மேலும் அறிய

“சாராய வியாபாரிகளால் நடந்த 2 கொலைகள்” மயிலாடுதுறையில் அடுத்தடுத்து அதிரடிகள்..!

மயிலாடுதுறை கொலை வழக்கில் சாராய வியாபாரிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பெரம்பூர் காவல் ஆய்வாளர் மற்றும் உளவுப்பிரிவு காவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் இரட்டை கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சாராய வியாபாரிகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பணியில் மெத்தனமாக இருந்ததாக பெரம்பூர் காவல் ஆய்வாளர் நாகவள்ளி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் உளவுப்பிரிவு காவல் ஒருவரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொலை செய்ய சாராய வியாபாரிகள் 

மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முட்டம் கிராமத்தில் கடந்த பிப்ரவரி 14 -ஆம் தேதி 25 வயதான ஹரிஷ், பொறியியல் கல்லூரி மாணவர் 20 வயதான ஹரிசக்தி ஆகிய இரண்டு இளைஞர்களும் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். இவர்கள் இருவரும் அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதை தட்டிக் கேட்டதாகவும் அதன் சாராய விளக்குகள் வியாபாரிகள் இவர்கள் இருவரையும் படுகொலை செய்தனர் என பொதுமக்கள் தெரிவித்தனர்.


“சாராய வியாபாரிகளால் நடந்த 2 கொலைகள்” மயிலாடுதுறையில் அடுத்தடுத்து அதிரடிகள்..!

பொதுமக்கள் போராட்டம் 

இந்த இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்ட வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்களும், இறந்த இளைஞர்களின் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பெரம்பூர் காவல் நிலையத்தை சேர்ந்தோர் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டனர் என்றும் பொதுமக்கள் அழுத்தமாக குற்றச்சாட்டை பதிவு செய்தனர்.  

ஆறு பேர் கைது

அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார். இதனை அடுத்து பெரம்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை மூன்று தனிப்படை அமைத்து தேடி வந்தனர். கொலை தொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த கள்ளச்சாராய வியாபாரிகள் ஐவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த இரட்டைக்கொலை வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகளை தப்பிக்க வைக்க உதவியதாக முட்டம் வடக்கு தெருவை சேர்ந்த கலையரசன் என்பவரது மகன் சஞ்சய் என்ற இளைஞரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு பின்னர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


“சாராய வியாபாரிகளால் நடந்த 2 கொலைகள்” மயிலாடுதுறையில் அடுத்தடுத்து அதிரடிகள்..!

காவல் ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் 

இந்நிலையில் பெரம்பூர் காவல் ஆய்வாளராக உள்ள நாகவள்ளி பணியில் மெத்தனமாக இருந்தாக கூறி காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தஞ்சை மாவட்டம் சுவாமிமலை காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த மலைச்சாமியை பெரம்பூர் காவல் ஆய்வாளராக நியமித்து தஞ்சை சரக டிஐஜி ஹியாவுல் ஹக் உத்தரவிட்டுள்ளார்.


“சாராய வியாபாரிகளால் நடந்த 2 கொலைகள்” மயிலாடுதுறையில் அடுத்தடுத்து அதிரடிகள்..!

உளவுப்பிரிவு காவலர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்

இதனியையே பெரம்பூர் காவல்நிலையத்தில் உளவுப்பிரிவு காவலராக பணியில் இருந்த காவலர் பிரபாகரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதாக மாவட்ட அட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பெரம்பூர் காவல் நிலையத்தில் தொடர்ந்து ஆறு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்ற உளவுப்பிரிவு காவலர் பிரபாகரன் இடமாற்றம் செய்ய வேண்டும். இவரது தொலைபேசியை எண்களை ஒரு மூன்று ஆண்டு காலத்திற்கு ஆய்வு செய்தாலே சாராயத் தொழில் அதிபர்களின் பரிமாற்ற தொடர்புகள் தெரியவரும். மேலும் இவர் மூலமாக மாமூல் பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வருகின்ற எஸ்பி காவல் ஆய்வாளர் மற்றும் சில அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கூறி வந்த நிலையில் தற்போது இவர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manoj Death Funeral: மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
Karuppasamy Pandian Death: அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணிசெல்வப்பெருந்தகையை மாற்ற முடிவு? அண்ணாமலை IPS, -க்கு போட்டியாக IAS! சசிகாந்த்தை டிக் அடித்த ராகுல்Shihan Hussaini Vijay | குரு துரோகியா விஜய்? ”டிராகனுக்கு டைம் இருக்கு ஹுசைனியை பாக்க மனமில்லை”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manoj Death Funeral: மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
Karuppasamy Pandian Death: அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
ரூ.25  லட்சம் புஸ்....! கட்டும்போதே சரிந்து விழுந்த நிழற்குடை... சிக்கலில் சிக்கிய திமுக எம்எல்ஏ
ரூ.25 லட்சம் புஸ்....! கட்டும்போதே சரிந்து விழுந்த நிழற்குடை... சிக்கலில் சிக்கிய திமுக எம்எல்ஏ
இலையில் மலரும் தாமரை.. இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
கூட்டணிக்கு ரெடியான இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
மதுரையில் பழிக்குப்பழி மற்றும் வழிப்பறி செய்வதற்காக வாள்களுடன் சுற்றித்திரிந்தவர்கள் கைது !
மதுரையில் பழிக்குப்பழி மற்றும் வழிப்பறி செய்வதற்காக வாள்களுடன் சுற்றித்திரிந்தவர்கள் கைது !
திரையுலகில் அதிர்ச்சி... இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணம்! காரணம் என்ன?
Manoj Passed Away: திரையுலகில் அதிர்ச்சி... இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணம்! காரணம் என்ன?
Embed widget