மேலும் அறிய

ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு விழா: பாதுகாப்பு பணிக்காக சென்ற காவலர் லாரி மோதி உயிரிழப்பு!

சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணிக்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த எதிரே வந்த கேரளாவில் சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரி மற்றும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது.

பாதுகாப்பு பணிக்காக சென்ற காவலர் லாரி மோதி உயிரிழப்பு. 


ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு விழா: பாதுகாப்பு பணிக்காக சென்ற காவலர் லாரி மோதி உயிரிழப்பு!

 

ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்காக சென்ற காவலர் லாரி மோதி விபத்தில் உயிரிழந்தார்.

 

 


ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு விழா: பாதுகாப்பு பணிக்காக சென்ற காவலர் லாரி மோதி உயிரிழப்பு!
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர் விஜயகுமார் ( 34). திருச்சி ஸ்ரீரங்கத்தில் வருகின்ற இரண்டாம் தேதி நடைபெற உள்ள சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணிக்காக விஜயக்குமார் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அரவக்குறிச்சியில் இருந்து கரூர் செல்லும் போது கரடிப்பட்டி பிரிவு அருகே எதிரே கேரளாவில் இருந்து வந்த சிமெண்ட் லோடு லாரி விஜயகுமாரின் இருசக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதியது.

இதில் இருசக்கர வாகனத்தில் வந்த காவலருக்கு வலது கால் மற்றும் உடல்களில் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்த பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காவலரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் கொண்டு செல்லும் வழியிலேயே  சிகிச்சை பலனின்றி காவலர் உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சம்பவ இடத்தில் அரவக்குறிச்சி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு விழா: பாதுகாப்பு பணிக்காக சென்ற காவலர் லாரி மோதி உயிரிழப்பு!

பைக் மோதிய விபத்தில் ஒருவர் பலி

நொய்யல், அருகே நாடார் புரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் நொய்யல் பகுதியில் இருந்து வேலாயுதம்பாளையம் நோக்கி சாலையின் ஓரமாக வந்து கொண்டிருந்தார். அப்போது முத்தனூர் வெள்ளக்கல் மேடு அருகே, வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்த ஒருவர் சாலையின் குறுக்கே திடீரென வந்ததால் மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த குமார் மற்றும் குறுக்கே வந்தவருக்கும் தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குமார் மற்றும் விபத்தில் சிக்கியவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய வரை மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் குறுக்கே நடந்து வந்த போது விபத்துக்குள்ளான ஊட்டி உமர் கட்டேஜ் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

மதுவிற்ற 14 பேர் கைது.

கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விட்டதாக 14 பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் எஸ்ஐ அலகு ராம் மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார் வாங்கல், வேலாயுதம்பாளையம், சின்ன தாராபுரம், வெங்கமேடு, தான்தோன்றி மலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாக சண்முகம், திலகவதி, ராஜ் கண்ணு, குழந்தைமணி, வெள்ளைப்பதேவன், முருகேசன், லோகநாதன், சடையன், குமார், மகேஸ்வரி, ஜீவா, சுப்ரமணியன், மலர்விழி, ஆகிய 14 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்தும் 90 மதிப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Embed widget