கடலூர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு! வழக்கறிஞர்களுக்கு அரிய வாய்ப்பு, உடனே விண்ணப்பிக்கவும்!
கடலுார் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கி வரும் சட்ட உதவி எதிர் பாதுகாப்பு முகமை அலுவலகத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

கடலூர்: கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கி வரும் சட்ட உதவி எதிர் பாதுகாப்பு முகமை அலுவலகத்தில்உள்ள காலி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து கடலுார் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுபத்திரா தேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கி வரும் சட்ட உதவி எதிர் பாதுகாப்பு முகமை அலுவலகத்தில் பணிபுரிய (தற்காலிகம்)
- தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர்-1 (மதிப்பூதியம் மாதம் 70 ஆயிரம் ரூபாய்)
- துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர்-2 (மதிப்பூதியம் மாதம் 40 ஆயிரம் ரூபாய்)
- உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர்-1 (மதிப்பூதியம் மாதம் 25 ஆயிரம் ரூபாய்)
- அலுவலக உதவியாளர் -1 (மதிப்பூதியம் மாதம் 15 ஆயிரம் ரூபாய்) ஆகிய பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அலுவலக உதவியாளர் பதவியை தவிர்த்து தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் கடலுார் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் பணிபுரியும் குறைந்தது 10 ஆண்டுகள் குற்றவியல் வழக்குகளில் வழக்காடிய அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்களும், துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு குற்றவியல் வ ழக்குகளில் 7 ஆண்டுகள் வழக்காடிய அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்களும், உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு குற்றவியல் வழக்குகளில் 3 ஆண்டுகள் வழக்காடிய அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்களும் விண்ணப்பிக்கலாம்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், கடலுார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தின் https:// cuddalore.dcourts.gov.in/என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 25ம் தேதி, மாலை 5 மணிக்குள் தலைவர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, நீதிமன்ற வளாகம், கடலுார் என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவே அனுப்பி வைக்கலாம்.
சட்டப்பணிகள் ஆணைக்குழுக்கள் கூட்டம் - (The Legal Services Authorities Act)
இந்திய நாடு ஜனநாயக நாடு. சமநீதியையும் இலவச சட்ட உதவிகளையும் வழங்குவது அரசின் கடமையாகக் கருதப்படுகிறது. இத்தகவலை அரசியலமைப்புச் சட்டம் 39A உறுதிப்படுத்துகிறது. இச்செயல்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்காக 26.9.1980 ஆம் ஆண்டு மத்திய அரசால் சட்ட உதவித் திட்டங்கள் அமல்படுத்தும் குழு (Committee for Implementation of Legal Aid Schemes - CILAS) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
மக்களுக்காக கடையாற்றும் உதவித்திட்டங்களை நிறைவேற்றும் சட்ட உதவி அமைப்புகள் தன்னார்வ அமைப்புகளாக இருந்த காரணத்தால் இவற்றை முறைப்படுத்தி சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களை உருவாக்கம் நோக்கத்தோடு சட்டப்பணிகள் ஆணைக்குழுக்கள் சட்டம் 1987ல் நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டத்தின் மூலமாக மூன்று சட்டப்பணி ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன.
சட்டப்பணி ஆணைக்குழுக்கள் - மூன்று
1) மத்திய சட்டப்பணிகள் ஆணைக்குழுக்கள்
2) மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுக்கள்
3) மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுக்கள்





















