மேலும் அறிய

பாகிஸ்தானில் இருந்து தமிழகம் வழியாக இலங்கைக்கு போதை பொருள் கடத்த முயற்சி - 10 கோடி மதிப்புள்ள கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் பறிமுதல்

கடத்தலுக்கு மூளையாக இருந்தவரும், சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவருமான கீழ வைப்பாறைச் சேர்ந்த இருதயவாசு என்பவர் தூத்துக்குடியில் கைது

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இருந்து ஒரு கோடி மதிப்புள்ள போதை பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற 7 பேரை நடுக்கடலில் மறித்து கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 கிலோ மெத்தம் பேட்டமைன் என்ற போதைப் பொருளையும் போலீசார் பறிமுதல் செய்யதுள்ளனர். இந்த கடத்தல் முயற்சிக்கு மூளையாக செயல்பட்டவர் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டார். இவர் சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.


பாகிஸ்தானில் இருந்து தமிழகம் வழியாக  இலங்கைக்கு போதை பொருள் கடத்த முயற்சி - 10 கோடி மதிப்புள்ள கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சமீபகாலமாக இலங்கைக்கு  மஞ்சள், வெங்காய விதை உள்ளிட்டவை கடத்தப்பட்டு வந்தது. இதனால் உளவுப்பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி இருந்தனர். அதே நேரத்தில் போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என்று மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சுங்கத்துறையினர், மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரும் தூத்துக்குடி கடலோர பகுதியை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் விளாத்திகுளம் அருகே வேம்பார் கடற்பகுதியை கடத்தல் கும்பல் தேர்ந்தெடுத்து, அங்கிருந்து இலங்கைக்கு பொருட்களை கடத்துவதற்கு திட்டமிட்டது. இருப்பினும் வேம்பார் கடற்பகுதியில் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் ஏற்கெனவே 2 முறை சிக்கி இருந்தனர். 

பாகிஸ்தானில் இருந்து தமிழகம் வழியாக  இலங்கைக்கு போதை பொருள் கடத்த முயற்சி - 10 கோடி மதிப்புள்ள கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் பறிமுதல்

இதற்கிடையே வேம்பார் கடற்பகுதியிலிருந்து இலங்கைக்கு மெத்தம்பேட்டமைன் என்ற போதைப் பொருள் கடத்தப்பட இருப்பதாக தூத்துக்குடி கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய் அனிதா, எஸ்ஐக்கள் வேல்ராஜ் மற்றும் போலீசார் நேற்று மாலை முதல் வேம்பார் கடற்கரை பகுதியில் ஒரு படகுடன் முகாமிட்டனர். அப்போது கடற்கரையில் இருந்து மற்றொரு படகில் ஒரு பிளாஸ்டிக் பையில் வெள்ளை நிறம் கொண்ட ஒரு பவுடர் நிரப்பப்பட்ட 5 மூட்டைகள் ஏற்றப்பட்டதை கியூ பிரிவு போலீசார் பார்த்தனர்.

அதற்குள் அந்த படகு கடலுக்குள் இலங்கை நோக்கி புறப்பட்டது. உடனே சுதாரித்துக் கொண்டு கடத்தல் கும்பல் கண்ணில் படாதவாறு சுமார் 500 மீட்டர் தூரத்தில் தாங்கள் நிறுத்தியிருந்த படகில் கியூ பிரிவு போலீசார் புறப்பட்டனர். போலீசை கவனிக்காத கடத்தல் கும்பல் மிதமான வேகத்தில் படகை செலுத்திய நிலையில் நடுக்கடலில் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். படகும், அதில் இருந்த ஒரு கிலோ எடை கொண்ட 10 மூட்டை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.


பாகிஸ்தானில் இருந்து தமிழகம் வழியாக  இலங்கைக்கு போதை பொருள் கடத்த முயற்சி - 10 கோடி மதிப்புள்ள கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் பறிமுதல்

விசாரணையில் படகில் இருந்த 7 பேர் விளாத்திகுளம் கீழ வைப்பாறைச் சேர்ந்த சிலுவை, வினிஸ்டன், கபிலன், சுபாஷ் , அஸ்வின், கிங்பன், சிப்பிகுளம், வடக்கு தெருவைச் சேர்ந்த  சைமன்  என்பது தெரியவந்தது. இந்த கடத்தலுக்கு மூளையாக இருந்தவரும், சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவருமான கீழ வைப்பாறைச் சேர்ந்த இருதயவாசு என்பவரை தூத்துக்குடியில் கைது செய்தனர். இலங்கைக்கு கடத்தப்பட இருந்த போதைப் பொருள் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் ஆகும். படகில் மொத்தம் 10 கிலோ கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் இருந்தது. இதன் இந்திய மதிப்பு ஒரு கிலோவுக்கு 10 லட்சம் வீதம், 10 கிலோவுக்கு 1 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.


பாகிஸ்தானில் இருந்து தமிழகம் வழியாக  இலங்கைக்கு போதை பொருள் கடத்த முயற்சி - 10 கோடி மதிப்புள்ள கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் பறிமுதல்

பாகிஸ்தானில் இருந்து கோவா கொண்டு வரப்பட்டதாகவும், அதனை தொடர்ந்து சாலை மார்க்கமாக தூத்துக்குடி கொண்டு வரப்பட்டு இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து க்யூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget