மேலும் அறிய

வேறொருவர் மனைவியுடன் தகாத உறவு..அவமானத்தால் இப்படி செய்தேன் - கைதானவர் அதிர்ச்சி வாக்குமூலம்

விழுப்புரம் அருகே வேறொருவர் மனைவியுடன் கள்ளதொடர்பில் இருந்தவரை வெட்டி கொலை செய்த கணவன்.

விழுப்புரம்: மனைவியுடன் வைத்திருந்த கள்ளத்தொடர்பை கைவிடாததால் வெட்டிக்கொன்றேன் என்று விவசாயி கொலை வழக்கில் கைதான லாரி உரிமையாளர், போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

வாழை தோட்டத்தில் விவசாயி கொலை

விழுப்புரம் அருகே உள்ள தாதம்பாளையத்தை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 39), விவசாயி. இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு அதே கிராமத்தில் உள்ள நிலத்தில் பிணமாக கிடந்தார். அவரது தலை, கழுத்தில் வெட்டுக்காயங்கள் இருந்தன.

இதுகுறித்த தகவல் அறிந்த வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில், சத்யராஜை யாரோ வெட்டிக்கொலை செய்திருப்பது தெரியவந்தது. மேலும் அவரை கொலை செய்தவர்கள் யார், அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக சத்யராஜின் உறவினர்கள், நண்பர்கள், அவரது குத்தகை நிலத்திற்கு அருகில் நிலம் வைத்துள்ளவர்கள் மற்றும் கிராம மக்கள் என பலரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கள்ளத்தொடர்பு

இதில் தாதம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வீரப்பன் மகனான லாரி உரிமையாளர் சரவணன் (39) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஏனெனில் அவரது மனைவிக்கும், சத்யராஜிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததும், இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் சத்யராஜை சரவணன் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டதோடு சரவணனை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

சுடுகாட்டில் மறைந்திருந்த குற்றவாளி 

இந்நிலையில் தாதம்பாளையம் சுடுகாடு பகுதியில் பதுங்கியிருந்த சரவணனை நேற்று முன்தினம் காலை போலீசார் மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துவந்து அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர். விசாரணையில் சத்யராஜை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து, கொலைக்கான காரணம் குறித்து சரவணன், போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

போலீசில் பரபரப்பு வாக்குமூலம்

எனது மனைவிக்கும், சத்யராஜிக்கும் கடந்த சில மாதங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனை நான் பலமுறை கண்டித்தும் அவர்கள் இருவரும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. நான் வேலைக்கு செல்லும்போது இருவரும் தனிமையில் சந்தித்து கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளனர். சம்பவத்தன்று மதியம், இதுதொடர்பாக நான் எனது மனைவியை கண்டித்தேன். இதனால் எங்கள் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதில் எனது மனைவி, என்னிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். நான் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. அன்று இரவு 10 மணி வரை ஆகியும் எனது மனைவி, வீட்டுக்கு வரவில்லை. இவர்களது கள்ளக்காதல் விவகாரத்தினால் எனக்கு மிகப்பெரிய அவமானம் ஏற்பட்டது.

சத்யராஜின் நிலத்தில்தான் அவருடன் எனது மனைவியும் இருக்க வேண்டும் என்று நினைத்த நான், இருவரையும் அங்கு வைத்தே தீர்த்துக்கட்ட முடிவு செய்து கொடுவா கத்தியை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சத்யராஜின் நிலத்திற்குச் சென்றேன். அங்கு எனது மனைவி இல்லை, சத்யராஜ் மட்டும் இருந்தார். அவரிடம் எனது மனைவியுடன் வைத்திருக்கும் கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறினேன். இதனால் சத்யராஜிக்கும், எனக்கும் கடும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது சத்யராஜ், என்னை தகாத வார்த்தையால் திட்டினார்.

இதனால் ஆத்திரமடைந்த நான், தான் வைத்திருந்த கொடுவா கத்தியால் சத்யராஜின் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினேன். இதில் அவர் இறந்ததும் நான் ஒன்றும் தெரியாததுபோல் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டேன். ஆனால் போலீசார் என்னை எப்படியோ கண்டுபிடித்துவிட்டனர். இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் கூறப்பட்டிருந்தது.

