மேலும் அறிய

மின்வாரியத்தில் பணி வாய்ப்பு...10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும்!

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு திருவாரூர் மாவட்டம் துர்காலயா பகுதி மின்சார விநியோக வட்டத்தில் பணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தொழில்பயிற்சி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளவும்.

மத்திய தொழிற்பயிற்சி மேம்பாட்டு திட்டம் (National Apprenticeship promotion scheme) என்பது கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இளைஞர்களுக்கு பல்வேறு தொழிற் பயிற்சிகளை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் அப்ரண்டிஸாகப் பணிக்கு சேரும் நபர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. குறிப்பாக NAPS மூலம் போக்குவரத்து, மின்வாரியம் என பல்வேறு துறைகளில் அவ்வப்போது பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மத்திய தொழிற்பயிற்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மின்வாரிய துறையில் பயிற்சிப்பெறுவதற்காக வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்வாரிய துறையில் அப்ரன்டிஸ் ஆவதற்கான தகுதிகள்:

கல்வித்தகுதி - இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மத்திய அல்லது  மாநில அரசு பாடத்திட்டங்களின் படி பத்தாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

இதோடு இப்பணிகளில் சேர்வதற்கு எந்தவிதமான பணி முன் அனுபவமும் தேவையில்லை என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு- உச்சபட்ச வயது வரம்பு எதுவும் கிடையாது.

காலிப்பணியிடங்கள் – 5

விண்ணப்பிக்கும் முறை:

எனவே மேற்கண்ட தகுதியுடையவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/6167ca401cc9256f3a356fd9 என்ற இணையப்பக்கத்திற்கு சென்று கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் சரியாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு 16 முதல் 23 மாதங்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை: மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அடிப்படை தேர்வு மற்றும் நேர்காணல் எதுவும் கிடையாது. தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு திருவாரூர் மாவட்டம் துர்காலயா பகுதி மின்சார விநியோக வட்டத்தில் பணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விபரம் – மின்வாரியத்துறையில் பணிபுரிய தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 7 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூபாய் 8 ஆயிரத்து 50 என சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் மின்வாரிய துறையில் பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் உடனடியாக இப்பணிக்கு விண்ணப்பித்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஆறு நாள் வேலைநாள்களாக இருக்கும் எனவும், மத்திய அரசின் தொழில் பயிற்சி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெறும் அனைத்து சலுகைகளும் கிடைக்கும் எனவும் வேலைவாய்ப்பு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்துக்கொள்ளுங்கள்…

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.