மேலும் அறிய

ஒகேனக்கல் வனப் பகுதியில் வனத்துறை ஆக்கிரமிப்பு அகற்றிய விவகாரம்: மனித உரிமை ஆர்வலர் குழு விசாரணை

ஒகேனக்கல் வனப் பகுதியில் வனத் துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றிய விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆர்வலர் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே பென்னாகரம் வனப்பகுதிக்கு உட்பட்ட வேப்பமரத்து கொம்பு கிராமத்தில் மூன்று தலைமுறைகளாக 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

அண்மையில் பென்னாகரம் வனத்துறையினர் மற்றும் காவலர்கள் அடங்கிய 40 பேர் கொண்ட குழுவினர் வேப்பமரத்து கொம்பு கிராமத்திற்கு சென்று கிருஷ்ணன் என்பவரின் வீட்டை வனப்பகுதியை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டதாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வனத்துறையினருக்கும் கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 3 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தன்னார்வ அமைப்பினர் கண்டன அறிக்கைகளை வெளியிட்டனர்.

இந்த நிலையில், கடந்த திங்கள் கிழமை தமிழகம், பாண்டிச்சேரி சமூக செயல்பாட்டு இயக்க மாநில முதன்மைச் அமைப்பாளரும், மாநில ஆதிவாசிகளின் ஐந்தாவது அட்டவணைக்கான பிரச்ச சார் ரங்கநாதன் தலைமையில் மாநில மனித உரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் வழக்குரைஞர் தென்பாண்டியன், தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் குணசேகரன், மனித உரிமை ஆர்வலர் செந்தில் ராஜா, தலித் பெண்ணுரிமை கூட்டமைப்பு லட்சுமி, சமூக ஆர்வலர் கென்னடி ஆகியோர்கள் அடங்கிய மனித உரிமை ஆர்வலர் குழுவினர் நேரிடையாக வேப்பமரத்து கொம்பு கிராமத்திற்கு சென்று, வனத் துறையினரின் நடவடிக்கைகள், அணுகுமுறைகள், கிராம மக்களின் கோரிக்கைகள், தேவைப்படும் வசதிகள் குறித்து கேட்டறிந்தனர். அப்பொழுது வனத் துறையினரும் சம்பவ இடத்தில் இருந்துள்ளனர். வனப் பகுதியில் உள்ள மீனவர்களின் வீடுகள் இடித்து ஆக்கிரமிப்பு என கொடுத்து மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு வனத் துறையினர் யாரும் பதில் அளிக்கவில்லை. அப்பொழுது மனித உரிமை ஆர்வலர்கள் வனத் துறையினரிடம் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி பேசியதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், வேப்பமரத்து கொம்பு கிராமத்தில் 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த மூன்று தலைமுறைக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வனப்பகுதி ஆக்கிரமிப்பு என கூறி, இந்த மக்களை வெளியேற்றியுள்ளனர்.

மேலும், மாற்று இடமாக வருவாய்த் துறையினர் பென்னாகரம் அருகில் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் காவிரி ஆற்றை நம்பியிருக்கின்ற தங்களுக்கு ஒகேனக்கல், ஊட்டமலை போன்ற இடங்களில் இடம் ஒதுக்கினால் போதும், தினமும் மீன் பிடித்து வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்வோம் என தெரிவித்துள்ளனர்.  

மேலும், வனத் துறையினரால் வீடு இடிக்கப்பட்ட இடத்திலேயே, பாதிக்கப்பட்டோர் தற்காலிகமாக குடிசை போட்டு தங்கி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (11-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
தருமபுரியில் நாளை (11-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
தருமபுரிக்கு பேருந்து சேவை வெறும் வசதியல்ல; அது சமூகநீதி ஆயுதம்! – அமைச்சருக்கு சௌமியா அன்புமணி MLA பறக்கவிட்ட அவசரக் கடிதம்!
தருமபுரிக்கு பேருந்து சேவை வெறும் வசதியல்ல; அது சமூகநீதி ஆயுதம்! – அமைச்சருக்கு சௌமியா அன்புமணி MLA பறக்கவிட்ட அவசரக் கடிதம்!
Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (ஜூலை 15) எங்கெல்லாம் மின் தடை: உங்க பகுதி லிஸ்டில் இருக்கா?
தருமபுரியில் நாளை (ஜூலை 15) எங்கெல்லாம் மின் தடை: உங்க பகுதி லிஸ்டில் இருக்கா?
தருமபுரியில் லிட்டர் லிட்டராக டீசல் திருட்டு.. ஃபாலோ பண்ணி ஓட்டுநரை மடக்கி பிடித்த லாரி உரிமையாளர்!
தருமபுரியில் லிட்டர் லிட்டராக டீசல் திருட்டு.. ஃபாலோ பண்ணி ஓட்டுநரை மடக்கி பிடித்த லாரி உரிமையாளர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget