மேலும் அறிய

திண்டிவனம்: கல்குவாரியில் குளிக்கச்சென்ற பேரன், பேத்தி, பாட்டி உள்ளிட்ட 4 பேர் உயிரிழப்பு

விழுப்புரம் : திண்டிவனம் அருகே கல்குவாரியில் குளிக்கச்சென்ற மூதாட்டி உட்பட பேரன், பேத்தி என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கல்குவாரியில் குளிக்கச்சென்ற மூதாட்டி உட்பட பேரன், பேத்தி என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பெருமுக்கல் பகுதியை சேர்ந்த பூங்காவனம் மனைவி புஷ்பா(60). இவர் தனது மகள் விஜயஸ்ரீ, மருமகன் சாமிநாதன்(லாரி ஓட்டுனர்) இவர்கள் குடும்பத்துடன் திண்டிவனம் அருகே உள்ள தென்களவாய் கிராமத்தில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் தனது குழந்தைக்கு பள்ளி விடுமுறை என்பதால் விஜயஸ்ரீ அவரது தாயார் வீட்டிற்கு அனுப்பி உள்ளார். சாமிநாதனின் குழந்தைகள் 3 பேரும் திண்டிவனத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகள் படித்து வருகின்றனர். வினோதினி(13), ஏழாம் வகுப்பு. ஷாலினி ஐந்தாம் வகுப்பும், (10), கிருஷ்ணன்(8) மூன்றாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.


திண்டிவனம்: கல்குவாரியில் குளிக்கச்சென்ற பேரன், பேத்தி, பாட்டி உள்ளிட்ட 4 பேர் உயிரிழப்பு

இந்நிலையில் பாட்டி வீட்டிற்கு சென்ற குழந்தைகள், பாட்டி புஷ்பாவுடன் அப்பகுதியில் உள்ள செயல்படாத கல் குவாரியில் துணி துவைத்து விட்டு குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது பேரக்குழந்தைகள் வினோதினி, ஷாலினி, கிருஷ்ணன் ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி தத்தளித்த படி உயிருக்கு போராடி உள்ளனர். இவரை காப்பாற்ற வேண்டுமென மூதாட்டியும் முற்பட்ட போது மூதாட்டி புஷ்பாவும் நீரில் மூழ்கி உள்ளார்.

கூச்சல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் தண்ணீரில் இறங்கி மூதாட்டி மற்றும் குழந்தைகளை தேடினர். பின்னர் புஷ்பா மற்றும் வினோதினி, ஷாலினி, கிருஷ்ணன் ஆகிய 4 பேரையும் உயிரிழந்த நிலையில் மீட்டனர். உடலைக் கைப்பற்றிய பிரம்மதேசம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூதாட்டி பேரன், பேத்திகள் என 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


திண்டிவனம்: கல்குவாரியில் குளிக்கச்சென்ற பேரன், பேத்தி, பாட்டி உள்ளிட்ட 4 பேர் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் அதிக அளவில் பெருமுக்கல் பகுதியில் கல் குவாரிகள் இயங்கி வருகிறது. குறிப்பாக செயல்படாத கல்குவாரிகள் அடைக்கப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. மழையின் காரணமாக கல்குவாரி பள்ளத்தில் மழை நீர் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் துணிகள் துவைப்பதற்கும், குளிப்பதற்கும் செல்கின்றனர்.

இந்நிலையில் கல்குவாரியின் ஆழம் தெரியாமல் நீரில் மூழ்கி பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் இப்பகுதியில் தனி கவனம் செலுத்தி கல் குவாரிகளுக்கு கட்டுபாடுகளை விதித்தும், செயல்படாத கல்குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

நண்பனைக் காப்பாற்றச் சென்று உயிரை விட்ட சோகம்... விஷவாயு தாக்கி ஒருவர் பலி; ஆபத்தான நிலையில் 3 பேர்..
நண்பனைக் காப்பாற்றச் சென்று உயிரை விட்ட சோகம்... விஷவாயு தாக்கி ஒருவர் பலி; ஆபத்தான நிலையில் 3 பேர்..
முதலிரவு முதல் பிரச்சனை !! மனைவியை 6 இடங்களில் வெட்டி சாய்த்த கணவன்
முதலிரவு முதல் பிரச்சனை !! மனைவியை 6 இடங்களில் வெட்டி சாய்த்த கணவன்
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு
தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
Mk Stalin Kolathur : கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
Aadi Perukku holiday Bus : ஆடிப்பெருக்கு, வார விடுமுறைக்கு வெளியூர் செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்துகள் இயக்கம் - எங்கிருந்து எங்கே?
ஆடிப்பெருக்கு, வார விடுமுறைக்கு வெளியூர் செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்துகள் இயக்கம் - எங்கிருந்து எங்கே?
Dhanush : ‘ஒரு தமிழனா!’ யாரு நீங்க தமிழனா சார்?’ நடிகர் தனுஷை கண்டிக்கும் தமிழர்கள்..!
‘ஒரு தமிழனா!’ யாரு நீங்க தமிழனா சார்?’ நடிகர் தனுஷை கண்டிக்கும் தமிழர்கள்..!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Embed widget