மேலும் அறிய

மயிலாடுதுறையில் வாலிபர் கொலை: ரவுடி உட்பட மூவருக்கு ஆயுள் தண்டனை - மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மயிலாடுதுறை இளைஞர் கொலை வழக்கில், சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

மயிலாடுதுறையில் கடந்த 2020-ஆம் ஆண்டு நிகழ்ந்த பரபரப்பான கொலை வழக்கில், சரித்திர பதிவேடு குற்றவாளி (History Sheeter) உட்பட மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

வழக்கின் பின்னணி

மயிலாடுதுறை காவல் சரகத்திற்குட்பட்ட கூறைநாடு, திருவள்ளுவர்புரம் ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன் என்பவரது மகன் 26 வயதான ராஜேந்திரன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தெட்சணாமூர்த்தி என்பவருக்கும் இடையே கடந்த 07.05.2020 அன்று வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலின் தொடர்ச்சியாக, ராஜேந்திரன் தனது தெருவில் உள்ள பொது இடத்தில் ஆபாச வார்த்தைகளால் பேசி சத்தம் போட்டுக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அதே தெருவில் வசித்து வந்த எட்டப்பராஜன் மகன் 36 வயதான மாரிசெல்வம் என்பவர் கண்டித்துள்ளார்.

கத்தியால் குத்தி கொலை

மாரிசெல்வம் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், தனது நண்பர்களான கூறைநாடு கிட்டப்பா தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் 24 வயதான சேது மற்றும் ராஜேந்திரன் மகன் 21 வயதான சூர்யா ஆகியோருடன் சேர்ந்து மாரிசெல்வத்தை கத்தியால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்த கொடூரத் தாக்குதலில் பலத்த காயமடைந்த மாரிசெல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து மாரிசெல்வத்தின் மனைவி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜேந்திரன், சேது மற்றும் சூர்யா ஆகிய மூவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

போலீஸ் விசாரணை மற்றும் கைது

அப்போதைய மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிங்காரவேலு இவ்வழக்கின் புலன் விசாரணையை மேற்கொண்டு, தலைமறைவாக இருந்த எதிரிகள் மூவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினார். தொடர்ந்து அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதில் மூன்றாவது எதிரியான சூர்யா என்பவர், தொடர்ந்து பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததால், அவர் மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் 'போக்கிரி சரித்திர பதிவேடு' (Rowdy History Sheet) துவங்கப்பட்டு, காவல்துறையினரால் தீவிரமாகத் கண்காணிக்கப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றத் தீர்ப்பு

இவ்வழக்கின் விசாரணை மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சத்தியமூர்த்தி முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கின் அனைத்து சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு, அரசுத் தரப்பு மற்றும் எதிரித் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று (03.01.2026) தீர்ப்பு வழங்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட

 * ராஜேந்திரன் (26)

 * சேது (24)

 * சூர்யா (21)

ஆகிய மூவரும் குற்றவாளிகள் என உறுதி செய்த நீதிபதி, அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்பைத் தொடர்ந்து குற்றவாளிகள் மூவரும் பலத்த பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

காவல்துறையினருக்கு பாராட்டு

இவ்வழக்கில் சிறப்பாக வாதாடி குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தந்த அரசு வழக்கறிஞர் இராம.சேயோனுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.

மேலும், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த முன்னாள் ஆய்வாளர் சிங்காரவேலு, தற்போதைய ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் நீதிமன்றப் பணிகளைச் சிறப்பாகக் கவனித்த காவலர் மாரிமுத்து ஆகியோரை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரில் அழைத்து வெகுவாகப் பாராட்டினார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
Big Boss Season 9: எல்லை மீறிய கம்மூ-பாரு.. ”வெளியே கிளம்புங்க’ ரெட் கார்ட்டை தூக்கிய விஜய் சேதுபதி
Big Boss Season 9: எல்லை மீறிய கம்மூ-பாரு.. ”வெளியே கிளம்புங்க’ ரெட் கார்ட்டை தூக்கிய விஜய் சேதுபதி
US Captures Venezuela President: வெனிசுலா அதிபர் மதுரோவை மனைவியுடன் சிறைபிடித்த அமெரிக்கா; நாடு கடத்திய ட்ரம்ப்; பெரும் பதற்றம்
வெனிசுலா அதிபர் மதுரோவை மனைவியுடன் சிறைபிடித்த அமெரிக்கா; நாடு கடத்திய ட்ரம்ப்; பெரும் பதற்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
Big Boss Season 9: எல்லை மீறிய கம்மூ-பாரு.. ”வெளியே கிளம்புங்க’ ரெட் கார்ட்டை தூக்கிய விஜய் சேதுபதி
Big Boss Season 9: எல்லை மீறிய கம்மூ-பாரு.. ”வெளியே கிளம்புங்க’ ரெட் கார்ட்டை தூக்கிய விஜய் சேதுபதி
US Captures Venezuela President: வெனிசுலா அதிபர் மதுரோவை மனைவியுடன் சிறைபிடித்த அமெரிக்கா; நாடு கடத்திய ட்ரம்ப்; பெரும் பதற்றம்
வெனிசுலா அதிபர் மதுரோவை மனைவியுடன் சிறைபிடித்த அமெரிக்கா; நாடு கடத்திய ட்ரம்ப்; பெரும் பதற்றம்
CM Stalin on TAPS: புத்தாண்டு, பொங்கல் பரிசாக 'TAPS'; திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும்.! முதலமைச்சர் உறுதி
புத்தாண்டு, பொங்கல் பரிசாக 'TAPS'; திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும்.! முதலமைச்சர் உறுதி
ADMK vs TVK: விஜய் மீது செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி.. தவெக மீது அட்டாக்கை ஆரம்பிக்கும் அதிமுக!
ADMK vs TVK: விஜய் மீது செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி.. தவெக மீது அட்டாக்கை ஆரம்பிக்கும் அதிமுக!
குடும்பத்தை விட்டு பிரிய வேண்டாம்... உங்க சொந்த ஊரிலேயே வேலை வாய்ப்பு: முழு விபரங்கள் இங்கே!!!
குடும்பத்தை விட்டு பிரிய வேண்டாம்... உங்க சொந்த ஊரிலேயே வேலை வாய்ப்பு: முழு விபரங்கள் இங்கே!!!
TN New Pension Scheme: தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
Embed widget