மேலும் அறிய

வட்டாரக்‌ கல்வி அலுவலர்களுக்கு நேரடி பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர்‌ அன்பில்

ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தின்‌ மூலம்‌ தெரிவு செய்யப்பட்ட 33 நபர்களுக்கு கலைஞர்‌ நூற்றாண்டு நூலக அரங்கத்தில்‌ பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வித்‌ துறை அமைச்சர்‌ வழங்கினார்‌.

ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ மூலம்‌ தெரிவு செய்யப்பட்ட 33 நேரடி நியமன "வட்டாரக்‌ கல்வி அலுவலர்களுக்கு" பணி நியமன ஆணைகளை பள்ளிக்‌ கல்வித்‌ துறை அமைச்சர்‌ ‌அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.

இதுகுறித்து தொடக்கக்‌ கல்வி இயக்ககம்‌ கூறி உள்ளதாவது:

பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்‌ ஓர்‌ அங்கமாக தொடக்கக்‌ கல்வி இயக்ககம்‌ செயல்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில்‌ இயங்கி வரும்‌ அனைத்து அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ தொடக்க, நடுநிலைப்‌ பள்ளிகளின்‌ ஒன்றிய அளவிலான ஆய்வு அலுவலர்களாக செயல்படுபவர்கள்‌தொடக்கக்‌ கல்வி இயக்ககத்தில்‌ பணிபுரியும்‌ வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌ ஆவர்‌.

ஒன்றிய அளவில்‌ செயல்படும்‌ அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ தொடக்க, நடுநிலைப்‌ பள்ளிகளை ஆய்வு செய்தல்‌, ஆசிரியர்களுக்கு ஊதியம்‌ பெற்று வழங்குதல்‌, மாணவர்களுக்கு அரசின்‌ நலத்திட்ட உதவிகளை கொண்டு சேர்த்தல்‌ மற்றும்‌ மாணவர்களின்‌ வகுப்பறைக்‌ கற்றல்‌ மேம்பாட்டினை தொடர்ந்து கண்காணிப்பது இவர்களின்‌ முக்கிய பணியாகும்‌.

அரசாணை (நிலை எண்‌.82, பள்ளிக்‌ கல்வி (தொ.க.1(1த்‌ துறை, நாள்‌: 20.05.2019ன்படி காலி ஏற்படும்‌ மொத்த வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடங்களில்‌ 50 சதவீதம்‌ நேரடி நியமனமாக செய்யப்படும்‌. இக்கல்வியாண்டில்‌ தொடக்கக்‌ கல்வி இயக்ககத்தால்‌ கோரப்பட்ட 33 பணியிடங்களுக்கான பணி நாடுநர்களை ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ தெரிவு செய்து அனுப்பியுள்ளது.


வட்டாரக்‌ கல்வி அலுவலர்களுக்கு நேரடி பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர்‌ அன்பில்

தமிழ்நாட்டில்‌ உள்ள 414 ஒன்றியங்களில்‌ 851 வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடங்கள்‌ அனுமதிக்கப்பட்டுள்ளன. அதில்‌ நடப்பாண்டில்‌ காலியாக உள்ள வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடங்களின்‌ 50 சதவீத காலிப்‌ பணியிடங்களுக்கு ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தின்‌ மூலம்‌ தெரிவு செய்யப்பட்ட 33 நபர்களுக்கு மதுரை மாநகரில்‌ அமைந்துள்ள கலைஞர்‌ நூற்றாண்டு நூலக அரங்கத்தில்‌ பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வித்‌ துறை அமைச்சர்‌ வழங்கினார்‌.

மேலும்‌, இந்த நிகழ்ச்சியில்‌ குமர குருபரன்‌ இ.ஆ.ப., பள்ளிக்‌ கல்வித்‌ துறை செயலாளர்‌, பள்ளிக்‌ கல்வி இயக்குநர்‌, தொடக்கக்‌ கல்வி இயக்குநர்‌ மற்றும்‌ உயர்‌ அலுவலர்கள்‌ பங்கேற்றனர்‌.

பின்னணி என்ன?

 2019 - 2020 முதல் 2021 - 2022 வரையிலான ஆண்டிற்கான 33 வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ காலிப் பணியிடங்களுக்கான பணித்தெரிவு தொடர்பான தேர்வு 10.09.2023 அன்று நடத்தப்பட்டது. இத்தேர்வினை எழுத 42,712 தேர்வர்கள்‌ விண்ணப்பித்தனர்‌. நவம்பர் 9ஆம் தேதி தெரிவாளர் பட்டியல் (தேர்வு முடிவுகள்) வெளியிடப்பட்டது. இவர்களுக்கான கலந்தாய்வு நேற்று (ஜனவரி 28) நடைபெற்றது. 

இந்த நிலையில், ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ மூலம்‌ தெரிவு செய்யப்பட்ட 33 நேரடி நியமன "வட்டாரக்‌ கல்வி அலுவலர்களுக்கு" பணி நியமன ஆணைகளை பள்ளிக்‌ கல்வித்‌ துறை அமைச்சர்‌ ‌அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். மதுரை, கலைஞர்‌ நூற்றாண்டு நூலக அரங்கத்தில்‌ இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 

 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
“மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
Indian Railways: பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்
இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை!தலையில் பலத்த காயம்! தற்போதைய நிலை என்ன? | La. Ganesan Hospitalized

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
“மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
Indian Railways: பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை..  பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை.. பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
Operation Sindoor: ‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
அனைத்து அரசு கல்லூரிகளிலும் புதிய குழு: மாணவர்களுக்கு விழிப்புணர்வு, சமூக மாற்றத்துக்கான தொடக்கம்!
அனைத்து அரசு கல்லூரிகளிலும் புதிய குழு: மாணவர்களுக்கு விழிப்புணர்வு, சமூக மாற்றத்துக்கான தொடக்கம்!
ADMK DMDK: கூட்டணிக்கு ஓகே.. ஆனால்..! எடப்பாடிக்கு பிரேமலதா விஜயகாந்த் போட்ட கண்டிஷன் - என்னென்ன?
ADMK DMDK: கூட்டணிக்கு ஓகே.. ஆனால்..! எடப்பாடிக்கு பிரேமலதா விஜயகாந்த் போட்ட கண்டிஷன் - என்னென்ன?
Embed widget