மேலும் அறிய

தூத்துக்குடியில் செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் மருத்துவமனை மருத்துவர் கைது

பாலியல் புகாரை தட்டிக்கேட்ட செவிலியரின் கணவர் உளிட்ட 5 பேர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புதுக்கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியை சேர்ந்த 22 வயதான பெண் ஒருவர், கோரம்பள்ளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில் இருந்த போது, மருத்துவமனை நிறுவனர் டாக்டர் சுப்பிரமணியன் என்பவர், அந்த செவிலியரை ஒரு நோயாளியின் மருத்துவ அறிக்கையை எடுத்துக்கொண்டு தனது அறைக்கு வருமாறு கூறி அங்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. 


தூத்துக்குடியில் செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் மருத்துவமனை மருத்துவர் கைது

இது குறித்து பாதிக்கப்பட்ட செவிலியர் புதுக்கோட்டை போலீசில் புகார் அளித்ததன் பேரில் காவல் உதவி ஆய்வாளர் முத்துவீரப்பன், டாக்டர் சுப்பிரமணியன் மீது பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக வழக்கு பதிவு செய்து  அவரை கைது செய்தனர். இதை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனை அவருக்கு மருத்துவ பரிசோதனைக்கு போலிசார் அழைத்து சென்றனர். இந்த நிலையில் டாக்டர் சுப்பிரமணியன் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியைதை தொடர்ந்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


தூத்துக்குடியில் செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் மருத்துவமனை மருத்துவர் கைது

தொடர்ந்து அவரிடம் தூத்துக்குடி மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிபதி ராஜ குமரேசன் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து அவரை 18 ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து இது போன்று வேறு யாரும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பாலியல் புகாரை தட்டிக்கேட்ட செவிலியரின் கணவர் உளிட்ட 5 பேர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புதுக்கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் செய்தியாளர்களிடம் கூறுகையில், தனக்கு காதல் திருமண செய்தததாக தெரிவித்த அவர், கடந்த 10 தினங்களுக்கு முன் மருத்துவமனையில் வேலைக்கு செவிலியர்கள் தேவை என்று வந்த விளம்பரத்தை பார்த்து தான் வேலைக்கு சென்ற நிலையில், அந்த ஆஸ்பத்திரியின் நிறுவனர் மருத்துவர் சுப்பிரமணியன், ஒரு நோயாளியின் மருத்துவ அறிக்கையை எடுத்துக்கொண்டு தனது மாடிஅறைக்கு வருமாறு கூறினார். அதன் அடிப்படையில் சென்றபோது அவர் அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதால், தொடர்ந்து அழுதுகொண்டே வந்து சக செவிலியர்களிடம் தெரிவித்தபோது இதை யாரிடமும் கூறவேண்டாம் என்றனர்.

தூத்துக்குடியில் செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் மருத்துவமனை மருத்துவர் கைது

மீண்டும் மருத்துவர் மாடியில் இருந்து வந்து தன்னை தனியாக அழைத்து யாரிடமும் சொல்லாதே,ஏமோசனில் தான் அப்படி நடந்து கொண்டதாக கூறி தொடர்ந்து வேலைக்கு வா என்றார். நான் வீட்டிற்கு அழுதுகொண்டே வந்து நடந்த சம்பவத்தை எனது கணவரிடம் தெரிவித்தேன். தொடர்ந்து அவர் இதுகுறித்து தட்டிக்கேட்க தனது நண்பர்களுடன் மருத்துவமனைக்கு சென்றபோது அவரை ஏமாற்றி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று கணவர் உட்பட 5 பேரும் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புதுக்கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர். இதுபோன்ற சம்பவம் எந்த பெண்ணிற்கு நடைபெறக்கூடாது என்ற அடிப்படையில் தனக்கு நீதிகிடைக்க வேண்டும் என்ற அவர், தற்போது மருத்துவர் மீது சாதாரண வழக்கு பதிவு 354 (A1 IPC ) செய்யப்பட்டு உடல்நலம் சரியில்லை என மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget