மேலும் அறிய

கம்பம் அருகே யானை தந்தங்களை கடத்திய கேரள வாலிபர் உள்பட 2 பேர் கைது

கம்பம் அருகே யானை தந்தங்களை கடத்திய கேரள வாலிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் கம்பத்தில் யானை தந்தம் கடத்தப்படுவதாக மத்திய வனவிலங்கு குற்ற கட்டுப்பாட்டு பணியக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மத்திய வனவிலங்கு குற்ற கட்டுப்பாட்டு பணியக இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் கம்பம் மேற்கு வனச்சரகர் ஸ்டாலின் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேற்று மதியம் கம்பத்தில், குமுளி சாலையில் உள்ள அப்பாச்சி பண்ணை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக கர்நாடகா மாநில பதிவெண் கொண்ட மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள், சாக்குப்பையுடன் வந்தனர். இதையடுத்து அவர்களை தடுத்து நிறுத்தி, அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது 2 பேரும் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர்.

Mettur Dam: மேட்டூர் அணையின் நீர் வரத்து 392 கன அடியில் இருந்து 507 கன அடியாக அதிகரிப்பு


கம்பம் அருகே யானை தந்தங்களை கடத்திய கேரள வாலிபர் உள்பட 2 பேர் கைது

இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவர்கள் கொண்டு வந்த சாக்குப்பையை சோதனை செய்தனர். அப்போது அதனுள் 3 யானை தந்தங்கள் இருந்தன. அவற்றில் 2 தந்தங்கள் பெரியதாகவும், ஒன்று சிறியதாகவும் இருந்தது. இதைத்தொடர்ந்து யானை தந்தங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்கள் 2 பேரையும் கம்பம் கிழக்கு வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்களில் ஒருவர் தேனி மாவட்டம் கூடலூர் கன்னிகாளிபுரத்தை சேர்ந்த சுரேஷ்கண்ணன் (வயது 32) என்பதும், மற்றொருவர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கடசிகடவு பகுதியை சேர்ந்த முகேஷ்கண்ணன் (28) என்பதும் தெரியவந்தது.

CM Stalin: அண்ணா பிறந்தநாள்...127 போலீசாருக்கு அண்ணா பதங்கங்களை அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!


கம்பம் அருகே யானை தந்தங்களை கடத்திய கேரள வாலிபர் உள்பட 2 பேர் கைது

இவர்கள் யானை தந்தங்களை விற்பனைக்காக கொண்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்கண்ணன் மற்றும் முகேஷ்கண்ணனை கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு யானை தந்தங்கள் எப்படி கிடைத்தது? அவற்றை விற்பனைக்காக எங்கு கொண்டு செல்ல முயன்றார்கள்? இவர்களுடன் தொடர்புடையவர்கள் யாரேனும் இருக்கிறார்களா? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

“கோடநாடு வழக்கில் இபிஎஸ்தான் முக்கிய குற்றவாளி” - சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரான கனகராஜின் சகோதரர்

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget