மேலும் அறிய

கச்சத்தீவை மீட்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - அன்புமணி ராமதாஸ்

கடந்த 50 ஆண்டுகளில் திமுக, காங்கிரஸ் என்ன செய்தது. திமுக ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் கச்சத்தீவை மீட்போம் மீட்போம் என்று தான் கூறுகிறது.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து அணைக்கட்டில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாமாக தலைவர் அன்புமணி பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில்,

மகளிருக்கான உரிமை தொகை என ஆயிரத்தை கொடுத்துவிட்டு ஸ்டாலின், 1924 ல் இருக்கார் போல ஆனா இது 2024. இங்கு உள்ள ஒரு வேட்பாளர் பெண்களைப் பார்த்து  'பேரன் லவ்லி' போட்டு பல பலனு இருக்கீங்களா என கேட்கிறார். எங்கள் பெண்களைப் பார்த்தால் உங்களுக்கு எப்படி தெரிகிறது. இவர்கள் ஆட்சிக்கு வந்து பாலாற்றுக்கு சனி பிடித்துவிட்டது. பாலாற்றில் தண்ணியும் இல்லை மணலும் இல்லை. வெள்ளையன் அணை கட்டினான் இந்த கொள்ளை காரர்கள் எதுவும் செய்யவில்லை. உங்களால் பாலாற்றில் உங்க சொந்த செலவில் தடுப்பணை கட்ட வேண்டும் அதை நான் என் கையால் திறக்க வேண்டும் இதை என்னோட கோரிக்கையாக ஏ.சி.சண்முகத்துக்கு நான் கோரிக்கையாக வைக்கிறேன்.


கச்சத்தீவை மீட்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - அன்புமணி ராமதாஸ்

கூட்டணியில் பாமாக இருந்தாலும்  எள் அளவும் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம்

எந்த கூட்டணியில் பாமாக இருந்தாலும் எங்கள் கொள்கையை எள் அளவும் விட்டுக் கொடுக்க மாட்டோம், இங்கு கம்யூனிஸ்டுடன் கூட்டணி வைத்தவர்கள் கேரளாவில் அடித்துக் கொள்கிறார்கள். ஒரு முரண்பட்ட கூட்டணி அது, நாங்கள் தமிழகத்தின் நலனுக்காக, பெண்களின் நலனுக்காக, சமூக நீதியை காக்க கூட்டணி அமைக்க கூடாதா ஒன்று சேரக்கூடாதா?. தேர்தல் முடிந்தவுடன் ஒரு வித்தியாசமான அணுகுமுறையை எங்களிடம் நீங்கள் பார்க்க முடியும், தமிழ்நாட்டை பெயர் மாற்றி விட்டார்கள் குடிகார நாடு என எங்கு பார்த்தாலும் சாராயம் போதை கஞ்சா என உள்ளது என்று கூறினார்.


கச்சத்தீவை மீட்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - அன்புமணி ராமதாஸ்

பின்னர் அன்புமணி அளித்த பேட்டியில்,

மத்திய அரசு தமிழகத்திற்கு கொடுத்த நாலாயிரத்து ஐநூறு கோடி முதலில் என்ன ஆனது அதற்கு பதில் சொல்ல வேண்டும். மூன்றரை லட்சம் பட்ஜெட் போடுகிறீர்களே உங்களால் ஏன் வெள்ள நேரத்தில், வறட்சி நேரத்தில், பேரிடர் நேரத்தில் நிதி ஒதுக்கி கொடுக்க முடியவில்லை அப்படி என்ன ஆட்சி நடத்துகிறீர்கள். நாங்கள் இந்த கூட்டணியில் இருந்து நிச்சயமாக மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதியை வாங்கி கொடுப்போம் இது எங்களுடைய கடமை. கச்சத்தீவு விவகாரம் ஏதோ தேர்தலுக்காக கொண்டுவரப்படவில்லை, தமிழக மீனவர்கள் பிரச்சனை இது. கடந்த 50 ஆண்டுகளில் 800 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். 6100 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள், 1200 படகுகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்குக் காரணமே காங்கிரசும், திமுகவும் தான். இதற்கு தீர்வு கொண்டு வர பிரதமர் மோடியால் மட்டுமே முடியும்.


கச்சத்தீவை மீட்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - அன்புமணி ராமதாஸ்

திமுக மத்திய அரசை ஒரு எதிரி போக்கோடு பார்க்கிறது

காங்கிரஸ் மற்றும் திமுகவால் முடியாது திமுகவின் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் கச்சத்தீவை மீட்போம் கச்சத்தீவை மீட்போம் என குறிப்பிடுகிறார்கள். அதனால்தான் தற்போது கச்சத்தீவு பேசுபொருள் ஆகியுள்ளதை ஆரோக்கியமான விவாதமாக பார்க்கிறேன் என்றார். மத்திய அரசு சிறப்பு நிதி கொடுக்காதது குறித்து தமிழக அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது குறித்து கேட்டதற்கு அது அரசியல் ஆதாயத்திற்காக செய்வது என அன்புமணி பதிலளித்தார். திமுக மத்திய அரசை ஒரு எதிரி போக்கோடு பார்க்கிறது. நண்பராக பார்க்க விட்டாலும் கூட நல்ல போக்கோடு பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.

தலைப்பு செய்திகள்

Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Embed widget