மேலும் அறிய

ஒகேனக்கல் வனப் பகுதியில் வனத்துறை ஆக்கிரமிப்பு அகற்றிய விவகாரம்: மனித உரிமை ஆர்வலர் குழு விசாரணை

ஒகேனக்கல் வனப் பகுதியில் வனத் துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றிய விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆர்வலர் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே பென்னாகரம் வனப்பகுதிக்கு உட்பட்ட வேப்பமரத்து கொம்பு கிராமத்தில் மூன்று தலைமுறைகளாக 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

அண்மையில் பென்னாகரம் வனத்துறையினர் மற்றும் காவலர்கள் அடங்கிய 40 பேர் கொண்ட குழுவினர் வேப்பமரத்து கொம்பு கிராமத்திற்கு சென்று கிருஷ்ணன் என்பவரின் வீட்டை வனப்பகுதியை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டதாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வனத்துறையினருக்கும் கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 3 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தன்னார்வ அமைப்பினர் கண்டன அறிக்கைகளை வெளியிட்டனர்.

இந்த நிலையில், கடந்த திங்கள் கிழமை தமிழகம், பாண்டிச்சேரி சமூக செயல்பாட்டு இயக்க மாநில முதன்மைச் அமைப்பாளரும், மாநில ஆதிவாசிகளின் ஐந்தாவது அட்டவணைக்கான பிரச்ச சார் ரங்கநாதன் தலைமையில் மாநில மனித உரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் வழக்குரைஞர் தென்பாண்டியன், தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் குணசேகரன், மனித உரிமை ஆர்வலர் செந்தில் ராஜா, தலித் பெண்ணுரிமை கூட்டமைப்பு லட்சுமி, சமூக ஆர்வலர் கென்னடி ஆகியோர்கள் அடங்கிய மனித உரிமை ஆர்வலர் குழுவினர் நேரிடையாக வேப்பமரத்து கொம்பு கிராமத்திற்கு சென்று, வனத் துறையினரின் நடவடிக்கைகள், அணுகுமுறைகள், கிராம மக்களின் கோரிக்கைகள், தேவைப்படும் வசதிகள் குறித்து கேட்டறிந்தனர். அப்பொழுது வனத் துறையினரும் சம்பவ இடத்தில் இருந்துள்ளனர். வனப் பகுதியில் உள்ள மீனவர்களின் வீடுகள் இடித்து ஆக்கிரமிப்பு என கொடுத்து மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு வனத் துறையினர் யாரும் பதில் அளிக்கவில்லை. அப்பொழுது மனித உரிமை ஆர்வலர்கள் வனத் துறையினரிடம் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி பேசியதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், வேப்பமரத்து கொம்பு கிராமத்தில் 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த மூன்று தலைமுறைக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வனப்பகுதி ஆக்கிரமிப்பு என கூறி, இந்த மக்களை வெளியேற்றியுள்ளனர்.

மேலும், மாற்று இடமாக வருவாய்த் துறையினர் பென்னாகரம் அருகில் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் காவிரி ஆற்றை நம்பியிருக்கின்ற தங்களுக்கு ஒகேனக்கல், ஊட்டமலை போன்ற இடங்களில் இடம் ஒதுக்கினால் போதும், தினமும் மீன் பிடித்து வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்வோம் என தெரிவித்துள்ளனர்.  

மேலும், வனத் துறையினரால் வீடு இடிக்கப்பட்ட இடத்திலேயே, பாதிக்கப்பட்டோர் தற்காலிகமாக குடிசை போட்டு தங்கி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
ABP Southern Rising Summit 2025 LIVE:  ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
ABP Southern Rising Summit 2025 LIVE: ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Embed widget