மேலும் அறிய

Ponniyin selvan: காதலின் ஏழு நிலைகள்.. எதுவும் தெரியாமல் மியூசிக் போட்ட ஏ.ஆர்.ரஹ்மான்.. ‘தில் சே’ உருவான கதை!

’தில் சே’ பாடல் உருவானது எப்படி என்று மணிரத்னமும் ஏ.ஆர்.ரஹ்மானும் பகிர்ந்து இருக்கிறார்கள்.

’தில் சே’ பாடல் உருவானது எப்படி என்று மணிரத்னமும் ஏ.ஆர்.ரஹ்மானும் பகிர்ந்து இருக்கிறார்கள். 

ஷாருக்கான், மனிஷா கொய்ராலா நடிப்பில் கடந்த 1998 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்  ‘தில் சே’. தமிழில்  உயிரே என்ற பெயரில் வெளியான இந்தப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக படத்தில் இடம்பெற்ற ‘தில் சே’ மிகப்பெரிய ஹிட் அடித்ததோடு, இன்று வரை ஒரு கிளாசிக் பாடலாக இருக்கிறது. அந்தப்பாடல் உருவாக்கம் குறித்து மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பகிர்ந்து உள்ளனர்,

‘தில் சே’ பாடல் உருவாக்கம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் பேசும் போது, “ மணிரத்னம் எனக்கு பாடல் பற்றி எதுவும் சொல்லவில்லை. என்னிடம் கதையை சொல்ல மாட்டேன் என்று கூறிய அவர், காதலின் ஏழு நிலைகளை இசையாக தருமாறு சொன்னார். அவர் என்னிடம் அவ்வளதான் சொன்னார்.  நானும் ஓகே என்றேன். அவ்வளவுதான் அந்த ஒட்டுமொத்த பாடலுக்கான இன்புட்.

அவர் என்னிடம் கதையை சொல்லாதது என்னை இன்னும் அதிகமாக உழைக்க வைத்தது. இது உண்மையில் எங்கள் அனைவரையும் அடுத்தக்கட்டத்திற்கு உந்தி தள்ளியது. அதைத்தான் இப்போது சிறந்த ஒலிப்பதிவுகளில் ஒன்றாக மக்கள் உணர்கிறார்கள். இது ஒரு உத்வேக அனுபவம்.” என்றார். 

இது குறித்து மணிரத்னம் பேசும் போது, “  அது பாடலாசிரியராக கூட இருக்கலாம். நீங்கள் அவர்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லும் போது, அதற்குள் அவர்கள் கட்டுப்பட்டு விடுவார்கள். அவர்களிடம் இதுதான் வேண்டும் என்று சொல்லாமல் சுருக்கமாக உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை சொல்லும் போது,பின்னர் அது உருவாகிவிடும்” என்று பேசினார். 

 


கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள சரித்திர காவிய திரைப்படமான "பொன்னியின் செல்வன்" திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு இருக்கிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கும் இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். 

இந்தப்படத்தின் பிரோமோஷனின் ஆரம்பமாக படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து படத்தில் இருந்து போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. அதனைத்தொடர்ந்து படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. ஆனால் டீசர் ரசிகர்களை  பெரிதாக கவரவில்லை. அதனைத்தொடர்ந்து  'பொன்னி நதி' பாடல் வெளியிடப்பட்டது.  

இந்தப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சோழா சோழா பாடல் வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலக ஜாம்பவான்களாக இருக்கும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டனர். ட்ரெய்லர் மக்களுக்கு பிடித்துப்போன அதே வேகத்தில் பிரோமோஷனை ஆரம்பித்தது பொன்னியின் செல்வன் படக்குழு. 

சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த படக்குழு, தொடர்ந்து ஹைதராபாத், மும்பை, டெல்லி என பறந்தது. அது தொடர்பான புகைப்படங்களும், வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலானது. இதற்கிடையே படப்பிடிப்பு சம்பந்தமான போட்டோக்களும் இணையத்தில் வைரலானது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mallikarjun Kharge Fainted : மயங்கி விழுந்த கார்கே!Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 30:  தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Vanniarasu:
Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
தொடரும் கட்டப்பஞ்சாயத்துகள் ; ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம் - தாக்குதலுக்கு ஆளான அவலம்...!  
மயிலாடுதுறை அருகே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டை சுற்றி வேலி அமைத்த அவலம்.
ஒரே ஒரு போன் கால், அரசு மருத்துவமனைக்கு விரைந்த ஆட்சியர்; இதுதான் விஷயம்..!
வலியால் துடித்த கர்ப்பிணி, தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்து ஆட்சியர் எடுத்த நடவடிக்கை.
Embed widget