மேலும் அறிய

TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!

தேர்வு முடிவுகள் வெளிவரும் வரை காலியிடங்களின் எண்ணிக்கை, பல்வேறு துறைகளிடம் கோரப்படும் என்பதால், குரூப் 4 காலியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் - டிஎன்பிஎஸ்சி.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகளை 3 மாதங்களில் வெளியிடுவோம் என்று அதன் தலைவர் பிரபாகர் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் இன்று குரூப் 4 தேர்வு நடைபெற்று வரும் நிலையில், டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:

’’குரூப் 4 தேர்வினை 13,89,738 விண்ணப்பதாரர்கள்‌ தமிழகத்தில்‌ உள்ள அனைத்து மாவட்டங்களிலும்‌ 4,922 தேர்வுக்‌ கூடங்களில்‌ எழுதுகின்றனர்‌. சென்னையில் 312 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.

200 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகையில் தேர்வு

இந்தத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு, கொள்குறி வகையில் நடைபெறுகிறது. தமிழ் பாடத்துக்கு 100 மதிப்பெண்கள், பொது அறிவு மற்றும் மனத்திறன் சோதனைக்கு 100 மதிப்பெண்கள் என 200 மதிப்பெண்களுக்கு தேர்வு ஒரே கட்டமாக நடைபெறுகிறது. 

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட 25 வகையான பதவிகள் இதன்மூலம் நிரப்பப்பட உள்ளன.

தேர்வு முடிவுகள் எப்போது?

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகளை 3 மாதங்களில் வெளியிடுவோம் என்று கருதுகிறோம். கடந்த ஆண்டு 4 – 4.5 மாதங்கள் ஆகின. இந்த முறை பல நடவடிக்கைகள் மூலம் 3 மாதத்துக்குள்ளாக தேர்வு முடிவுகள் வெளியாகலாம். முன்பாகவே வெளியாகவும் வாய்ப்பு உள்ளது.

கடந்த ஆண்டு 10,701 பேர் அரசுப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 11,027 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இன்னும் 4,300 பேர் அடுத்த 2 மாதங்களில் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒட்டுமொத்தமாக 10 ஆயிரம் தேர்வர்களை அரசுப் பணிகளுக்குத் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.

மதிப்பீட்டு ஆய்வகம் மூலம், கணினியைக் கொண்டு குரூப் 4 வினாத்தாள்கள் திருத்தப்பட உள்ளன. நம்மிடம் 6 மதிப்பீட்டு ஆய்வகங்கள் உள்ளன.


TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!

காலியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்

15 நாட்களுக்கு உள்ளாக தற்காலிக விடைக் குறிப்பு வெளியிடப்படும். நிபுணர் குழு மூலம் அவை சரிபார்க்கப்பட்டு, இறுதி விடைக் குறிப்பு வெளியாகும். 1 மாதத்தில் வினாத்தாள்கள் திருத்தம் செய்யப்படும். பின்னர் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு 3 மாதத்துக்கு உள்ளாக தேர்வு முடிவுகள் வெளியாகும்.

கடந்த காலங்களில் 2 ஆண்டுக்கு ஒரு முறையே குரூப் 4 தேர்வு நடைபெற்று வந்ததால், காலியிடங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இப்போது ஓராண்டுக்கு ஒருமுறை தேர்வு நடைபெறுகிறது என்பதால், காலி இடங்கள் குறைந்திருக்கலாம். எனினும் தேர்வு முடிவுகள் வெளிவரும் வரை காலியிடங்களின் எண்ணிக்கை, பல்வேறு துறைகளிடம் கோரப்படும் என்பதால், காலியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்’’.  

இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

90% தசைச் சிதைவு, பெருமூளை வாதம்; அதனால் என்ன? ஆட்டோ ஓட்டுநர் மகனுக்கு சென்னை ஐஐடியில் இடம்!
90% தசைச் சிதைவு, பெருமூளை வாதம்; அதனால் என்ன? ஆட்டோ ஓட்டுநர் மகனுக்கு சென்னை ஐஐடியில் இடம்!
 
