மேலும் அறிய

ரூ.515 கட்டினால் மட்டுமே மாற்று சான்றிதழ்... ரசீது வழங்காமல் பணம் வசூலித்த அரசு பள்ளி..!

பள்ளியில் ரசீது வழங்காமல் பணம் வசூலித்த ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு. விசாரணை நடத்திய முதன்மை கல்வி அலுவலர் வினாத்தாள் கட்டணம் மட்டும் வசூலிக்கும்படியும், அதற்கு ரசீது வழங்குமாறு ஆசிரியர்களுக்கு உத்தரவு.

தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்த நிலையில், மாணவர்களுக்கு அந்தந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மதிப்பெண் மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் கோட்டை மகளிர் மேல் நிலைப் பள்ளியில் கடந்த இரண்டு நாட்களாக மாணவிகளுக்கு மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் ஆசிரியர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. 

ரூ.515 கட்டினால் மட்டுமே மாற்று சான்றிதழ்... ரசீது வழங்காமல் பணம் வசூலித்த அரசு பள்ளி..!

அப்போது ஜாகிர் உசேன் என்பவர் தனது மகளுடன் மாற்றுச் சான்றிதழ் வாங்க வந்துள்ளார். பெற்றோர் ஆசிரியர் கழகம், 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புக்கான கணினி கட்டணம், வினாத்தாள் கட்டணம் என 515 ரூபாய் எந்தவித ரசீதும் இல்லாமல் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகைக்கான ரசீதை வழங்கும் படி பெற்றோர் கேட்டபோது, துண்டுச் சீட்டில் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு ரூ. 50, மாணவி 11 ஆம் வகுப்பில் கணினி பயன்படுத்தியதற்கு ரூ.200, அதேபோன்று 12 ஆம் வகுப்பிற்கு 200 ரூபாய் மற்றும் வினா தாளுக்கு 65 ரூபாய் என மொத்தம் 515 ரூபாய் என அங்கிருந்த ஆசிரியர்கள் எழுதிக் கொடுத்துள்ளனர். மேலும் இந்த கட்டணத்தை செலுத்தினால் மட்டும்தான் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர். இதுமட்டுமின்றி புதிதாக மாணவர் சேர்க்கையில் சேரும் விண்ணப்பக் கட்டணம் 20 ரூபாயும் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து வந்த அலுவலர்கள் விசாரணை நடத்தினர். முறையாக ரசீது வழங்கி பணம் வசூலிக்கும்படி அலுவலர்கள் தெரிவித்தனர். அதன் பின்னர் ரசீதுகள் வழங்கி கட்டணம் வசூலிக்கப்பட்டது.

ரூ.515 கட்டினால் மட்டுமே மாற்று சான்றிதழ்... ரசீது வழங்காமல் பணம் வசூலித்த அரசு பள்ளி..!

இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், தொடர்ந்து பள்ளி நிர்வாகம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது. மாணவர்களிடம் வசூலிக்கப்படும் பணத்திற்கு முறையான ரசீது வழங்கப்படாமல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே போன்று அனைத்து மாணவர்களிடம் இருந்தும் பணம் வசூலிக்கப்படவில்லை. குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே பள்ளி நிர்வாகம் பணம் வசூலித்தது என்று கூறினர்.

பின்னர் இதுதொடர்பாக விசாரணை நடத்திய முதன்மை கல்வி அலுவலர் முருகன், வினாத்தாள் கட்டணம் மட்டும் வசூல் செய்யும்படியும், மீதமுள்ள கட்டணங்களை வசூல் செய்ய வேண்டாம் என்றும்  தெரிவித்துள்ளார். ஏற்கனவே வசூலிக்கப்பட்ட பணம் அந்தந்த பெற்றோர்களிடம் வழங்கும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பள்ளியில் புதிதாக மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்ப படிவத்தினை 20 ரூபாய்க்கு விற்பனை செய்தது குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

NEET UG: 2027 முதல் கணினி மூலமே நீட் தேர்வு: உச்ச நீதிமன்றத்தில் முக்கிய தகவல் சொன்ன என்டிஏ
NEET UG: 2027 முதல் கணினி மூலமே நீட் தேர்வு: உச்ச நீதிமன்றத்தில் முக்கிய தகவல் சொன்ன என்டிஏ
சிவகங்கை மாவட்ட மக்கள் கவனத்திற்கு... TNPSC GROUP  I  முதல்நிலை தேர்விற்கான இலவசப் பயிற்சி இதோ !
சிவகங்கை மாவட்ட மக்கள் கவனத்திற்கு... TNPSC GROUP  I  முதல்நிலை தேர்விற்கான இலவசப் பயிற்சி இதோ !
CBSE: சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம்; வெளிப்படைத்தன்மை இல்லையா? முழு விசாரணை தேவை
CBSE: சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம்; வெளிப்படைத்தன்மை இல்லையா? முழு விசாரணை தேவை
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”வள்ளூவருக்கு காவி பெயிண்ட்.. கொள்கை எதிரியை கேள்வி கேட்க ஏன் தயக்கம்..” முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
”வள்ளூவருக்கு காவி பெயிண்ட்.. கொள்கை எதிரியை கேள்வி கேட்க ஏன் தயக்கம்..” முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
Anitha Radhakrishnan: ”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் மீண்டும் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
Embed widget