மேலும் அறிய

கோவையில் தந்தங்கள் வெட்டிக் கடத்தப்பட்ட விவகாரம் ; வனப்பகுதியில் மீட்கப்பட்ட தந்தங்கள்..

சுமார் 30 வயது உடைய ஆண் யானையின் இரண்டு தந்தங்களைக் வெட்டி எடுத்து இருப்பதும், யானை உயிரிழந்து 40 நாட்கள் ஆகி இருக்கலாம் என்பதும் தெரியவந்தது.

கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச் சரகம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த வனச் சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளது. மேலும் தற்போது வலசை காலம் என்பதால் கேரள வனப் பகுதியில் இருந்து ஏராளமான யானைகள் இப்பகுதி வழியாக இடம் பெயர்ந்து செல்கின்றன. இந்நிலையில் கடந்த வாரம் போளுவாம்பட்டி வனச் சரகத்திற்கு உட்பட்ட கரியன் படுகை என்ற வனப் பகுதியில்  போளுவாம்பட்டி வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ஒரு  யானை உயிரிழந்தது கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து வனப் பணியாளர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தலைமையிலான வனத்துறையினர் சென்று விசாரணை மேற்கொண்டனர்.


கோவையில் தந்தங்கள் வெட்டிக் கடத்தப்பட்ட விவகாரம் ; வனப்பகுதியில் மீட்கப்பட்ட தந்தங்கள்..

விசாரணையில் உயிரிழந்தது  சுமார் 30 வயது உடைய ஆண் யானை என்பதும் உயிரிழந்த ஆண் யானையின் இரண்டு தந்தங்களைக் வெட்டி எடுத்து இருப்பதும் தெரியவந்தது. மேலும் யானை உயிரிழந்து 40 நாட்கள் ஆகி இருக்கலாம் என்பதும், இறந்த யானையின் உடலினை காட்டுப் பன்றி, முள்ளம் பன்றி போன்ற காட்டு விலங்குகளால் உண்ணப்பட்டு சிதிலமடைந்த நிலையில் எலும்புகள் மட்டுமே அவ்விடத்தில் இருந்ததாகவும் வனத் துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து வனத்துறை மருத்துவர்கள் உயிரிழந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். யானை தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்ட சம்பவம் வேட்டை கும்பல் இந்த பகுதியில் ஊடுருவி யானை தந்த வேட்டையில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்டது குறித்து வனத்துறையினர் வன உயிரின வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 5 தனிக் குழுக்கள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


கோவையில் தந்தங்கள் வெட்டிக் கடத்தப்பட்ட விவகாரம் ; வனப்பகுதியில் மீட்கப்பட்ட தந்தங்கள்..

இந்நிலையில் இன்று வனத்துறை தனிக் குழுவினர் அடர்ந்த வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது யானை இறந்த பகுதியில் இருந்து சுமார் 430 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு முட்புதரில் யானை தந்தங்கள் இருப்பதை பார்த்துள்ளனர். இதையடுத்து யானை தந்தங்களை வனத்துறையினர் கைப்பற்றினர்.


கோவையில் தந்தங்கள் வெட்டிக் கடத்தப்பட்ட விவகாரம் ; வனப்பகுதியில் மீட்கப்பட்ட தந்தங்கள்..

யானை தந்தங்கள் வெட்டி எடுத்தவர்கள் முட்புதரில் தந்தங்களை மறைத்து வைத்திருக்கலாம் என வனத் துறையினர் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை வனத் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்.

https://bit.ly/2TMX27X

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்.

பேஸ்புக் பக்கத்தில் தொடர

https://bit.ly/3AfSO89

ட்விட்டர் பக்கத்தில் தொடர

https://bit.ly/3BfYSi8

யூடிபில் வீடியோக்களை காண

https://bit.ly/3Ddfo32

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Sengottaiyan on Vijay: “2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
“2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
Trump to Ban Migration: துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
ராட்சசன்
ராட்சசன் "டிட்வா" புயல் வருது... உடனே களத்தில் இறங்குங்க- திமுகவினருக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
Embed widget