மேலும் அறிய

திருவண்ணாமலை: மூதாட்டிக்கு குளிர்பானம் கொடுத்து நகை கொள்ளை - தந்தை, மகன் உட்பட 3 பேர் கைது...!

மூதாட்டிகளை குறிவைத்து மயக்க மருந்து கொடுத்து நகை கொள்ளையடித்த தந்தை, மகன் உட்பட 3 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகே பேருந்துக்காக காத்திருந்த மூதாட்டிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து 6 சவரன் தங்க நகை கொள்ளையடித்து சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்து காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். வந்தவாசி-திண்டிவனம் சாலை அண்ணா நகரை பகுதியைச் சேர்ந்தவர் அலமேலு, இவர் கடந்த 25ஆம் தேதி வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகே மேல்மருவத்தூர் மருத்துவமனைக்கு செல்வதற்காக பேருந்திற்காக காத்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த காரில் மூன்று நபர்கள் அலமேலுவிடம், ஆசை வார்த்தை கூறி மேல்மருவத்தூருக்கு செல்கிறோம் என்று கூறி அலமேலுவை காரில் அழைத்துச் சென்றனர்.

திருவண்ணாமலை: மூதாட்டிக்கு குளிர்பானம் கொடுத்து நகை கொள்ளை - தந்தை, மகன் உட்பட 3 பேர் கைது...!

அப்போது  மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை அலமேலுவிடம் கொடுத்த நிலையில் அதை குடித்த அலமேலு சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்தார்.  பின்னர் அலமேலு அணிந்து  இருந்த 6 சவரன் தாலி சரடு, தோடு உள்ளிட்ட தங்க நகைகளை கொள்ளை அடித்து கொண்டு மயங்கிய நிலையில் இருந்த அலமேலுவை திருவள்ளுவர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள சாலையில் விட்டுவிட்டுச் சென்றனர். பின்னர் 2 மணிநேரத்திற்கு  பிறகு மயக்கம் தெளிந்த அலமேலு பெரிய பாளையத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் புகார் அளித்துள்ளார். புகாரின்  பேரில் அலமேலுவின் உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து  அலமேலுவின் கணவர் சக்கரவர்த்தி வந்தவாசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர் .அப்போது காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான கார் என்னை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இன்று காலை வந்தவாசி மும்முனி புறவழி சாலை அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது சிசிடிவி கேமராவில் பதிவான கார் வந்தது அப்போது போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை செய்தபோது காரில் இருந்த மூன்று நபர்கள் முன்னுக்கு பின்னாக பதிலளித்தனர்.

திருவண்ணாமலை: மூதாட்டிக்கு குளிர்பானம் கொடுத்து நகை கொள்ளை - தந்தை, மகன் உட்பட 3 பேர் கைது...!

பின்னர் அவர்களை வந்தவாசி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டபோது, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், அவருடைய தந்தை வாசுதேவன், உறவினரான சாரதா ஆகிய மூன்று நபர்கள்  அலமேலுவை காரில் அழைத்து சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து தங்க நகைகளை கொள்ளையடித்தது ஒப்புக்கொண்டனர். மேலும் இவர்கள் 3 நபர்கள் இதேபோல் பல பேரிடம் கொள்ளையடித்தும் பல குற்ற வழக்குகள்  இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேர்களை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 6 சவரன் தங்க நகை மற்றும் கார் பறிமுதல் செய்தனர்.  மேலும் இவர்கள் 3 பேரும் காரில் டிப்டாப்பாக குடும்பமாக சென்று 50 வயது முதல் 60 வயது வரை உள்ள மூதாட்டிகளை மட்டும் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. 

தலைப்பு செய்திகள்

காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Embed widget