ட ஆண் ஒற்றை யானையை லாரி மூலமாக அஞ்செட்டி வனப்பகுதியில் விடுவதற்கு வனத் துறையினர் எடுத்துச் சென்றனர்.
 

மக்கள் நிம்மதி

 
மேலும் கடந்த 15 நாட்களாக உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்த ஒற்றை ஆண் யானை விவசாய பயிர்களை சேதப்படுத்தியும், பொது மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில், 3 மயங்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டதால், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத் துறையினர் தடுப்பதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். தற்பொழுது இந்த ஒற்றை ஆண் யானையால் சேதப்படுத்தப்பட்ட விவசாய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Pak. Asim Munir: இந்தா தொடங்கிட்டார்ல; “இந்தியா மாயையில் இருக்கக் கூடாது“; அசிம் முனீரின் ஆத்திரமூட்டும் பேச்சு
இந்தா தொடங்கிட்டார்ல; “இந்தியா மாயையில் இருக்கக் கூடாது“; அசிம் முனீரின் ஆத்திரமூட்டும் பேச்சு
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
Embed widget