மேலும் அறிய

ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையத்தில்‌ ஆக.31 வரை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு; எப்படி?

கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்‌ பயிற்சியாளர்கள்‌ நேரடி சேர்க்கை தேதி மேலும்‌ நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆகஸ்ட் 31 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஐடிஐ எனப்படும் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்‌ பயிற்சியாளர்கள்‌ நேரடி சேர்க்கை தேதி மேலும்‌ நீட்டிக்கப்படுவதாக சென்னை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற 8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். 

தமிழகத்தில்‌ வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித்துறையின்‌ கீழ்‌ 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்‌ மற்றும்‌ 305 தனியார்‌ தொழிற்பயிற்சி நிலையங்கள்‌ இயங்கி வருகின்றன.

ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

இவற்றில்‌ 2024- 2025ஆம்‌ கல்வியாண்டிற்கான பயிற்சியாளர்கள்‌ சேர்க்கை செய்வதற்கான இணையதள கலந்தாய்வு 28.06.2024 உடன்‌ நிறைவு செய்யப்பட்ட நிலையில்‌ மாணவர்களின்‌ நலன்‌ கருதி 8-ஆம்‌ மற்றும்‌ 10-ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம்‌ 01.07.2024 முதல்‌ 15.7.2024 வரை ஏற்கனவே வழங்கப்பட்டது. தொடர்ந்து 16.07.2024 முதல்‌ 31.7.2024 வரை மேலும்‌ கால அவகாசம்‌ நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஐடிஐ எனப்படும் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்‌ பயிற்சியாளர்கள்‌ நேரடி சேர்க்கை தேதி மேலும்‌ நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆகஸ்ட் 31 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சிக்கட்டணம்எதுவும் இல்லை

இந்த அரிய வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மாணவர்கள்‌ கல்விச்‌ சான்றிதழ்களுடன்‌ நேரில்‌ சென்று தாம்‌ விரும்பும்‌ தொழிற்பிரிவை தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ சேரலாம்‌. 

மாதாமாதம்கல்வி உதவித் தொகை

* தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ சேரும்‌ மாணவர்களுக்கு பயிற்சிக்‌ கட்டணம்‌ இல்லை.

* கல்வி உதவித் தொகையாக மாதம்‌ ரூ.750/- வழங்கப்படும்‌.

* தமிழக அரசு வழங்கும்‌ விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடை, விலையில்லா மூடு காலணிகள்‌ (ஷூக்கள்), விலையில்லா பயிற்சிக்கான கருவிகள்‌, கட்டணமில்லா பேருந்து வசதி இவை அனைத்தும்‌ வழங்கப்படும்‌.

* வெளி மாவட்ட மாணவர்களுக்கு, உணவுடன் கூடிய கட்டணமில்லா விடுதி வசதியும் உண்டு.

* 2 வருடத்துக்கு ரூ.195 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

சென்ற ஆண்டுகளில்‌ தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களில்‌ 80% பேர்‌ பல முன்னணி தொழில்‌ நிறுவனங்களில்‌ வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்‌. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ இன்றைய தொழிற்சாலைகளுக்குத் தேவையான தொழில்‌ 4.0 உள்ளிட்ட பல நவீன தொழில் பிரிவுகளில்‌ தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சென்னை கிண்டி தொழிற்பயிற்சி நிலையத்தில், Refrigeration and air conditioning technician (Dual system of training) NCVT& Mechanic Motor Vehicle (Dual system of training) பிரிவுகளில் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

விண்ணப்பிப்பது எப்படி?

மாணவர்களின் விண்ணப்பங்கள் https://skilltraining.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 

இது தொடர்பாக ஏதேனும்‌ ஐயம்‌ எற்படும்‌ நேர்வில்‌ தொலைபேசி 044-22501350 என்ற எண்ணில்‌ தொடர்பு கொள்ளலாம்‌ என்று சென்னை ஆட்சியர்‌ தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan | TN Cabinet Shuffle | 2 சீனியர்கள் OUT.. ஜுனியர்கள் IN..! ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
மும்பையை குறிவைக்கும் பயங்கரவாதிகள்? அலர்ட் கொடுத்த உளவு அமைப்பு.. அச்சத்தில் மக்கள்!
மும்பையை குறிவைக்கும் பயங்கரவாதிகள்? அலர்ட் கொடுத்த IB.. அச்சத்தில் மக்கள்!
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
Embed widget