மேலும் அறிய

கோவையில் தந்தங்கள் வெட்டிக் கடத்தப்பட்ட விவகாரம் ; வனப்பகுதியில் மீட்கப்பட்ட தந்தங்கள்..

சுமார் 30 வயது உடைய ஆண் யானையின் இரண்டு தந்தங்களைக் வெட்டி எடுத்து இருப்பதும், யானை உயிரிழந்து 40 நாட்கள் ஆகி இருக்கலாம் என்பதும் தெரியவந்தது.

கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச் சரகம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த வனச் சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளது. மேலும் தற்போது வலசை காலம் என்பதால் கேரள வனப் பகுதியில் இருந்து ஏராளமான யானைகள் இப்பகுதி வழியாக இடம் பெயர்ந்து செல்கின்றன. இந்நிலையில் கடந்த வாரம் போளுவாம்பட்டி வனச் சரகத்திற்கு உட்பட்ட கரியன் படுகை என்ற வனப் பகுதியில்  போளுவாம்பட்டி வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ஒரு  யானை உயிரிழந்தது கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து வனப் பணியாளர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தலைமையிலான வனத்துறையினர் சென்று விசாரணை மேற்கொண்டனர்.


கோவையில் தந்தங்கள் வெட்டிக் கடத்தப்பட்ட விவகாரம் ; வனப்பகுதியில் மீட்கப்பட்ட தந்தங்கள்..

விசாரணையில் உயிரிழந்தது  சுமார் 30 வயது உடைய ஆண் யானை என்பதும் உயிரிழந்த ஆண் யானையின் இரண்டு தந்தங்களைக் வெட்டி எடுத்து இருப்பதும் தெரியவந்தது. மேலும் யானை உயிரிழந்து 40 நாட்கள் ஆகி இருக்கலாம் என்பதும், இறந்த யானையின் உடலினை காட்டுப் பன்றி, முள்ளம் பன்றி போன்ற காட்டு விலங்குகளால் உண்ணப்பட்டு சிதிலமடைந்த நிலையில் எலும்புகள் மட்டுமே அவ்விடத்தில் இருந்ததாகவும் வனத் துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து வனத்துறை மருத்துவர்கள் உயிரிழந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். யானை தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்ட சம்பவம் வேட்டை கும்பல் இந்த பகுதியில் ஊடுருவி யானை தந்த வேட்டையில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்டது குறித்து வனத்துறையினர் வன உயிரின வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 5 தனிக் குழுக்கள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


கோவையில் தந்தங்கள் வெட்டிக் கடத்தப்பட்ட விவகாரம் ; வனப்பகுதியில் மீட்கப்பட்ட தந்தங்கள்..

இந்நிலையில் இன்று வனத்துறை தனிக் குழுவினர் அடர்ந்த வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது யானை இறந்த பகுதியில் இருந்து சுமார் 430 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு முட்புதரில் யானை தந்தங்கள் இருப்பதை பார்த்துள்ளனர். இதையடுத்து யானை தந்தங்களை வனத்துறையினர் கைப்பற்றினர்.


கோவையில் தந்தங்கள் வெட்டிக் கடத்தப்பட்ட விவகாரம் ; வனப்பகுதியில் மீட்கப்பட்ட தந்தங்கள்..

யானை தந்தங்கள் வெட்டி எடுத்தவர்கள் முட்புதரில் தந்தங்களை மறைத்து வைத்திருக்கலாம் என வனத் துறையினர் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை வனத் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்.

https://bit.ly/2TMX27X

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்.

பேஸ்புக் பக்கத்தில் தொடர

https://bit.ly/3AfSO89

ட்விட்டர் பக்கத்தில் தொடர

https://bit.ly/3BfYSi8

யூடிபில் வீடியோக்களை காண

https://bit.ly/3Ddfo32

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (09-07-2026) எத்தனை மணி நேரம் பவர் கட் - எங்கெல்லாம்?
கோவையில் நாளை (09-07-2026) எத்தனை மணி நேரம் பவர் கட் - எங்கெல்லாம்?
கோவையில் நாளை (08-07-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (08-07-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவை நீதிமன்றம் அதிரடி: அரசு வழக்கறிஞர்கள் வராததால் ஆட்சியருக்கு ரூ. 62,000 அபராதம்!
கோவை நீதிமன்றம் அதிரடி: அரசு வழக்கறிஞர்கள் வராததால் ஆட்சியருக்கு ரூ. 62,000 அபராதம்!
Coimbatore power cut: கோவை மக்களே அலர்ட்! நாளை (07-07-2026) உங்க பகுதியில் மின்தடை அறிவிப்பு - முழு லிஸ்ட் இதோ!
கோவை மக்களே அலர்ட்! நாளை (07-07-2026) உங்க பகுதியில் மின்தடை அறிவிப்பு - முழு லிஸ்ட் இதோ!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
Embed widget