மேலும் அறிய

விளையாட்டில் ஆர்வம் கொண்ட மாணவர்களை திமுக அரசு வேலைக்காரர்கள்போல நடத்துவதா?- அதிமுக கண்டனம்‌

விளையாட்டில் ஆர்வம் கொண்ட மாணவர்களை திமுக அரசு வேலைக்காரர்கள்போல நடத்துவதாக அதிமுக கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. ‌

இதுகுறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்‌ தலைவரும் முன்னாள்‌ அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தெரிவித்து உள்ளதாவது:

''தமிழத மாணவ, மாணவிகள்‌ அகில இந்திய அளவிலும்‌, உலக அளவிலும்‌விளையாட்டில்‌ சிறந்து விளங்க வேண்டும்‌ என்பதற்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ 30 ஆண்டுகால ஆட்சிகளில்‌ பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டன. மற்ற மாநிலங்களைச்‌ சேர்ந்த விளையாட்டு மாணவர்களுடனும்‌, அண்டை நாட்டு விளையாட்டு வீரர்களுடனும்‌ நல்ல உடல்‌ திறத்தோடு போட்டிகளில்‌ பங்கேற்று, நம்‌ மாணவ, மாணவிகள்‌ கோப்பைகளை வெல்ல வேண்டும்‌ என்ற ஒரே நோக்கத்தோடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1992-ஆம்‌ ஆண்டு தமிழ்‌ நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தை உருவாக்கினார்‌.

இதன்மூலம்‌ மாவட்டந்தோறும்‌ ஆர்வமுள்ள மாணவ, மாணவிகளைத்‌ தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறந்த முறையில்‌ பயிற்சி அளித்து, தேவையான உணவுகளை வழங்கியும்‌, அவர்களுக்கு வேண்டிய விளையாட்டுப்‌ பயிற்சிகளைப் பெறும்‌ வகையிலான சாதனங்களைக்‌ கொடுத்தும்‌, தமிழகத்தை விளையாட்டில்‌ சிறந்த மாநிலமாக உருவாக்கியது அதிமுக ஆட்சிக்‌ காலங்கள்‌.

அதிமுக ஆட்சியில் விளையாட்டுத்‌ துறையில்‌ தமிழகம்‌ உச்சம்‌

மாவட்டந்தோறும்‌ விளையாட்டு மைதானங்கள்‌ ஏற்படுத்தப்பட்டு, விளையாட்டில்‌ ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்‌ தங்கி பயிற்சி பெறவும்‌, பள்ளிக்குச்‌ செல்லும்‌ வகையில் விளையாட்டு (மாணவர்‌) விடுதிகள்‌ பெருமளவில்‌ ஜெயலலிதாவால்‌ ஏற்படுத்தப்பட்டன. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக ஆட்சிக்‌ காலங்களில்,‌ தமிழகம்‌ விளையாட்டுத்‌ துறையில்‌ உச்சம்‌ தொட்டது.

1995-ல்‌ சென்னை நேரு விளையாட்டு அரங்கை பல கோடி ரூபாய்‌ செலவில்‌புனரமைத்ததுடன்‌, சென்னையில்‌ உள்‌ விளையாட்டு அரங்கங்கள்‌, நீச்சல்‌ & குளங்கள்‌ போன்றவை அமைக்கப்பட்டு, தெற்காசிய விளையாட்டுப்‌ போட்டிகள்‌ சீரோடும்‌, சிறப்போடும்‌ நடத்தப்பட்டன. கோயம்பேட்டில்‌ தெற்காசிய விளையாட்டு கிராமமும்‌ உருவாக்கப்பட்டது. மாநில அளவில்‌ மாவட்டந்தோறும்‌ முதலமைச்சர்‌ கோப்பை விளையாட்டுப்‌போட்டிகள்‌ நடத்தப்பட்டன.

அரசின் சாதனைகள்

வெற்றி பெற்றவர்களுக்கு 1 லட்சம்‌ ரூபாய்‌ காசோலை வழங்கப்பட்டது. குறிப்பிட்ட அரசு வேலைகளில்‌ 3 சதவீதம்‌ விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டது. தமிழ்‌நாட்டில்‌ உள்ள 12524 கிராம ஊராட்சிகள்‌, 528 பேரூராட்சிகளில்‌ அம்மா இளைஞர்‌ விளையாட்டுத்‌ திட்டம்‌ செயல்படுத்தப்பட்டது,

இவ்வாறு, கழக அரசின்‌ சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்‌. ஒருசில சாதனைகளை மட்டுமே இங்கு குறிப்பிட்டுள்ளோம்‌.

