மேலும் அறிய

டெலிவரி பொருட்களை கொடுக்க வந்த இடத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆன்லைன் டெலிவரி நபர் கைது.

செல்போனில் சார்ஜ் இல்லை

சென்னை மடிப்பாக்கம் பகுதியில் 27 வயதுடைய பெண் ஒருவர் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மேற்படி பெண் கடந்த 13.05.2025 அன்று மதியம் , ஆன்லைன் மூலம் பொருட்கள் ஆர்டர் செய்துள்ளார். பொருட்களை டெலிவரி செய்ய வந்த நபர் அப்பெண்ணிடம் தனது செல்போனில் சார்ஜ் இல்லை என கூறி சார்ஜ் போட்டு விட்டு, அப்பெண் வீட்டின் சமையல் அறைக்கு சென்ற போது அந்த நபர் அப்பெண்ணிடம் உதவி செய்யட்டுமா எனக் கேட்டுள்ளார்.

சந்தேகப்பட்ட அப்பெண் அவரின் செல்போனை பார்த்தபோது போனில் சார்ஜ் உள்ளதை பார்த்து டெலிவரி நபரை வீட்டை விட்டு வெளியே போக சொல்லியுள்ளார். ஆனால் அந்த நபர் அப்பெண்ணிடம் தவறாக பேசியும், அப்பெண்ணின் உடலை பற்றி பாலியல் ரீதியாக தவறாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

காவல் நிலையத்தில் புகார்

இது குறித்து அவரது டெலிவரி நிர்வாகத்தில் கூறியும் அந்த நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் S-7 மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் , பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

 S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து , மேற்படி குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த கோபிநாத் ( வயது 28 ) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கோபிநாத் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு , நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்

கட்டுமான பணிக்காக வைத்திருந்த இரும்பு கம்பிகளை திருடிய நபர்

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்புகுமார் ( வயது 23 )என்பவர் 18.06.2025 அன்று H-3 தண்டையார்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவில் கொடுத்த புகாரில் , தான் தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணி புரிந்து வருவதாகவும் , தான் பணிபுரியும் கட்டுமான நிறுவனம் , பெருநகர சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் , தண்டையார் பேட்டை பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி மேற்கொண்டு வருவதாகவும் , இதற்கான கட்டுமான பணிக்காக தண்டையார்பேட்டை , சுனாமி குடியிருப்பில் உள்ள காலி இடத்தில் வைத்திருந்த சுமார் 75 கிலோ இரும்பு சுருள்கள் மற்றும் சுமார் 150 கிலோ எடை கொண்ட இரும்பு கம்பிகள் திருடு போயிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். H-3 தண்டையார்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணை செய்து , மேற்படி இரும்பு பொருட்களை திருடிய தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த ராமு (வயது 49 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து மேற்படி இடத்திலிருந்து திருடிய சுமார் 75 கிலோ எடை கொண்ட இரும்பு சுருள்கள் மீட்கப்பட்டது.

