மேலும் அறிய

கோவையில் தந்தங்கள் வெட்டிக் கடத்தப்பட்ட விவகாரம் ; வனப்பகுதியில் மீட்கப்பட்ட தந்தங்கள்..

சுமார் 30 வயது உடைய ஆண் யானையின் இரண்டு தந்தங்களைக் வெட்டி எடுத்து இருப்பதும், யானை உயிரிழந்து 40 நாட்கள் ஆகி இருக்கலாம் என்பதும் தெரியவந்தது.

கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச் சரகம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த வனச் சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளது. மேலும் தற்போது வலசை காலம் என்பதால் கேரள வனப் பகுதியில் இருந்து ஏராளமான யானைகள் இப்பகுதி வழியாக இடம் பெயர்ந்து செல்கின்றன. இந்நிலையில் கடந்த வாரம் போளுவாம்பட்டி வனச் சரகத்திற்கு உட்பட்ட கரியன் படுகை என்ற வனப் பகுதியில்  போளுவாம்பட்டி வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ஒரு  யானை உயிரிழந்தது கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து வனப் பணியாளர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தலைமையிலான வனத்துறையினர் சென்று விசாரணை மேற்கொண்டனர்.


கோவையில் தந்தங்கள் வெட்டிக் கடத்தப்பட்ட விவகாரம் ; வனப்பகுதியில் மீட்கப்பட்ட தந்தங்கள்..

விசாரணையில் உயிரிழந்தது  சுமார் 30 வயது உடைய ஆண் யானை என்பதும் உயிரிழந்த ஆண் யானையின் இரண்டு தந்தங்களைக் வெட்டி எடுத்து இருப்பதும் தெரியவந்தது. மேலும் யானை உயிரிழந்து 40 நாட்கள் ஆகி இருக்கலாம் என்பதும், இறந்த யானையின் உடலினை காட்டுப் பன்றி, முள்ளம் பன்றி போன்ற காட்டு விலங்குகளால் உண்ணப்பட்டு சிதிலமடைந்த நிலையில் எலும்புகள் மட்டுமே அவ்விடத்தில் இருந்ததாகவும் வனத் துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து வனத்துறை மருத்துவர்கள் உயிரிழந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். யானை தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்ட சம்பவம் வேட்டை கும்பல் இந்த பகுதியில் ஊடுருவி யானை தந்த வேட்டையில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்டது குறித்து வனத்துறையினர் வன உயிரின வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 5 தனிக் குழுக்கள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


கோவையில் தந்தங்கள் வெட்டிக் கடத்தப்பட்ட விவகாரம் ; வனப்பகுதியில் மீட்கப்பட்ட தந்தங்கள்..

இந்நிலையில் இன்று வனத்துறை தனிக் குழுவினர் அடர்ந்த வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது யானை இறந்த பகுதியில் இருந்து சுமார் 430 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு முட்புதரில் யானை தந்தங்கள் இருப்பதை பார்த்துள்ளனர். இதையடுத்து யானை தந்தங்களை வனத்துறையினர் கைப்பற்றினர்.


கோவையில் தந்தங்கள் வெட்டிக் கடத்தப்பட்ட விவகாரம் ; வனப்பகுதியில் மீட்கப்பட்ட தந்தங்கள்..

யானை தந்தங்கள் வெட்டி எடுத்தவர்கள் முட்புதரில் தந்தங்களை மறைத்து வைத்திருக்கலாம் என வனத் துறையினர் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை வனத் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்.

https://bit.ly/2TMX27X

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்.

பேஸ்புக் பக்கத்தில் தொடர

https://bit.ly/3AfSO89

ட்விட்டர் பக்கத்தில் தொடர

https://bit.ly/3BfYSi8

யூடிபில் வீடியோக்களை காண

https://bit.ly/3Ddfo32

தலைப்பு செய்திகள்

Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
Coimbatore power cut: கோவையில் (ஜூலை 27) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் (ஜூலை 27) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Coimbatore power cut: கோவையில் நாளை (24-07-2026) எங்கெல்லாம் பவர் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (24-07-2026) எங்கெல்லாம் பவர் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Coimbatore power cut: கோவையில் நாளை (23-07-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (23-07-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Embed widget