காஞ்சிபுரம் இளைஞர்களே! IAS, IPS கனவா? மீனவ இளைஞர்களுக்கான இலவச பயிற்சி! உடனே விண்ணப்பியுங்கள்!
"காஞ்சிபுரம் இளைஞர்களே IAS, IPS போன்ற குடிமைப் பணிகளில் சேர்வதற்கான சிறப்பு பயிற்சி வகுப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது"

"காஞ்சிபுரம் இளைஞர்களே IAS, IPS போன்ற குடிமைப் பணிகளில் சேர்வதற்கான சிறப்பு பயிற்சி வகுப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது"
ஆயத்த பயிற்சி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மீனவசமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணிகளில் சேருவதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சி அளித்தல் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசாணை எண்.177, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை, நாள் 13.09.2017 –ன்படி மீனவ சமுதாயத்தை சார்ந்த 20 பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய குடிமைப்பணிகளுக்கான போட்டித்தேர்வில் கலந்து கொள்வதற்கான ஆயத்த பயிற்சியை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
பயிற்சி பெறுவது எப்படி ?
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். 2025-26 ஆம் ஆண்டில் இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் (Application Form) மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை (Guidelines) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் விலையின்றி பெற்று கொள்ளலாம்.
கடைசி தேதி என்ன ?
விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணையதளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரியில் உள்ள காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 25.11.2025 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
அலுவலக முகவரி : மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், எண்.2/601A, கிழக்கு கடற்கரை சாலை, சின்ன நீலாங்கரை,(நேர் ஐஸ் பேக்டரி பஸ் நிறுத்தம், சென்னை – 600 115. அலுவலக தொலைபேசி எண்: 044-24494247 .






















