மேலும் அறிய

School Cleaning: பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்- கல்வித்துறை உத்தரவு என்ன?

மழைக் காலத்தை முன்னிட்டு, பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மழைக் காலத்தை முன்னிட்டு, பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடக்கக்‌ கல்வி இயக்கக நிர்வாகத்தின்‌ கீழ்‌ செயல்படும்‌ அனைத்து வகை பள்ளிகளில்‌ மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்‌ குறித்த அறிவுரையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

தொடக்கக்‌ கல்வித்‌ துறையின்‌ கீழ்‌ இயங்கும்‌ அனைத்து வகைப் பள்ளிகளிலும்‌ நடப்பு 2022- 2023ஆம்‌ கல்வியாண்டிற்கான கற்றல்‌- கற்பித்தல்‌ செயல்பாடுகள்‌ தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தொடக்கக்‌ கல்வி இயக்கக நிர்வாகத்தின்‌ கீழ்‌ செயல்படும்‌ அரசு / நகராட்சி ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ எதிர்வரும்‌ மழைக் காலத்தை கவனத்தில்‌ கொண்டு மேற்கொள்ள வேண்டிய கட்டிட பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும்‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ குறித்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌, மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌, வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌, பள்ளித்‌ தலைமை ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு கீழ்க்கண்ட அறிவுரைகள்‌ வழங்கப்படுகின்றன.

1. எல்லா பள்ளிகளிலும்‌ மரங்கள்‌ உள்ளன. மரத்தில்‌ இருந்து உதிரும்‌ இலைகள்‌ பள்ளிக்‌ கட்டிட மேற்கூரையில்‌ விழுந்து குப்பையாகச் சேர்ந்துள்ளது. பல பள்ளிகளில்‌ ஆய்வுகள்‌ மேற்கொள்ளும்போது தெரிய வருகின்றது. மழையின்போது இக்குப்பைகள்‌ நீரில்‌ நனைந்து கட்டிட உறுதிக்கு ஊறு விளைப்பதாக உள்ளது. எனவே, ஒவ்வொரு பள்ளியிலும்‌ மேற்கூரையில்‌ உள்ள காய்ந்த இலைகள்‌ / சருகுகளை அகற்றிட கேட்டுக்‌ கொள்ளப்படுகின்றனர்‌.

2. ஒவ்வொரு பள்ளியிலும்‌, ஒவ்வொரு கட்டிடத்தின்‌ மேற்கூரையில்‌ மழை நீர்‌ தேங்காதவாறும்‌, மழை நீர்‌ வடிவதற்கான துவாரங்கள்‌, இலை தழைகள்‌ மற்றும்‌ குப்பைகளால்‌ அடைபடாதவாறும்‌ தூய்மையாக இருப்பதை உறுதி செய்திடல்‌ வேண்டும்‌.

3. தண்ணீர்‌ தேங்கி கொசுக்கள்‌ உற்பத்தி ஆகாத வண்ணம்‌ பள்ளிகளில்‌ உரிய நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளவும்‌, பள்ளி வளாகத்தின்‌ தேவையான‌ பகுதிகளில்‌ கொசு மருந்து தெளித்து சுகாதாரமான சூழலில்‌ பள்ளி செயல்படுவதை உறுதி செய்திடல்‌ வேண்டும்‌.

4. பள்ளி வளாகம்‌ புதர்கள்‌ மற்றும்‌ குப்பைகளின்றி காண்பதற்கு அழகாகவும்‌ தூய்மையாகவும்‌ இருக்கும்‌ வகையில்‌ நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட வேண்டும்‌.

5. பள்ளி மாணவர்களை இத்தகைய தூய்மைப்‌ பணிகளை செய்வதற்குப் பயன்படுத்தக்‌ கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது. பள்ளி பராமரிப்பு மான்யத்தினைக்‌ கொண்டு வெளி ஆட்கள்‌ அல்லது உள்ளூர்‌ நபர்கள்‌ / பணியாளர்களை கொண்டு இத்தகைய தூய்மைப்‌ பணிகளை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்‌.

6. பள்ளி வளாகத்தை தூய்மை செய்வதற்கு 100 நாட்கள்‌ வேலை வாய்ப்புத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ பணிபுரியும்‌ பணியாளர்களை கொண்டு செய்வதற்கு, உரிய அலுவலர்கள்‌ அணுகிப்‌ பெற்று, பள்ளியின்‌ பராமரிப்பு பணிகளை சீர்‌ செய்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளலாம்‌.

7. நடமாடும்‌ மருத்துவக்‌ குழு, ஆரம்ப சுகாதார நிலையம்‌ மற்றும்‌ செவிலியர்‌ ஆகியோரின்‌ தொலைபேசி எண்கள்‌ பள்ளியின்‌ அறிவிப்புப்‌ பலகையிலும்‌ தலைமை ஆசிரியர்‌ அறையிலும்‌ எழுதப்பட்டு இருப்பதை உறுதி செய்திடல்‌ வேண்டும்‌.

