மேலும் அறிய

மின்வாரியத்தில் பணி வாய்ப்பு...10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும்!

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு திருவாரூர் மாவட்டம் துர்காலயா பகுதி மின்சார விநியோக வட்டத்தில் பணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தொழில்பயிற்சி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளவும்.

மத்திய தொழிற்பயிற்சி மேம்பாட்டு திட்டம் (National Apprenticeship promotion scheme) என்பது கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இளைஞர்களுக்கு பல்வேறு தொழிற் பயிற்சிகளை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் அப்ரண்டிஸாகப் பணிக்கு சேரும் நபர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. குறிப்பாக NAPS மூலம் போக்குவரத்து, மின்வாரியம் என பல்வேறு துறைகளில் அவ்வப்போது பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மத்திய தொழிற்பயிற்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மின்வாரிய துறையில் பயிற்சிப்பெறுவதற்காக வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்வாரிய துறையில் அப்ரன்டிஸ் ஆவதற்கான தகுதிகள்:

கல்வித்தகுதி - இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மத்திய அல்லது  மாநில அரசு பாடத்திட்டங்களின் படி பத்தாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

இதோடு இப்பணிகளில் சேர்வதற்கு எந்தவிதமான பணி முன் அனுபவமும் தேவையில்லை என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு- உச்சபட்ச வயது வரம்பு எதுவும் கிடையாது.

காலிப்பணியிடங்கள் – 5

விண்ணப்பிக்கும் முறை:

எனவே மேற்கண்ட தகுதியுடையவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/6167ca401cc9256f3a356fd9 என்ற இணையப்பக்கத்திற்கு சென்று கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் சரியாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு 16 முதல் 23 மாதங்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை: மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அடிப்படை தேர்வு மற்றும் நேர்காணல் எதுவும் கிடையாது. தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு திருவாரூர் மாவட்டம் துர்காலயா பகுதி மின்சார விநியோக வட்டத்தில் பணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விபரம் – மின்வாரியத்துறையில் பணிபுரிய தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 7 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூபாய் 8 ஆயிரத்து 50 என சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் மின்வாரிய துறையில் பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் உடனடியாக இப்பணிக்கு விண்ணப்பித்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஆறு நாள் வேலைநாள்களாக இருக்கும் எனவும், மத்திய அரசின் தொழில் பயிற்சி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெறும் அனைத்து சலுகைகளும் கிடைக்கும் எனவும் வேலைவாய்ப்பு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்துக்கொள்ளுங்கள்…

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திருநெல்வேலி இளைஞர்களே, ராணுவத்தில் சேர ஒரு பொன்னான வாய்ப்பு! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது தெரியுமா?
திருநெல்வேலி இளைஞர்களே, ராணுவத்தில் சேர ஒரு பொன்னான வாய்ப்பு! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது தெரியுமா?
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இராணுவத்தில் சேர ஒரு சூப்பர் வாய்ப்பு.. ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியீடு- உடனே விண்ணப்பியுங்கள்!
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இராணுவத்தில் சேர ஒரு சூப்பர் வாய்ப்பு.. ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியீடு- உடனே விண்ணப்பியுங்கள்!
RRB NTPC தேர்வு முடிவுகள் எப்போது? 18 மாதங்களாக காத்திருக்கும் தேர்வர்கள்! ட்ரெண்டாகும் கோரிக்கை!
RRB NTPC தேர்வு முடிவுகள் எப்போது? 18 மாதங்களாக காத்திருக்கும் தேர்வர்கள்! ட்ரெண்டாகும் கோரிக்கை!
அரசு ஊழியர்களுக்கு 30% ஊதியம் குறைப்பா? திமுக தொடர்ந்தால் இங்கும் பேராபத்து- அன்புமணி எச்சரிக்கை!
அரசு ஊழியர்களுக்கு 30% ஊதியம் குறைப்பா? திமுக தொடர்ந்தால் இங்கும் பேராபத்து- அன்புமணி எச்சரிக்கை!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’’அடித்துக்கொள்ளும் காங்கிரஸ் தலைவர்கள், முட்டாள்தனம்’’ கார்ட்டூன் போட்டு விமர்சித்த பிரவீன் சக்ரவர்த்தி
’’அடித்துக்கொள்ளும் காங்கிரஸ் தலைவர்கள், முட்டாள்தனம்’’ கார்ட்டூன் போட்டு விமர்சித்த பிரவீன் சக்ரவர்த்தி
TTV Dinakaran: 3 அமைச்சர் தொகுதிகளில் களமிறங்கும் அமமுக வேட்பாளர்கள் யார்? 11 பேர் பட்டியல் வெளியீடு- லிஸ்ட்!
TTV Dinakaran: 3 அமைச்சர் தொகுதிகளில் களமிறங்கும் அமமுக வேட்பாளர்கள் யார்? 11 பேர் பட்டியல் வெளியீடு- லிஸ்ட்!
Sundar C: தேர்தல் களத்தில் குதித்த சுந்தர்.சி.. எந்த கட்சி சார்பில், எந்த தொகுதியில் போட்டி? 
Sundar C: தேர்தல் களத்தில் குதித்த சுந்தர்.சி.. எந்த கட்சி சார்பில், எந்த தொகுதியில் போட்டி? 
IPL 2026: ஐபிஎல் போட்டியில் தோனி விளையாட மாட்டார் - சிஎஸ்கே அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
IPL 2026: ஐபிஎல் போட்டியில் தோனி விளையாட மாட்டார் - சிஎஸ்கே அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
KP Sharma Oli: அதாம்லே வர்கீசு.. நேபாளம் முன்னாள் பிரதமர் கைது.. பதவியேற்ற மறுநாளே பாலேந்திர ஷா சம்பவம்!
KP Sharma Oli: அதாம்லே வர்கீசு.. நேபாளம் முன்னாள் பிரதமர் கைது.. பதவியேற்ற மறுநாளே பாலேந்திர ஷா சம்பவம்!
IPL 2026 RCB vs SRH: இன்று முதல் ஐபிஎல் திருவிழா.. பெங்களூரு - ஹைதராபாத் மோதல்.. யார் கெத்து?
IPL 2026 RCB vs SRH: இன்று முதல் ஐபிஎல் திருவிழா.. பெங்களூரு - ஹைதராபாத் மோதல்.. யார் கெத்து?
Sundar C: எதிரெதிர் கட்சி.. நமக்கு செட்டாகாது.. கமல் -ரஜினி படத்தில் சுந்தர்.சி விலக காரணம் இதுதானா?
Sundar C: எதிரெதிர் கட்சி.. நமக்கு செட்டாகாது.. கமல் -ரஜினி படத்தில் சுந்தர்.சி விலக காரணம் இதுதானா?
Jothimani MP: தொண்டர்கள் உழைப்பை தின்னும் சிலர்.. பரபரப்பு ட்வீட்.. யாரை சொல்கிறார் ஜோதிமணி?
Jothimani MP: தொண்டர்கள் உழைப்பை தின்னும் சிலர்.. பரபரப்பு ட்வீட்.. யாரை சொல்கிறார் ஜோதிமணி?
Embed widget