மேலும் அறிய

பாகிஸ்தானில் உயர் கல்வி பயின்றால் வேலை கிடையாது: இந்திய அரசு அதிரடி

பாகிஸ்தானுக்குச் சென்று உயர் கல்வி பயின்றால் இந்தியாவில் வேலை கிடையாது என்று உயர் கல்வி அமைப்புகளான யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ அதிரடியாக அறிவித்துள்ளன. 

பாகிஸ்தானுக்குச் சென்று உயர் கல்வி பயின்றால் இந்தியாவில் வேலை கிடையாது என்று உயர் கல்வி அமைப்புகளான யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ  அதிரடியாக அறிவித்துள்ளன. 

இதுகுறித்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கண்காணிப்பு அமைப்பான பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகளின் தலைமை அமைப்பான அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் ஆகிய இரண்டு அமைப்புகளும் கூட்டாக நேற்று இரவு அறிக்கையை வெளியிட்டன. அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

''பாகிஸ்தானில் உயர் கல்வி படிக்க எந்த மாணவர்களும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்தியக் குடிமகன்கள் அல்லது இந்தியக் குடியுரிமை பெற்று வெளிநாடுகளில் வசிப்போர் பாகிஸ்தான் கல்வி நிறுவனங்களில் உள்ள பட்டப்படிப்புகளை படித்தால், இந்தியாவில் வேலைவாய்ப்பு பெறவோ, படிப்பைத் தொடரவோ முடியாது.

எனினும் பாகிஸ்தானில் உயர் கல்வி படித்த அகதிகள் மற்றும் அவர்களின் குழந்தைகள் இந்தியக் குடியுரிமையைப் பெற்றிருந்ததால் அவர்களால் இந்தியாவில் வேலை பெற முடியும். எனினும் அவர்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு அனுமதியைப் பெற வேண்டியது அவசியம்''. 

இவ்வாறு பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் ஆகிய இரண்டு அமைப்புகளும் தெரிவித்துள்ளன.

*

நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை 2020-ஐ யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு படிப்படியாக அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் முதுகலைப் படிப்பைப் படிக்காமல் நேரடியாக பிஎச்.டி. படிப்பில் சேரும் வகையில் இளங்கலைப் படிப்புகளை அறிமுகம் செய்ய யுஜிசி திட்டமிட்டு வருகிறது. தற்போதுள்ள நடைமுறையின்படி, முனைவர் ஆய்வுப் படிப்பான பிஎச்.டி. படிக்க விரும்புவோர், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

அதேபோல அண்மையில் ஒரே நேரத்தில் ஒரே பல்கலைக்கழகத்திலோ அல்லது வெவ்வேறு பல்கலைக்கழகங்களிலோ இரண்டு முழுநேரப் படிப்புகளைப் படிக்கலாம் என்று யுஜிசி தெரிவித்தது. இதுகுறித்த விரிவான நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. 