ஆனால்‌, விடியா திமுக அரசு ஆட்சிப்‌ பொறுப்பேற்று 40 மாத காலத்தில்‌ தமிழக விளையாட்டுத்‌ துறை, விளையாட்டு மந்திரியின்‌ கையில்‌ சிக்கி சின்னாபின்னமாகக்‌ காட்சி அளிக்கிறது. விளையாட்டு வீரர்களையும்‌, விளையாட்டையும்‌ ஊக்குவிப்பதற்கு பதிலாக, தங்களுடைய சுய முயற்சியால்‌ பல்வேறு விளையாட்டுகளில்‌ சாதனை படைத்த “கிரிக்கெட்‌ வீரர் ‌தோனி முதல்‌ டென்னிஸ்‌ வீரர்‌ ஜோகோவிச்‌” வரையும்‌, மாற்றுத்‌ திறனாளிகளுக்கான உலக கிரிக்கெட்‌ போட்டியில்‌ இந்தியா சார்பாக கலந்துகொண்டு வெற்றி பெற்றதாக கடையில்‌ வாங்கிய கோப்பையுடன்‌, பாஸ்போர்ட்டே இல்லாதவருடனும்‌ இந்த ஆட்சியாளர்கள்‌ உடன்‌ நின்று புகைப்படம்‌ எடுத்து சுய தம்பட்டம்‌ அடிப்பதையே தொழிலாகக்‌ கொண்டு நடமாடி வருவது வெட்கக்கேடான ஒன்றாகும்‌.

விளையாட்டு மந்திரியின்‌ தலையாய சாதனை

தனக்கு வேண்டிய ஒருசிலரை திருப்திப்படுத்தவும்‌, அவர்கள்‌ கோடிகளில்‌ புரளவும்‌, பல நூறு கோடி ரூபாயை செலவு செய்து, ஒரு சிலரைத்‌ தவிர பொதுமக்களுக்கு பயனற்ற ஃபார்முலா-4 கார்‌ பந்தயத்தை நடத்தியதுதான்‌ இந்த விளையாட்டு மந்திரியின்‌ தலையாய சாதனை.

இந்நிலையில்‌, சிவகங்கையில்‌ நடைபெற இருக்கும்‌ விழாவில்‌ பங்கேற்க உள்ள வாரிசு மந்திரி உதயநிதியை வரவேற்க, விளையாட்டு விடுதியில்‌ தங்கியுள்ள மாணவர்களை வைத்து கொடி, தோரணங்களைக்‌ கட்டச்‌ சொல்வதும்‌, மைதானத்தை சுத்தப்படுத்தச் சொல்வதுமான வேதனை தரக்கூடிய செய்தி மற்றும்‌ வீடியோ காட்சிகள்‌ ஊடகங்களிலும்‌, சமூக வலைதளங்களிலும்‌ வலம்‌ வருவது வேதனையானது. அகந்தையின்‌ உச்சமாகும்‌.

தமிழக விளையாட்டுத்‌ துறையை மேம்படுத்தவும்‌, விளையாட்டில்‌ ஆர்வம்‌ மிக்க மாணவர்களை ஊக்குவிப்பதற்கும்‌ பதிலாக, அவர்களை வேலைக்காரர்கள்‌ போல்‌ நடத்தும்‌ இந்த விடியா திமுக அரசுக்கும்‌, விளையாட்டுத்‌ துறையை கையில்‌ வைத்திருக்கும்‌ மந்திரி உதயநிதிக்கும்‌ கடும்‌ கண்டனத்தைத்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌''.