 "வெளிநாட்டுப் பட்டம்" என்ற போலி கௌரவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்திய மாணவர்கள்!
உசிலம்பட்டி: 5000 மாணவர்களின் புது காலணிகளை தூர தூக்கி வீசிய தலைமையாசிரியர் சஸ்பெண்ட் !
உசிலம்பட்டி: 5000 மாணவர்களின் புது காலணிகளை தூர தூக்கி வீசிய தலைமையாசிரியர் சஸ்பெண்ட் !
TNPSC Free Coaching : TNPSC தேர்வுக்கு தயாராகுறீங்களா? ஒரு ரூபாய் செலவு இல்லாமல் இலவச பயிற்சி - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
TNPSC தேர்வுக்கு தயாராகுறீங்களா? ஒரு ரூபாய் செலவு இல்லாமல் இலவச பயிற்சி - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Police Announcement : காவல்துறையினருக்கு ஜாக்பாட்.! கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்- இதோ லிஸ்ட்
காவல்துறையினருக்கு ஜாக்பாட்.! கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்- இதோ லிஸ்ட்
ஹூண்டாய் புது SUV: வென்யூவை விடப் பெரிசா.. க்ரெட்டாவை விட மலிவா! சிஎன்ஜி, ADAS வசதிகளுடன்!
ஹூண்டாய் புது SUV: வென்யூவை விடப் பெரிசா.. க்ரெட்டாவை விட மலிவா! சிஎன்ஜி, ADAS வசதிகளுடன்!
Udhayanidhi Stalin: ’’கறிக்கடைல கூட இவ்ளோ வெட்ட மாட்டாங்க; தமிழ்நாட்டில் அத்தனை வெட்டு,குத்து’’ - உதயநிதி சரமாரி குற்றச்சாட்டு
Udhayanidhi Stalin: ’’கறிக்கடைல கூட இவ்ளோ வெட்ட மாட்டாங்க; தமிழ்நாட்டில் அத்தனை வெட்டு,குத்து’’ - உதயநிதி சரமாரி குற்றச்சாட்டு
Sathyabama : ’சட்டமன்ற சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் பெண்’ யார் இந்த சத்தியபாமா..?
’சட்டமன்ற சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் பெண்’ யார் இந்த சத்தியபாமா..?
குறைந்த விலை, அதிக மைலேஜ்: டாப் விற்பனையில் மாருதி மினி கார்கள்- மீண்டும் மவுசு ஏன்?
குறைந்த விலை, அதிக மைலேஜ்: டாப் விற்பனையில் மாருதி மினி கார்கள்- மீண்டும் மவுசு ஏன்?
90% தசைச் சிதைவு, பெருமூளை வாதம்; அதனால் என்ன? ஆட்டோ ஓட்டுநர் மகனுக்கு சென்னை ஐஐடியில் இடம்!
90% தசைச் சிதைவு, பெருமூளை வாதம்; அதனால் என்ன? ஆட்டோ ஓட்டுநர் மகனுக்கு சென்னை ஐஐடியில் இடம்!
LIVE | Kerala Lottery Result Today (03.09.2026): இன்று கேரளா காருண்யா பிளஸ் KN-639 லாட்டரி முடிவுகள்: வெற்றி எண்கள் இதோ!
LIVE | Kerala Lottery Result Today (03.09.2026): இன்று கேரளா காருண்யா பிளஸ் KN-639 லாட்டரி முடிவுகள்: வெற்றி எண்கள் இதோ!
TN New Secretariat: தமிழ்நாட்டிற்கு புதிய தலைமைச் செயலகம்.. அதிரடியாக அறிவித்த விஜய்.. எந்த இடம் தெரியுமா?
TN New Secretariat: தமிழ்நாட்டிற்கு புதிய தலைமைச் செயலகம்.. அதிரடியாக அறிவித்த விஜய்.. எந்த இடம் தெரியுமா?
Embed widget