மேலும் அறிய

பெரியார் திடல் என் தாய்வீடு.... உலக மொழிகளில் பெரியாரின் சிந்தனைகள் வெளியிடப்படும்.... முதலமைச்சர் ஸ்டாலின்!

ஆண்டுதோறும் பெரியாரின் பிறந்த நாள் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் எனக கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். 

தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

144ஆவது பிறந்தநாள்

பகுத்தறிவுப் பகலவன்,  வைக்கம் வீரர் என்ற பெயர்களால் அறியப்படும் தந்தை பெரியார் தமிழ்நாட்டின் பெரும் இயக்கமான திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்தவர்.

மானத்தையும் அறிவையும் வளர்க்கச் சொல்லி, சாதிய வேறுபாடு, பெண் விடுதலை, தீண்டாமை, சமூக நீதி, மூட நம்பிக்கைகள் ஒழிப்பு என தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக குரல் கொடுத்து வந்த தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்த நாள் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை

இந்நிலையில், முன்னதாக தந்தை பெரியாரின் சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

சென்னை, அண்ணா சாலை, சிம்சன் அருகே உள்ள அவரது சிலைக்கு திமுக நிர்வாகிகளுடன் இணைந்து முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஆண்டுதோறும் பெரியாரின் பிறந்த நாள் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் எனக கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். 

சமூக நீதி உறுதிமொழி

அதன்படி முன்னதாக சென்னை தலைமைச் செயலகத்தில் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற சமூக நீதி உறுதிமொழி ஏற்பு நிகழ்வில், முதலமைச்சர் ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றனர்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ”தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாது, இந்தியாவுக்குமான சமூக நீதி தலைமையகம் பெரியார் திடல்.

உலக மொழிகளில் பெரியாரின் சிந்தனை

 

பெரியார் திடல் எனது தாய் வீடு; இங்கு எப்போது வந்தாலும் புத்துணர்ச்சி பெறுகிறேன். பெரியாரின் சிந்தனைகளை மொழிப்பெயர்த்து உலகின் பல்வேறு மொழிகளில் வெளியிட இருக்கிறோம்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு,  தமிழ்நாட்டில் சமூகநீதி முழுமையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காகத் தமிழ்நாடு அரசால் ஒரு கண்காணிப்புக் குழுவை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். 

”கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூக நீதி அளவுகோல் முறையாக, முழுமையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை இக்குழு கண்காணிக்கும்; வழிகாட்டும்; செயல்படுத்தும். சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு இக்குழு பரிந்துரை செய்யும். இதற்கான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். இதில் அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் இடம்பெறுவார்கள்” என்றும் தெரிவித்திருந்தார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget