மேலும் அறிய
மதுரை பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதி தேர்வு: பலத்த சோதனைக்கு பின் நடைபெற்றது !
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு வருகை தரும் தேர்வர்கள் சோதனைக்கு பின்பாக ஹால்டிக்கெட்டின் பின்புறம் சோதனை செய்யும் அதிகாரியின் கையெழுத்திட்ட பின்பாக தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்

ஆசிரியர் தகுதி தேர்வு
Source : whatsapp
பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு - மதுரையில் 26 தேர்வு மையங்களில் 6ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் எழுதிவருகின்றனர்- பலத்த சோதனைக்கு பின்னர் தேர்வு எழுதும் ஆசிரியர்கள் அனுமதி.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்ற தீர்ப்பளித்தது. இதையடுத்து பணியில் உள்ள ஆசிரியர்கள் தேர்ச்சி பெறுவதற்காக சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி, பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு நேற்று முதல்நாள் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்ற நிலையில் 2 ஆவது நாளாக இன்று தமிழகம் முழுவதும் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது.
ஒலிபெருக்கி மூலமாக அறிவித்தனர்.
மதுரை மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வினை 6ஆயிரத்திற்கு மேற்பட்ட தேர்வர்கள் 26 தேர்வு மையங்களில் தேர்வு எழுதிவருகின்றனர். முன்னதாக தேர்வறைக்குள் வரும் தேர்வர்கள் ஹால்டிக்கெட், அடையாள அட்டை, பேனா ஆகியவற்றுடன் மட்டுமே ஆவணங்கள் சரிபார்க்கபட்டு கடும் சோதனைக்கு பின்னரே தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். காவல்துறை மூலமாக ஒவ்வொரு தேர்வர்களும் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். தேர்வறைக்குள் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வு நடைபெறும் ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். காலை 9.30 மணி வரை மட்டுமே தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர் தேர்வு நடைமுறைகள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஒலிபெருக்கி மூலமாக அறிவித்தனர். ஆசிரியர் தகுதி தேர்வுக்கு வருகை தரும் தேர்வர்கள் சோதனைக்கு பின்பாக ஹால்டிக்கெட்டின் பின்புறம் சோதனை செய்யும் அதிகாரியின் கையெழுத்திட்ட பின்பாக தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது.
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















