மேலும் அறிய

Crime: ஜிம் மாஸ்டர் கத்தியால் குத்திக் கொலை; தருமபுரி அருகே பயங்கரம்

அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தருமபுரி அருகே கால்வாய் வெட்டுவதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ஜிம் மாஸ்டரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் மருத்துவமனை முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
தருமபுரி அடுத்த எட்டிமரத்துபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (26) என்பவருக்கு திருமணம் முடிந்து 2 பெண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் பிரகாஷ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே பாரதிபுரத்தில் ஜிம் பார்லர் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் தனது உறவினர் வெங்கடேஷ் (36) என்பவர் அருகருகே வீடுகள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் பணிகள் நடைபெற்றுள்ளது. அப்பொழுது இருவருக்கும் இடையே கழிவுநீர் கால்வாய் அமைப்பதில், கடந்த இரண்டு மாதமாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த இருவருக்கும் இடையில் சுடுகாடு செல்வதற்கான பாதையிலும் பிரச்சனையில் இருந்து வந்ததாக தெரிகிறது. கடந்த சில மாதங்களாக சுடுகாடு மற்றும் கழிவுநீர் கால்வாய் ஏற்பட்ட தகராறு இருந்து வந்த நிலையில் இன்று குடிபோதையில் இருந்த வெங்கடேஷ், பிரகாசின் மனைவியிடம் வாக்கு வாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பிரகாசின் மனைவி தொலைபேசியில் கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பிரகாஷ், வெங்கடேசிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வெங்கடேஷ் மறைத்து வைத்திருந்த காய்கறிகள் வெட்டும் கத்தியால் சராமரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். அப்போது தடுக்க வந்த பிரகாஷின் மனைவிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

Crime: ஜிம் மாஸ்டர் கத்தியால்  குத்திக் கொலை; தருமபுரி அருகே பயங்கரம்
 
அதனையடுத்து அங்கிருந்த பொது மக்கள் மற்றும் உறவினர்கள் படுகாயமடைந்த பிரகாசை மீட்டு, ஆட்டோவில் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதனையடுத்து பிரகாசின் உடலை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தலைமறைவான கொலை குற்றவாளியை கைது செய்ய வழியுறுத்தி தருமபுரி சேலம் நெடுஞ்சாலையில் பிரகாசின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து கைது செய்வதாக உறுதியளித்ததால், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த வெங்கடேஷை மதிகோண்பாளையம் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் கழிவுநீர் கால்வாய் அமைப்பதில் ஏற்பட்ட பிரச்சினையில், ஜிம் மாஸ்டரை கொலை செய்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

"மியூட் மோடில் திமுக அரசு" தீக்குளித்த விவசாயி.. பொங்கி எழுந்த இபிஎஸ்
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
RCB Victory Parade Stampede: சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மியூட் மோடில் திமுக அரசு" தீக்குளித்த விவசாயி.. பொங்கி எழுந்த இபிஎஸ்
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
RCB Victory Parade Stampede: சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
JEE Advanced 2025 Result: வலுவான கல்வி கட்டமைப்பை இழக்கும் தமிழ்நாடு? ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்ச்சி விகிதத்தில் கடைசி!
JEE Advanced 2025 Result: வலுவான கல்வி கட்டமைப்பை இழக்கும் தமிழ்நாடு? ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்ச்சி விகிதத்தில் கடைசி!
JEE advanced: போலி பெருமித திமுக அரசு; தமிழ்நாடு கடைசியில் இருந்து மூன்றாம் இடம்- அன்புமணி விளாசல்!
JEE advanced: போலி பெருமித திமுக அரசு; தமிழ்நாடு கடைசியில் இருந்து மூன்றாம் இடம்- அன்புமணி விளாசல்!
Trump Vs Xi Jinping: “அவர புடிக்கும், ஆனா..“ சீன அதிபர் குறித்து அமெரிக்க அதிபர் கூறியது என்ன.? ஊசலாடும் பேச்சுவார்த்தை
“அவர புடிக்கும், ஆனா..“ சீன அதிபர் குறித்து அமெரிக்க அதிபர் கூறியது என்ன.? ஊசலாடும் பேச்சுவார்த்தை
ஜூலை 21-ல் கூடுகிறது நாடாளுமன்றம்; மோடி அரசை விட்டுவைக்குமா எதிர்க்கட்சிகள்.? திட்டம் என்ன.?
ஜூலை 21-ல் கூடுகிறது நாடாளுமன்றம்; மோடி அரசை விட்டுவைக்குமா எதிர்க்கட்சிகள்.? திட்டம் என்ன.?
Embed widget