மேற்கண்ட அறிவுரைகளை மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌ மற்றும்‌ வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌ மூலம்‌ அனைத்து பள்ளித்‌ தலைமை ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌. மேலும்‌ பள்ளிப்‌ பார்வை மற்றும்‌ ஆய்வின்‌போது மேற்கண்ட அறிவுரைகள்‌ சரியாக பின்பற்றப்படுகின்றதா? என்பதைத் தொடர்ந்து கண்காணித்திடவும்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

OPS BJP: பட்டையடித்த மோடி, கடுப்பாகி ஒபிஎஸ் எடுத்த புது ரூட் - தமிழக பிள்ளைகள் பாவம்.. ஆன் தி வே டூ விஜய்?
OPS BJP: பட்டையடித்த மோடி, கடுப்பாகி ஒபிஎஸ் எடுத்த புது ரூட் - தமிழக பிள்ளைகள் பாவம்.. ஆன் தி வே டூ விஜய்?
BCCI: மத்திய அரசே நினைச்சாலும் முடியாது.. தனிக்காட்டு ராஜா பிசிசிஐ.. IND Vs PAK போட்டி நடந்தே தீருமாம்
BCCI: மத்திய அரசே நினைச்சாலும் முடியாது.. தனிக்காட்டு ராஜா பிசிசிஐ.. IND Vs PAK போட்டி நடந்தே தீருமாம்
Amit Shah Angry: “நீங்க செய்யுறது சரியா.?“ மக்களவையில் பொங்கி எழுந்த அமித் ஷா - எதற்காக தெரியுமா.?
“நீங்க செய்யுறது சரியா.?“ மக்களவையில் பொங்கி எழுந்த அமித் ஷா - எதற்காக தெரியுமா.?
“TCS ஆட்குறைப்ப நிறுத்துங்க“; மத்திய தொழிலாளர் துறை அமைச்சருக்கு பறந்த கடிதம் - யார் எழுதியது.?
“TCS ஆட்குறைப்ப நிறுத்துங்க“; மத்திய தொழிலாளர் துறை அமைச்சருக்கு பறந்த கடிதம் - யார் எழுதியது.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ponmudi : விக்கிரவாண்டியில் பொன்முடி? அன்னியூர் சிவா போர்க்கொடி! பற்றி எரியும் விழுப்புரம் திமுக
EPS Modi Secret Call : மோடியுடன் ரகசிய PHONECALLரேடாரில் மூர்த்தி, சக்கரபாணி!ஆட்டத்தை தொடங்கிய EPS
Panneerselvam vs EPS | OPS- ஐ கழற்றி விட்ட BJP
Madhampatty Rangaraj |  2வது மனைவியுடனும் சண்டை? PHOTOS-ஐ லீக் செய்த ஜாய் சிக்கலில் மாதம்பட்டி ரங்கராஜ்
MK Stalin Discharge | காலை வெடிகுண்டு மிரட்டல்?மாலை முதல்வர் Discharge! Alert mode- ல் போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS BJP: பட்டையடித்த மோடி, கடுப்பாகி ஒபிஎஸ் எடுத்த புது ரூட் - தமிழக பிள்ளைகள் பாவம்.. ஆன் தி வே டூ விஜய்?
OPS BJP: பட்டையடித்த மோடி, கடுப்பாகி ஒபிஎஸ் எடுத்த புது ரூட் - தமிழக பிள்ளைகள் பாவம்.. ஆன் தி வே டூ விஜய்?
BCCI: மத்திய அரசே நினைச்சாலும் முடியாது.. தனிக்காட்டு ராஜா பிசிசிஐ.. IND Vs PAK போட்டி நடந்தே தீருமாம்
BCCI: மத்திய அரசே நினைச்சாலும் முடியாது.. தனிக்காட்டு ராஜா பிசிசிஐ.. IND Vs PAK போட்டி நடந்தே தீருமாம்
Amit Shah Angry: “நீங்க செய்யுறது சரியா.?“ மக்களவையில் பொங்கி எழுந்த அமித் ஷா - எதற்காக தெரியுமா.?
“நீங்க செய்யுறது சரியா.?“ மக்களவையில் பொங்கி எழுந்த அமித் ஷா - எதற்காக தெரியுமா.?
“TCS ஆட்குறைப்ப நிறுத்துங்க“; மத்திய தொழிலாளர் துறை அமைச்சருக்கு பறந்த கடிதம் - யார் எழுதியது.?
“TCS ஆட்குறைப்ப நிறுத்துங்க“; மத்திய தொழிலாளர் துறை அமைச்சருக்கு பறந்த கடிதம் - யார் எழுதியது.?
Tamilnadu Roundup: 17 வயது சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு, ராமேஸ்வரம் மீனவர்கள் கைது, தங்கம் விலை குறைவு - பரபரப்பான 10 மணி செய்திகள்
17 வயது சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு, ராமேஸ்வரம் மீனவர்கள் கைது, தங்கம் விலை குறைவு - பரபரப்பான 10 மணி செய்திகள்
ஆணவத்தின் உச்சம் -  ஒன்வேயில் ஸ்கூட்டரை இடித்த SUV.. வேண்டுமென்றே முதியவரை மோதி தூக்கி வீசும் வீடியோ
ஆணவத்தின் உச்சம் - ஒன்வேயில் ஸ்கூட்டரை இடித்த SUV.. வேண்டுமென்றே முதியவரை மோதி தூக்கி வீசும் வீடியோ
Lok Sabha: அனல்பறந்த ‘ஆபரேஷன் சிந்தூர்‘ விவாதம்; அமைச்சர்கள் விளக்கமும், எதிர்க்கட்சிகளின் கேள்வியும்
அனல்பறந்த ‘ஆபரேஷன் சிந்தூர்‘ விவாதம்; அமைச்சர்கள் விளக்கமும், எதிர்க்கட்சிகளின் கேள்வியும்
IND Vs Pak Asia Cup: ”காசு பார்க்க துடிக்கும் பிசிசிஐ” அப்பாவை கொன்ற பாகிஸ்தானின் விளையாட்டை மகன் பார்க்க வேண்டுமா?
IND Vs Pak Asia Cup: ”காசு பார்க்க துடிக்கும் பிசிசிஐ” அப்பாவை கொன்ற பாகிஸ்தானின் விளையாட்டை மகன் பார்க்க வேண்டுமா?
Embed widget