மேலும் அறிய

Crime: தேனி அருகே சிறுவன் கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது - காதல் விவகாரத்தில் கொலை செய்தது அம்பலம்

சம்பவத்தன்று இரண்டு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த அவரை வழிமறித்து மறைத்து வைத்து இருந்த பட்டா கத்தியால் சரமாரியாக வெட்டினேன். அதில் அவர் இறந்து விட்டார்.

தேனி அருகே வீருசின்னம்மாள்புரத்தை சேர்ந்தவர் சரவணன். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஊஞ்சம்மாள் (41). இவர்களுடைய மகன் கமலேஸ்வரன் (18). இவர் பூதிப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 14-ந்தேதி மாலையில் வீட்டில் இருந்து இரண்டு சக்கர வாகனத்தில் வெளியே சென்ற கமலேஸ்வரன் இரவு வரை வீடு திரும்பவில்லை. மறுநாள் மாலையில் பூதிப்புரம் கல்லூருணி காடு செல்லும் சாலையில் ஒரு தனியார் தோட்டத்து கிணற்று மேட்டில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கமலேஸ்வரன் உடல் கிடந்தது. இந்த சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.கொலை செய்யப்பட்ட கமலேஸ்வரனின் தாய், பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், தனது மகன் போடேந்திரபுரத்தை சேர்ந்த தன்னாசி மகளை காதலித்ததாகவும், அதனால், தன்னாசி (50), அவருடைய மனைவி தமிழ்செல்வி (45) ஆகியோர் கொலை செய்து இருப்பதாகவும் கூறி இருந்தார்.

Crime: தேனி அருகே சிறுவன் கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது -  காதல் விவகாரத்தில் கொலை செய்தது அம்பலம்

அதன்பேரில், தன்னாசி, தமிழ்செல்வி இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். ஆனால், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய புலன் விசாரணையில், மாணவர் கமலேஸ்வரனை தன்னாசி சரமாரியாக வெட்டி கொலை செய்ததாகவும், அவருடைய மனைவி தமிழ்செல்வி, மகன் ஜெயப்பிரகாஷ் (27) ஆகியோர் இந்த கொலைக்கு உடந்தையாகவும், தூண்டுதலாகவும் இருந்ததாக தெரியவந்தது.இதையடுத்து தன்னாசி, தமிழ்செல்வி, ஜெயப்பிரகாஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களை போலீசார் தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.கைதான தன்னாசி போலீசாரிடம் பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், 'எனது மகளுடன், கமலேஸ்வரன் சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமாகி பழகி வந்தார். பின்னர் அவர் எனது மகளை காதலித்தார். இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றி வந்ததாக எனக்கு தெரியவந்தது. நான் கமலேஸ்வரனை வீட்டுக்கு சென்று கண்டித்தேன்.

Crime: தேனி அருகே சிறுவன் கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது -  காதல் விவகாரத்தில் கொலை செய்தது அம்பலம்

ஆனாலும் அவர் எனது மகளை தொடர்ந்து காதலித்து, வெளியில் அழைத்துச் சென்றதாக தெரியவந்தது. சமீபத்தில் நடந்த வீரபாண்டி திருவிழாவுக்கும் மகளை அழைத்துச் சென்றதாக கேள்விப்பட்டேன். இதனால் கமலேஸ்வரனை கொலை செய்ய முடிவு செய்தேன். சம்பவத்தன்று இரண்டு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த அவரை வழிமறித்து மறைத்து வைத்து இருந்த பட்டா கத்தியால் சரமாரியாக வெட்டினேன். அதில் அவர் இறந்து விட்டார். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் போலீசார் பிடித்து விட்டனர்' என்று வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார்   தரப்பில் கூறப்பட்டது.  மாணவர் கமலேஸ்வரனை கொலை செய்வதற்கு தன்னாசி முன்கூட்டியே திட்டம் தீட்டி செயல்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. கொலை சம்பவம் நடப்பதற்கு 4 நாட்களுக்கு முன்பே தன்னாசியின் செல்போன் எண் அணைத்து வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

Crime: தேனி அருகே சிறுவன் கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது -  காதல் விவகாரத்தில் கொலை செய்தது அம்பலம்

அது போலீசாருக்கு அவர் மீதான சந்தேகத்தை வலுப்படுத்தியது. மேலும், அவர், கொலை நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பே அந்த வழியாக நோட்டமிட்டுச் சென்றுள்ளார். அது அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த கொலை வழக்கில் தன்னாசிக்கு அவருடைய நண்பர் ஒருவர் திட்டம் தீட்டிக் கொடுத்து உடந்தையாக இருந்ததாகவும் போலீசாருக்கு தெரியவந்தது. அதன்பேரில் அவருடைய கூட்டாளியையும் போலீசார் தேடி வருகின்றனர்.கைதான தன்னாசி மீது கண்டமனூர் காவல் நிலையத்தில் 2007-ம் ஆண்டு ஒரு கொலை வழக்கு உள்ளது. மேலும், அவர் மீது திருட்டு, வழிப்பறி, மதுவிற்பனை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
Embed widget