Karthigai Deepam: சாமுண்டீஸ்வரிக்கு தீரா சந்தேகம்! மருமகனுக்கு புது மனைவி தேடும் மாமியார்!
Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வர இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி ரேவதியின் கம்பெனிக்கு வர முடிவெடுத்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சாமுண்டீஸ்வரிக்கு தீராத சந்தேகம்:
அதாவது சாமுண்டீஸ்வரி ரேவதியின் கம்பெனிக்கு வந்து எம்டி-ஐ சந்திக்க உட்கார்ந்து இருக்க இளையராஜா இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கார்த்திக்கிற்கு தகவல் கொடுக்க பழைய பாஸை வரவைத்து சமாளிக்கின்றனர். பிறகு சாமுண்டீஸ்வரி நாளைக்கு ஒரு பரிகார பூஜை இருக்கு அதனால் ரேவதிக்கு லீவ் வேண்டும் என்று கேட்டு கிளம்பி செல்கிறாள்.
வெளியே வந்த சாமுண்டீஸ்வரிக்கு இன்னும் சந்தேகம் இருக்க திடீரென கார்த்திக் ஆபீஸிலிருந்து வெளியே கிளம்பி செல்ல இதை சாமுண்டீஸ்வரி பார்த்து ஷாக் ஆகிறாள். பிறகு பிரியா வெளியே வர அவளை தனியாக அழைத்து நீ கார்த்தியை அடைய நான் உனக்கு உதவி செய்கிறேன்.
பிரியாவுடன் டீல்:
என் பொண்ணு ரேவதி அவனை நெருங்கவே விடாமல் பாத்துக்க வேண்டியது உன்னுடைய பொறுப்பு என்று டீல் பேச பிரியாவும் இதற்கு சம்மதம் செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
ட்ரெண்டிங் செய்திகள்





















