மேலும் அறிய
Advertisement
Odisha Train Accident: தமிழ்நாட்டில் காயமடைந்தவர்களுக்கான ஆயத்தம் என்ன? தயார்நிலையில் மருத்துவமனைகள்..
"படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது "
கொல்கத்தாவில் உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. இந்த ரயிலானது ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று இரவு 7 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி அருகில் செல்லும் மற்றொரு தண்டவாளத்தில் விழுந்தது. அடுத்த சில நிமிடங்களில் அதே வழித்தடங்களில் வந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் ரயிலும், சரக்கு ரயில் ஒன்றும் தடம் புரண்ட பெட்டிகள் மீது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் உடனடியாக விரைந்தனர்.
உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்பு பணிகள் 12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. தேசிய, மாநில மீட்பு படையினருடன் விமானப்படையினரும் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். விபத்து நடைபெற்றது இரவு நேரம் என்பதால் கடும் சவால் ஏற்பட்டது. ஆனால் விடிய விடிய நடந்த மீட்பு பணியில் இதுவரை 280 பேர் பலியாகியுள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். A1, A2, B2, B3, B4, B5, B6, B7, B8, B9 ஆகிய பெட்டிகள் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த ரயிலில் சென்னைக்கு வர 867 பேர் முன்பதிவு செய்திருந்தனர். விபத்தில் சிக்கிய பயணிகள் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள தமிழ்நாடு அரசு சார்பிலும், ரயில்வே துறை சார்பிலும் அவசரகால எண்கள் அறிவிக்கப்படுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அமைச்சர்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் அடிப்படையில் தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிவசங்கர், உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
ஒடியா மொழி தெரிந்த மருத்துவர்கள்
ஒடியா மொழி தெரிந்த 2 மருத்துவர்களை இங்கிருந்து விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பி வைக்க தமிழ்நாடு மருத்துவத்துறை திட்டம். தயாரிப்புடன் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக ஓடியா மொழி தெரிந்த மருத்துவர்கள் குறித்த தகவல்களை சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும் காரணத்தினால் ஒடிசாவில் உடற்கூறு ஆய்வுகள் மேற்கொள்வதற்கு காலதாமதம் ஆகும் என்பதால், உடல்களை தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்து உடற்குழாய்வு மேற்கொள்ள திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை ஒட்டி சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனை ராஜீவ் காந்தி, அரசு மருத்துவமனை ஆகியவை தயார் நிலையில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் அருகில் உள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றையும் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
விளையாட்டு
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
for smartphones
and tablets
and tablets
வினய் லால்Columnist
Opinion