முன்னதாக ஒரு மாணவரால் ஒரு நேரத்தில் ஒரு முழு நேரப் படிப்பை மட்டுமே படிக்க முடியும். வேண்டுமெனில் ஆன்லைன்/ குறுகிய கால / டிப்ளமோ படிப்புகளைப் படிக்கலாம் என்று மட்டுமே யுஜிசி அனுமதி வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Seeman TVK Vijay: ”சண்டைக்கு வாப்பா விஜய், பாவமே பார்க்க மாட்டேன்” -  திமுக கொடுத்த டாஸ்கில் சீமான்?
Seeman TVK Vijay: ”சண்டைக்கு வாப்பா விஜய், பாவமே பார்க்க மாட்டேன்” - திமுக கொடுத்த டாஸ்கில் சீமான்?
Madhambatti Rangaraj : வயிற்றில் 6 மாத கரு, மாதம்பட்டி ரங்கராஜிற்கு 2வது திருமணம்.. கரம்பிடித்த பெண் யார் தெரியுமா?
Madhambatti Rangaraj : வயிற்றில் 6 மாத கரு, மாதம்பட்டி ரங்கராஜிற்கு 2வது திருமணம்.. கரம்பிடித்த பெண் யார் தெரியுமா?
Flight Fire: விமானத்தில் பற்றிய தீ, குபுகுபுவென எழுந்த கரும்புகை - அலறி அடித்து கீழே குதித்து ஓடிய பயணிகள்
Flight Fire: விமானத்தில் பற்றிய தீ, குபுகுபுவென எழுந்த கரும்புகை - அலறி அடித்து கீழே குதித்து ஓடிய பயணிகள்
கோவையில் ஒரு பிரியாணி அபிராமி.. கள்ளக்காதலனுக்காக குழந்தையை கொன்ற தாய்.. கொடூரம்!
கோவையில் ஒரு பிரியாணி அபிராமி.. கள்ளக்காதலனுக்காக குழந்தையை கொன்ற தாய்.. கொடூரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தூத்துக்குடி வரும் மோடி! நேரில் அழைத்த ஸ்டாலின்! Files உடன் கனிமொழி!
கழட்டிவிட்ட பிரதமர் மோடி? கலக்கத்தில் ஓபிஎஸ்! கதறவிட்ட எடப்பாடி
Vikravandi |“எங்களுக்கே வழிவிட மாட்டியா” TOLGATE-யை நொறுக்கிய விசிகவினர் விக்கிரவாண்டியில் பரபரப்பு
Kundrathur Abirami Audio | குழந்தைகளை கொன்ற அபிராமி “பயமே இல்லையா உனக்கு” வெளியான பகீர் ஆடியோ
Instagram Ilakiya | இலக்கியா தற்கொலை முயற்சி ஸ்டண்ட் மாஸ்டர் காரணமா உண்மையில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman TVK Vijay: ”சண்டைக்கு வாப்பா விஜய், பாவமே பார்க்க மாட்டேன்” -  திமுக கொடுத்த டாஸ்கில் சீமான்?
Seeman TVK Vijay: ”சண்டைக்கு வாப்பா விஜய், பாவமே பார்க்க மாட்டேன்” - திமுக கொடுத்த டாஸ்கில் சீமான்?
Madhambatti Rangaraj : வயிற்றில் 6 மாத கரு, மாதம்பட்டி ரங்கராஜிற்கு 2வது திருமணம்.. கரம்பிடித்த பெண் யார் தெரியுமா?
Madhambatti Rangaraj : வயிற்றில் 6 மாத கரு, மாதம்பட்டி ரங்கராஜிற்கு 2வது திருமணம்.. கரம்பிடித்த பெண் யார் தெரியுமா?
Flight Fire: விமானத்தில் பற்றிய தீ, குபுகுபுவென எழுந்த கரும்புகை - அலறி அடித்து கீழே குதித்து ஓடிய பயணிகள்
Flight Fire: விமானத்தில் பற்றிய தீ, குபுகுபுவென எழுந்த கரும்புகை - அலறி அடித்து கீழே குதித்து ஓடிய பயணிகள்
கோவையில் ஒரு பிரியாணி அபிராமி.. கள்ளக்காதலனுக்காக குழந்தையை கொன்ற தாய்.. கொடூரம்!
கோவையில் ஒரு பிரியாணி அபிராமி.. கள்ளக்காதலனுக்காக குழந்தையை கொன்ற தாய்.. கொடூரம்!
EPS PM Modi: மோடியிடம் எடப்பாடி கேட்டது என்ன? பாஜகவில் யாரை போட்டுக் கொடுத்தார்? நச்சுன்னு 3 கோரிக்கை
EPS PM Modi: மோடியிடம் எடப்பாடி கேட்டது என்ன? பாஜகவில் யாரை போட்டுக் கொடுத்தார்? நச்சுன்னு 3 கோரிக்கை
Maruti Fronx: No.1 காரின் விலையை உயர்த்திய மாருதி - காரணம்? தேடி தேடி வாங்க இந்த வண்டில என்ன தான் இருக்கு?
Maruti Fronx: No.1 காரின் விலையை உயர்த்திய மாருதி - காரணம்? தேடி தேடி வாங்க இந்த வண்டில என்ன தான் இருக்கு?
Aadi Peruku 2025 Date: மக்களே.. ஆடிப்பெருக்கு எப்போது? ஆடி 18 ஏன் கொண்டாடப்படுகிறது தெரிஞ்சுக்கோங்க..!
Aadi Peruku 2025 Date: மக்களே.. ஆடிப்பெருக்கு எப்போது? ஆடி 18 ஏன் கொண்டாடப்படுகிறது தெரிஞ்சுக்கோங்க..!
IND vs ENG: இன்றுதான் கடைசி.. நச்சுனு நங்கூரம் போட்ட கே.எல்.ராகுல் - சுப்மன்கில்! இந்தியாவை காப்பாத்திடுங்கப்பா!
IND vs ENG: இன்றுதான் கடைசி.. நச்சுனு நங்கூரம் போட்ட கே.எல்.ராகுல் - சுப்மன்கில்! இந்தியாவை காப்பாத்திடுங்கப்பா!
Embed widget