மேலும் அறிய

திருவாரூர் கமலாலயக் குளத்தில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த பலரும் இது மிகவும் ஆபத்தான குளம் இதுபோன்று விளையாட வேண்டாம் என்று அறிவுறுத்தியும் அதையும் மீறி சிறுவர்கள் குளத்தில் குளித்துள்ளனர்

திருவாரூர் அருகே  திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள உள்ள புலிவலம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த அன்பழகன் என்பவரின் மகன் 14 வயதுடைய சக்திவேல். இவர் முடி வெட்டி விட்டு தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு சொந்தமான கமலாலய குளத்தில் குளித்துள்ளார். இந்த நிலையில் சிறுவர்கள் மூவரும் சுமார் இரண்டு மணி நேரமாக  நேரமாக குளத்தில் குதித்து  விளையாடியபடி  குளித்துள்ளனர். அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த பலரும் இது மிகவும் ஆபத்தான குளம் இதுபோன்று விளையாட வேண்டாம் என்று அறிவுறுத்தியும் அதையும் மீறி சிறுவர்கள் குளத்தில் விளையாடியபடி குளித்துள்ளனர். இந்த நிலையில் சக்திவேல் என்கிற சிறுவன் மட்டும் நீரில் மூழ்கி உள்ளான். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சக்திவேலை அரை மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்டு முதலுதவி அளித்தனர்.

திருவாரூர் கமலாலயக் குளத்தில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
அதனையடுத்து ஆம்புலன்ஸ் வருவதற்குள் தாமதிக்காமல் அங்கிருந்த ஆட்டோ ஒன்றில் சக்திவேலை ஏற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை  அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து வழக்குப் பதிவு செய்த திருவாரூர் நகர காவல் துறையினர் சிறுவன் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நகர காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான கமலாலய குளம் என்பது மிகவும் ஆழமானது. மேலும் இந்த குளத்தின் அடியில் 64 தீர்த்தக் கிணறுகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த குளத்தில் துணி துவைக்கவோ குளிக்கவோ அனுமதி இல்லை என்று நகராட்சி சார்பில் அறிவிப்பு பலகைகள் குளத்தை சுற்றிலும் வைக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் கமலாலயக் குளத்தில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
 
அதுமட்டுமில்லாமல் முக்கிய அமாவாசை தினங்களில் திதி கொடுப்பது போன்ற நிகழ்வுகள் இந்தக் குளக்கரையில் நடப்பதால் இரும்பு கம்பிகள் படித்துறையில் பதிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள நகராட்சி நிர்வாகம் செய்துள்ளது. ஆனால் அதனையும் மீறி பலர் இந்தக் குளத்தில் குளித்து வருகின்றனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்படுவது என்பது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. குறிப்பாக சிறுவர்கள் வயதானவர்கள் இந்தக் குளத்தில் இறங்கவே கூடாது என்று ஊராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தும்,அதனை மீறி சிறுவர்கள் குளத்தில் குளித்து வருகின்றனர். இதுபோன்ற உயிரிழப்புகள் இனிமேலும் ஏற்படாத வண்ணம் தகுந்த முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ள வேண்டுமென திருவாரூர் நகர மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
 

தலைப்பு செய்திகள்

“சினிமாவில் ஹீரோ... அரசியலில் வில்லன்!” – முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்த டிடிவி. தினகரன்
“சினிமாவில் ஹீரோ... அரசியலில் வில்லன்!” – முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்த டிடிவி. தினகரன்
வேளாங்கண்ணி மாதா திருவிழா... பக்தர்களுக்கு ரயில் வசதி: தஞ்சாவூர் வழித்தடம் வழியாகவும் இயக்க எதிர்பார்ப்பு
வேளாங்கண்ணி மாதா திருவிழா... பக்தர்களுக்கு ரயில் வசதி: தஞ்சாவூர் வழித்தடம் வழியாகவும் இயக்க எதிர்பார்ப்பு
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
ஆகஸ்ட் 26-ல் டாஸ்மாக் இயங்குமா? மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு இதுதான்..
ஆகஸ்ட் 26-ல் டாஸ்மாக் இயங்குமா? மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு இதுதான்..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
தப்பிச்சு வந்த 2 பேர்; இல்லைன்னா.. உதயநிதி, ஈபிஎஸ்ஸை மறைமுகமாக கிண்டலடித்த அமைச்சர் செங்கோட்டையன்
தப்பிச்சு வந்த 2 பேர்; இல்லைன்னா.. உதயநிதி, ஈபிஎஸ்ஸை மறைமுகமாக கிண்டலடித்த அமைச்சர் செங்கோட்டையன்
Vijayabaskar election case : 5 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை.! விஜயபாஸ்கருக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்- நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்
5 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை.! விஜயபாஸ்கருக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்- நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்
Iran Vs US Hormuz: “பொருளாதார போர் தொடர்ந்தா, ஒரு துளி எண்ணெய் கூட...“ அமெரிக்காவுக்கு ஈரான் பயங்கர எச்சரிக்கை
“பொருளாதார போர் தொடர்ந்தா, ஒரு துளி எண்ணெய் கூட...“ அமெரிக்காவுக்கு ஈரான் பயங்கர எச்சரிக்கை
Udhayanidhi Stalin: “அற்ப அரசியலுக்காக விமான நிலைய திட்டத்தை கைவிட்டால், அண்டை மாநிலங்களுக்கே லாபம்“ உதயநிதி ஸ்டாலின்
“அற்ப அரசியலுக்காக விமான நிலைய திட்டத்தை கைவிட்டால், அண்டை மாநிலங்களுக்கே லாபம்“ உதயநிதி ஸ்டாலின்
US Iran War: “அடக்குமுறை ஈரான் அரசுக்கு ஆதவான எல்லா பொருளாதார உயிர்நாடியும் துண்டிக்கப்படும்''-செல்றது யார் தெரியுமா.?
“அடக்குமுறை ஈரான் அரசுக்கு ஆதவான எல்லா பொருளாதார உயிர்நாடியும் துண்டிக்கப்படும்''-செல்றது யார் தெரியுமா.?
Stalin vs Vs Babu : நான் தான் வெற்றி பெற்றேன்.! வி.எஸ்.பாபுவிற்கு ஷாக் கொடுத்த ஸ்டாலின்- நீதிமன்றத்தில் திடீர் திருப்பம்
நான் தான் வெற்றி பெற்றேன்.! வி.எஸ்.பாபுவிற்கு ஷாக் கொடுத்த ஸ்டாலின்- நீதிமன்றத்தில் திடீர் திருப்பம்
பரந்தூர் ரத்து: பின்னோக்கிச் செல்லும் அபாயம்; புது விமான நிலைய இடத்தை விரைந்து கண்டறியக் கோரிக்கை!
பரந்தூர் ரத்து: பின்னோக்கிச் செல்லும் அபாயம்; புது விமான நிலைய இடத்தை விரைந்து கண்டறியக் கோரிக்கை!
Embed widget