விசாரணையில் கைது செய்யப்பட்ட எதிரி ராமு மீது ஏற்கனவே ஒரு குட்கா வழக்கு உள்ளது தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட எதிரி ராமு விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Governor Ravi: மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க தாமதமா.? பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ஆளுநர் மாளிகை
மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க தாமதமா.? பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ஆளுநர் மாளிகை
இப்படி பண்றீங்களே மா.! கோவை பெண் கடத்தலில் ட்விஸ்ட்; காவல்துறை வெளியிட்ட பெண்ணின் விளக்க வீடியோ
இப்படி பண்றீங்களே மா.! கோவை பெண் கடத்தலில் ட்விஸ்ட்; காவல்துறை வெளியிட்ட பெண்ணின் விளக்க வீடியோ
திறன் இயக்கம்: 3 லட்சம் மாணவர்கள் சாதனை! இரண்டாம் கட்டம் மூலம் கற்றல் இடைவெளியை சரிசெய்யும் அரசு!
திறன் இயக்கம்: 3 லட்சம் மாணவர்கள் சாதனை! இரண்டாம் கட்டம் மூலம் கற்றல் இடைவெளியை சரிசெய்யும் அரசு!
Rahul Vs BJP: பீகார் தேர்தலில் திருட்டு மூலம் வெற்றி பெற முயற்சி; ஜென் Z விடமாட்டார்கள்; பாஜக-வை வெளுத்த ராகுல்
பீகார் தேர்தலில் திருட்டு மூலம் வெற்றி பெற முயற்சி; ஜென் Z விடமாட்டார்கள்; பாஜக-வை வெளுத்த ராகுல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Karthik on Vijay | தவெக கூட்டணியில் புது கட்சி!விஜய்க்கு ஆதரவாக கார்த்திக்? பரபரக்கும் அரசியல் களம்
Ajith Supports Vijay | ’’விஜய்க்கு தான் என் SUPPORT’’அஜித் பரபரப்பு விளக்கம் வெளியான திடீர் ஆடியோ
Madhampatti Rangaraj  | ”ஏய் பொண்டாட்டி மிஸ் யூ” கொஞ்சிய மாதம்பட்டி ரங்கராஜ் ட்விஸ்ட் கொடுத்த ஜாய்
Joy vs Shruti| ’’என் புருஷனை விட்டு போ’’ஸ்ருதியை மிரட்டிய ஜாய்!CHATS LEAKED Madhampatti Rangaraj

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Governor Ravi: மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க தாமதமா.? பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ஆளுநர் மாளிகை
மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க தாமதமா.? பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ஆளுநர் மாளிகை
இப்படி பண்றீங்களே மா.! கோவை பெண் கடத்தலில் ட்விஸ்ட்; காவல்துறை வெளியிட்ட பெண்ணின் விளக்க வீடியோ
இப்படி பண்றீங்களே மா.! கோவை பெண் கடத்தலில் ட்விஸ்ட்; காவல்துறை வெளியிட்ட பெண்ணின் விளக்க வீடியோ
திறன் இயக்கம்: 3 லட்சம் மாணவர்கள் சாதனை! இரண்டாம் கட்டம் மூலம் கற்றல் இடைவெளியை சரிசெய்யும் அரசு!
திறன் இயக்கம்: 3 லட்சம் மாணவர்கள் சாதனை! இரண்டாம் கட்டம் மூலம் கற்றல் இடைவெளியை சரிசெய்யும் அரசு!
Rahul Vs BJP: பீகார் தேர்தலில் திருட்டு மூலம் வெற்றி பெற முயற்சி; ஜென் Z விடமாட்டார்கள்; பாஜக-வை வெளுத்த ராகுல்
பீகார் தேர்தலில் திருட்டு மூலம் வெற்றி பெற முயற்சி; ஜென் Z விடமாட்டார்கள்; பாஜக-வை வெளுத்த ராகுல்
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு: இன்றே கடைசி! டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை - தவறினால் என்ன நடக்கும்?
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு: இன்றே கடைசி! டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை - தவறினால் என்ன நடக்கும்?
Trump Vs Modi: “மோடி என் நண்பர், சிறந்த மனிதர், ரஷ்யா கிட்ட எண்ணெய் வாங்குறத நிறுத்திட்டார்“; ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை
“மோடி என் நண்பர், சிறந்த மனிதர், ரஷ்யா கிட்ட எண்ணெய் வாங்குறத நிறுத்திட்டார்“; ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை
Pakistan Vs Afghanistan: ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை, மறுபுறம் வெடித்த மோதல்; பாக்.-ஆப்கன் எல்லையில் பதற்றம்; 5 பேர் பலி
ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை, மறுபுறம் வெடித்த மோதல்; பாக்.-ஆப்கன் எல்லையில் பதற்றம்; 5 பேர் பலி
கோவையில் மீண்டும் பெண் கடத்தல்; பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமா தமிழ்நாடு? ஈபிஎஸ் கேள்வி
கோவையில் மீண்டும் பெண் கடத்தல்; பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமா தமிழ்நாடு? ஈபிஎஸ் கேள்வி
Embed widget