![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Crime: மேல்மலையனூர் அருகே குடிப்பழக்கத்தை கண்டித்த தந்தையை கொன்ற மகன்
விழுப்புரம்: மேல்மலையனூர் அருகே குடிப்பழக்கத்தை கண்டித்த தந்தையை கொலை செய்த மகன்
![Crime: மேல்மலையனூர் அருகே குடிப்பழக்கத்தை கண்டித்த தந்தையை கொன்ற மகன் Villupuram crime news Son killed father who condemned his drinking near Melmalayanur TNN Crime: மேல்மலையனூர் அருகே குடிப்பழக்கத்தை கண்டித்த தந்தையை கொன்ற மகன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/06/2f12924638e596e1440ea4fe1655c3651678089251506490_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே ஈயக்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 65), விவசாயி. இவரது மகன் சுப்பிரமணி (46). இவரது 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. அதிலிருந்து சுப்பிரமணி வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வருவார். இதனால் சுப்பிரமணிக்கும், அவரது மனைவி ராஜகுமாரிக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இந்நிலையில் இன்று காலையில் பாலகிருஷ்ணன் வீட்டில் இருந்த போது சுப்பிரமணி குடித்துவிட்டு வந்து தகராறு செய்துள்ளார். வேலைக்கு செல்லாமல் இப்படி குடித்துவிட்டு தகராறு செய்கிறாயே என்று பாலகிருஷ்ணன் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி அருகில் இருந்த கத்தியை எடுத்து பாலகிருஷ்ணனின் மார்பு, வயிறு பகுதிகளில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த பாலகிருஷ்ணன் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாலகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தையை கொலை செய்த மகன் சுப்பிரமணியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற தந்தையை குடிபோதையில் மகன் கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)