இவ்வாறு R.B. உ.தயகும௱ர்‌ தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னை மக்களே... அண்ணாசாலை பக்கம் போறீங்களா.. நாளை முதல் மிகப்பெரிய மாற்றம்! நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே... அண்ணாசாலை பக்கம் போறீங்களா.. நாளை முதல் மிகப்பெரிய மாற்றம்! நோட் பண்ணிக்கோங்க
Minister Periyasamy: திமுகவின் நிதி ஆதாரம்..! யார் இந்த திண்டுக்கல் ஐ. பெரியசாமி - அரசியல் பயணமும், வழக்கும்..
Minister Periyasamy: திமுகவின் நிதி ஆதாரம்..! யார் இந்த திண்டுக்கல் ஐ. பெரியசாமி - அரசியல் பயணமும், வழக்கும்..
ஏஐ தவறான ஆலோசனை: உப்புக்கு பதில் ப்ரோமைட்? அதிர்ச்சியூட்டும் சுய மருத்துவம்! எச்சரிக்கை பதிவு!
ஏஐ தவறான ஆலோசனை: உப்புக்கு பதில் ப்ரோமைட்? அதிர்ச்சியூட்டும் சுய மருத்துவம்! எச்சரிக்கை பதிவு!
பொறியியல் சேர்க்கை: தள்ளிப்போகும் துணை கலந்தாய்வு? 40,000 இடங்களுக்கு என்ன நடக்கும்?
பொறியியல் சேர்க்கை: தள்ளிப்போகும் துணை கலந்தாய்வு? 40,000 இடங்களுக்கு என்ன நடக்கும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP vs OPS | மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னை மக்களே... அண்ணாசாலை பக்கம் போறீங்களா.. நாளை முதல் மிகப்பெரிய மாற்றம்! நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே... அண்ணாசாலை பக்கம் போறீங்களா.. நாளை முதல் மிகப்பெரிய மாற்றம்! நோட் பண்ணிக்கோங்க
Minister Periyasamy: திமுகவின் நிதி ஆதாரம்..! யார் இந்த திண்டுக்கல் ஐ. பெரியசாமி - அரசியல் பயணமும், வழக்கும்..
Minister Periyasamy: திமுகவின் நிதி ஆதாரம்..! யார் இந்த திண்டுக்கல் ஐ. பெரியசாமி - அரசியல் பயணமும், வழக்கும்..
ஏஐ தவறான ஆலோசனை: உப்புக்கு பதில் ப்ரோமைட்? அதிர்ச்சியூட்டும் சுய மருத்துவம்! எச்சரிக்கை பதிவு!
ஏஐ தவறான ஆலோசனை: உப்புக்கு பதில் ப்ரோமைட்? அதிர்ச்சியூட்டும் சுய மருத்துவம்! எச்சரிக்கை பதிவு!
பொறியியல் சேர்க்கை: தள்ளிப்போகும் துணை கலந்தாய்வு? 40,000 இடங்களுக்கு என்ன நடக்கும்?
பொறியியல் சேர்க்கை: தள்ளிப்போகும் துணை கலந்தாய்வு? 40,000 இடங்களுக்கு என்ன நடக்கும்?
உளவுத்துறையில் வேலை; 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்- 4987 காலிப் பணியிடங்கள், நாளை கடைசி! விண்ணப்பிப்பது எப்படி?
உளவுத்துறையில் வேலை; 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்- 4987 காலிப் பணியிடங்கள், நாளை கடைசி! விண்ணப்பிப்பது எப்படி?
Free AI Courses: 5 இலவச ஏஐ படிப்புகளை அறிமுகம் செய்த அரசு- என்னென்ன? உங்கள் எதிர்காலத்தை மாற்றும் வாய்ப்பு!
Free AI Courses: 5 இலவச ஏஐ படிப்புகளை அறிமுகம் செய்த அரசு- என்னென்ன? உங்கள் எதிர்காலத்தை மாற்றும் வாய்ப்பு!
7 வயதில்தான் கல்வி; 16 வரை தேர்வு இல்லை- ஃபின்லாந்து குழந்தைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ரகசியம்! அறிய ஆவலா?
7 வயதில்தான் கல்வி; 16 வரை தேர்வு இல்லை- ஃபின்லாந்து குழந்தைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ரகசியம்! அறிய ஆவலா?
Cheapest Electric SUV: இனி இதுதான் மலிவு விலை மின்சார எஸ்யுவி.. அலறப்போகும் இந்திய சந்தை, மிரட்டும் சீனா கார்
Cheapest Electric SUV: இனி இதுதான் மலிவு விலை மின்சார எஸ்யுவி.. அலறப்போகும் இந்திய சந்தை, மிரட்டும் சீனா கார்
Embed widget