Gundu Kalyanam in TV Serial: விஜய் டிவியில் எண்ட்ரி.. பிரபல நடிகரின் சீரியலில் குண்டு கல்யாணம்..!
காமெடி நடிகர் குண்டு கல்யாணம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் சீரியலில் நடிக்க இருப்பதாக அந்த சீரியலில் நடித்து வரும் செந்தில் தெரிவித்துள்ளார்.
காமெடி நடிகர் குண்டு கல்யாணம் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடிக்க இருப்பதாக அந்த சீரியலில் நடித்து வரும் செந்தில் தெரிவித்துள்ளார்.
1979 ஆம் ஆண்டு ‘மழலை பட்டாளம்’ என்ற படத்தில் அறிமுகமானவர் குண்டு கல்யாணம். 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் ரஜினி உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தீவிர அதிமுக தொண்டரான குண்டு கல்யாணம், தேர்தல் நேரத்தில் அதிமுக தொண்டர்களுக்காக பிரசாரம் செய்து வந்தார். ஒரு கட்டத்தில் சினிமாவை கைவிட்ட குண்டு கல்யாணம் கட்சி பணிகளில் கவனம் செலுத்தினார். இந்த நிலையில் அண்மையில் சீறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சைக்காக நடிகர்கள் மற்றும் அரசியல் வாதிகளிடம் உதவி கோரினார்.
இது குறித்து பேசியிருந்த குண்டு கல்யாணம், “ சினிமாவை விட்டு விலகியதற்காக மிக வருத்தப்படுகிறேன். கட்சிக்காக அப்படி உழைத்தேன். ஆனால் எனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. உடல்நிலை பாதிக்கப்பட்ட போது, எனக்கு ஓபிஎஸ் -தான் உதவி செய்தார். உதவிக்காக கட்சியிடம் சென்ற என் மகளை கட்சியினர் அலைக்கழித்தனர்.” என்று பேசினார்.
மேலும் பேசிய அவர், மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசையாக இருக்கிறது. ரஜினி போன்ற நடிகர்கள் உதவி செய்யாவிட்டாலும் பராவாயில்லை. வாய்ப்பையாவது ஏற்படுத்தி கொடுக்கலாம். தற்போதைய இளம் இயக்குநர்கள் நான் மீண்டும் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்” என்று பேசினார்.
இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் தற்போது குண்டு கல்யாணத்திற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது குறித்தான அறிவிப்பை நடிகர் செந்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் குண்டு கல்யாணம் சாருடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மாறன் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான காட்சிகளை விஜய் டிவியில் பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets