மேலும் அறிய

கரூர்: 50 வயது பெண் விஷம் குடித்து தற்கொலை - போலீசார் விசாரணை

கடந்த 2 ஆண்டுகளாக பழனியம்மாள் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளாராம்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள ரெத்தினகிரீசுவரர் மலைக்கோவிலில் ரோப்கார் அமைக்கப்பட்டு வரும் கட்டிடத்தின் அருகே பெண் ஒருவர் இறந்த நிலையில் நேற்று கிடந்துள்ளார். இதைப் பார்த்த பொதுமக்கள் அவர் விஷம் குடித்து இறந்து கிடப்பதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

 


கரூர்: 50 வயது பெண் விஷம் குடித்து தற்கொலை - போலீசார் விசாரணை

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரித்த போது இறந்த பெண் குளித்தலை அருகே உள்ள வளையப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராசு என்பவரின் மனைவி பழனியம்மாள் (வயது 50) என்பதும், ராசு கரூர் மாவட்டம், துக்காச்சி மூலக்கடை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் உதவியாளராக பணிபுரிவது தெரியவந்துள்ளது. ராசுவுக்கும், பழனியம்மாளுக்கும் கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். 

கடந்த 2 ஆண்டுகளாக பழனியம்மாள் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளாராம். இந்த நிலையில் ஆடி மாதம் குல தெய்வ வழிபாடு செய்வதற்காக கரூரில் இருந்து வளையப்பட்டிக்கு ராசு மற்றும் அவரது மனைவி பழனியம்மாள் ஆகியோர் நேற்று முன்தினம் வந்துள்ளனர். அன்று மாலை குளித்தலையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்வதாக பழனியம்மாள் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

இதன் பின்னர் அவர் வீட்டிற்கு செல்லவில்லையாம். இந்த நிலையில் அய்யர்மலையில் உள்ள ரோப்பகார் கட்டிடத்தின் அருகே விஷமருந்து குடித்து இறந்துள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ராசு கொடுத்த புகாரின் பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பழனியம்மாள் உடல் அருகே கிடந்த ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

50 வயது மதிக்கத்தக்க பழனியம்மாள்  குளித்தலை அய்யர்மலை அருகே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது நான்கு மகள்கள் மற்றும் அவரது கணவர் உட்பட அப்பகுதி பொதுமக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் இத்தனையாவது இடமா தற்கொலையில்..? 

கடந்த 5 ஆண்டுகளில் அதிக தற்கொலைகள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் தமிழகமும், மூன்றாவது இடத்தில் மேற்கு வங்கமும் இருந்து வருகின்றது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி, திருவள்ளூர் மாணவி சரளா ஆகியோர் தற்கொலை சம்பவங்கள் தமிழகத்தையே அதிர வைத்தன. தொடர்ந்து மாமல்லப்புரம், விக்கிரவாண்டி, மேட்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சிகளும் பலருக்கும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டாகிராமில் ஆபாசப் படம் , அவதூறு !! சென்னையில் பட்டதாரி பெண்ணை மிரட்டிய வாலிபர்
இன்ஸ்டாகிராமில் ஆபாசப் படம் , அவதூறு !! சென்னையில் பட்டதாரி பெண்ணை மிரட்டிய வாலிபர்
கள்ளக் காதலை துண்டித்த பூ வியாபாரியின் மனைவி கொடூர கொலை !! மாடியில் இருந்து குதித்த காதலன்
கள்ளக் காதலை துண்டித்த பூ வியாபாரியின் மனைவி கொடூர கொலை !! மாடியில் இருந்து குதித்த காதலன்
மகன் கைது பயம் !! ரூ.50 ஆயிரம் 'ஜி-பே' நகைகள் பறிப்பு !! சென்னையில் சிக்கிய போலி போலீசார்
மகன் கைது பயம் !! ரூ.50 ஆயிரம் 'ஜி-பே' நகைகள் பறிப்பு !! சென்னையில் சிக்கிய போலி போலீசார்
போலீஸ் உடையில் மிருகம் !! சிறுவனுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த தலைமை காவலர்
போலீஸ் உடையில் மிருகம் !! சிறுவனுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த தலைமை காவலர்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: அதிகாரிகளுக்கு நோ..! மக்கள் வரி பணத்தில் ஹேர் ஸ்டைலிஸ்டிற்கு ட்ரிப்பா? CM விஜய்க்கு சரமாரி கேள்வி
அதிகாரிகளுக்கு நோ..! மக்கள் வரி பணத்தில் ஹேர் ஸ்டைலிஸ்டிற்கு ட்ரிப்பா? CM விஜய்க்கு சரமாரி கேள்வி
Singappen Special Force: CM விஜயின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா ரத்து ஏன்? இதுதான் காரணமா?
CM விஜயின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா ரத்து ஏன்? இதுதான் காரணமா?
TN Weather Update: சென்னையை சூழ்ந்த கருமேகங்கள், 8 மாவட்டங்களில் இன்று கனமழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையை சூழ்ந்த கருமேகங்கள், 8 மாவட்டங்களில் இன்று கனமழை - தமிழக வானிலை அறிக்கை
IPL Qualifier 2: கடைசியா ஒரு ஆட்டம்! இறுதிப்போட்டியில் காலடி வைப்பது யார்? ராஜஸ்தானை குஜிலிமஸ்து செய்யுமா குஜராத்?
IPL Qualifier 2: கடைசியா ஒரு ஆட்டம்! இறுதிப்போட்டியில் காலடி வைப்பது யார்? ராஜஸ்தானை குஜிலிமஸ்து செய்யுமா குஜராத்?
பட்ஜெட் விலைதான்! 215 கிலோமீட்டர் மைலேஜ் தரும் Tata Tiago EV Facelift அறிமுகம் - ரேட் எவ்ளோ?
பட்ஜெட் விலைதான்! 215 கிலோமீட்டர் மைலேஜ் தரும் Tata Tiago EV Facelift அறிமுகம் - ரேட் எவ்ளோ?
பத்திர பதிவு செய்யப்போறீங்களா.! பொதுமக்கள் எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்ட பத்திர பதிவுத்துறை
பத்திர பதிவு செய்யப்போறீங்களா.! பொதுமக்கள் எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்ட பத்திர பதிவுத்துறை
EPS ADMK : பழைய பதவியை கொடுக்க முடியாது.! ஷாக் கொடுத்த இபிஎஸ்- தவித்து நிற்கும் அதிமுக மாஜிக்கள்
பழைய பதவியை கொடுக்க முடியாது.! ஷாக் கொடுத்த இபிஎஸ்- தவித்து நிற்கும் அதிமுக மாஜிக்கள்
இன்ஸ்டாகிராமில் ஆபாசப் படம் , அவதூறு !! சென்னையில் பட்டதாரி பெண்ணை மிரட்டிய வாலிபர்
இன்ஸ்டாகிராமில் ஆபாசப் படம் , அவதூறு !! சென்னையில் பட்டதாரி பெண்ணை மிரட்டிய வாலிபர்
Embed widget