லாரி உரிமையாளர் கைது

இதையடுத்து சரவணன் மீது போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து அவரிடமிருந்த, கொலைக்கு பயன்படுத்திய கொடுவா கத்தி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் சரவணனை போலீசார், விழுப்புரம் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி தி.மு.க. வழிதான்! சந்திரசேகர்ராவ் போட்ட புது ஸ்கெட்ச்!  சென்னைக்கு வந்த பி.ஆர்.எஸ். நிர்வாகிகள்!
இனி தி.மு.க. வழிதான்! சந்திரசேகர்ராவ் போட்ட புது ஸ்கெட்ச்! சென்னைக்கு வந்த பி.ஆர்.எஸ். நிர்வாகிகள்!
Breaking News LIVE, Sep 26: தமிழக ஆழ்கடலில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஒ.என்.ஜி.சி, வேதாந்த நிறுவனங்கள் போட்டி 
Breaking News LIVE, Sep 26: தமிழக ஆழ்கடலில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஒ.என்.ஜி.சி, வேதாந்த நிறுவனங்கள் போட்டி 
இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவுக்கு மயிலாடுதுறை எம்பி சுதா கடிதம்: என்ன விஷயம்?
இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவுக்கு மயிலாடுதுறை எம்பி சுதா கடிதம்: என்ன விஷயம்?
Tamilnadu RoundUp: மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்! முதல்வருக்கு கமல் நன்றி! தற்போது வரை தமிழ்நாட்டில்!
Tamilnadu RoundUp: மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்! முதல்வருக்கு கமல் நன்றி! தற்போது வரை தமிழ்நாட்டில்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Savukku Shankar : சவுக்கு சங்கர் குண்டாஸ் ரத்து! உடனே விடுதலை பண்ணுங்க.. ஆனாThanjavur Mayor Angry : ”வேலை நேரத்துல PHONE-ஆ”டென்ஷனாகி பிடுங்கிய மேயர் பதறிய பெண் அதிகாரிKenisha Reveals Jayam Ravi Relationship : ”DIVORCE நோட்டீஸ் அனுப்பிட்டு! ஜெயம் ரவி என்னிடம் வந்தார்”Jayam Ravi Aarthi Issue | வீட்டுக்குள் விடாத ஆர்த்தி?ஜெயம் ரவி பரபரப்பு புகார்!”காரை மீட்டு கொடுங்க”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி தி.மு.க. வழிதான்! சந்திரசேகர்ராவ் போட்ட புது ஸ்கெட்ச்!  சென்னைக்கு வந்த பி.ஆர்.எஸ். நிர்வாகிகள்!
இனி தி.மு.க. வழிதான்! சந்திரசேகர்ராவ் போட்ட புது ஸ்கெட்ச்! சென்னைக்கு வந்த பி.ஆர்.எஸ். நிர்வாகிகள்!
Breaking News LIVE, Sep 26: தமிழக ஆழ்கடலில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஒ.என்.ஜி.சி, வேதாந்த நிறுவனங்கள் போட்டி 
Breaking News LIVE, Sep 26: தமிழக ஆழ்கடலில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஒ.என்.ஜி.சி, வேதாந்த நிறுவனங்கள் போட்டி 
இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவுக்கு மயிலாடுதுறை எம்பி சுதா கடிதம்: என்ன விஷயம்?
இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவுக்கு மயிலாடுதுறை எம்பி சுதா கடிதம்: என்ன விஷயம்?
Tamilnadu RoundUp: மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்! முதல்வருக்கு கமல் நன்றி! தற்போது வரை தமிழ்நாட்டில்!
Tamilnadu RoundUp: மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்! முதல்வருக்கு கமல் நன்றி! தற்போது வரை தமிழ்நாட்டில்!
சென்னை வானில் வட்டமடித்து தத்தளித்த விமானங்கள்.. பெங்களூருவில் தரை இறக்கம்.. காரணம் என்ன?
சென்னை வானில் வட்டமடித்து தத்தளித்த விமானங்கள்.. பெங்களூருவில் தரை இறக்கம்.. காரணம் என்ன?
Chennai Rains: இரவெல்லாம் வெளுத்த மழை! வெள்ளக்காடாய் மாறிய சாலைகள் - சென்னைவாசிகள் அவதி
Chennai Rains: இரவெல்லாம் வெளுத்த மழை! வெள்ளக்காடாய் மாறிய சாலைகள் - சென்னைவாசிகள் அவதி
Savukku sankar : “எப்போதும் வீரியம் குறையாது” - சலங்கை கட்டிய சவுக்கு சங்கர் !
Savukku sankar : “எப்போதும் வீரியம் குறையாது” - சலங்கை கட்டிய சவுக்கு சங்கர் !
Chennai Rains:
Chennai Rains: "ரேஸ் ரோட் vs ரெயின் ரோட்" சென்னை சாலைகளை கேலி செய்த கார்த்தி சிதம்பரம்!
Embed widget