மேலும் அறிய

’பெரியார், மணியம்மை, வீரமணி படங்களுக்கு தாலி அணிவித்து போராட்டம்’ -காஞ்சிபுரத்தில் பெண் கைது

’’கடந்த வாரம் அத்தி வரதர் படத்திற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பெரியார், மணியம்மை, வீரமணி படத்திற்கு தாலி அணிவிக்கப்பட்டுள்ளது’’

ஆண்டுதோறும் இந்து அமைப்பினர் சார்பில் நடைபெற்று வந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் தமிழகம் முழுவதும் உள்ள நகரம் மற்றும் கிராமங்களில் மிக பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மூன்று நாட்கள் வழிபாடு நடத்திய, பின்னர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கும் வழக்கம் இருந்து வந்தது.
 
’பெரியார், மணியம்மை, வீரமணி படங்களுக்கு தாலி அணிவித்து போராட்டம்’ -காஞ்சிபுரத்தில் பெண் கைது
 
இதனிடையே, கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலம் நடத்தவும் தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்து வீட்டில் இருந்தே விநாயகர் சதுர்த்தி வழிபாடுகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால், இதற்கு பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் தடையை மீறி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவோம் எனக் கூறி வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி தடை குறித்து விளக்கம் அளித்துள்ள, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பொது இடங்களில் விநாயகர் வைத்து வழிபடும் சமயத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவ அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாகவே விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி வைக்க அனுமதி மறுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்

’பெரியார், மணியம்மை, வீரமணி படங்களுக்கு தாலி அணிவித்து போராட்டம்’ -காஞ்சிபுரத்தில் பெண் கைது
 
இந்நிலையில் காஞ்சிபுரம் சங்குபாணி விநாயகர் கோயில் அருகே கடந்த 2 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா விற்கு அனுமதி தர வேண்டும் எனக் கோரி இந்து முன்னணி பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில் அருகே பூஜை பொருள் விற்பனை செய்யும் கடை வைத்திருந்த பூபதி என்பவர், அத்தி வரதர் சுவாமி படத்திற்கு செருப்பு அணிவித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த பாஜக, இந்து முன்னணியினர் அவரது கடையை அடித்து உடைத்தனர்.

’பெரியார், மணியம்மை, வீரமணி படங்களுக்கு தாலி அணிவித்து போராட்டம்’ -காஞ்சிபுரத்தில் பெண் கைது
 
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு இருதரப்பினரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாஜகவை சேர்ந்த ஏழு நபர்கள் தற்போது கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் காஞ்சிபுரம் சங்குபாணி விநாயகர் கோவில் அருகே, இன்று சென்னையைச் சேர்ந்த நர்மதா நந்தகுமார் என்ற பெண் அத்திவரதர் படத்திற்கு செருப்பு அணிவதை கண்டித்து,  பெரியார், மணியம்மை, திராவிட கழகத் தலைவர் வீரமணி ஆகியோரின் படத்திற்கு தாலி அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். பெண்ணொருவர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

’பெரியார், மணியம்மை, வீரமணி படங்களுக்கு தாலி அணிவித்து போராட்டம்’ -காஞ்சிபுரத்தில் பெண் கைது
 
இது குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகாஞ்சி போலீசார் நர்மதா நந்தகுமாரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்திக்கு சில நாட்களே உள்ள நிலையில், பெண் ஒருவர் விநாயகர் கோவில் முன் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...
 
வரும் 13ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு- அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget