மேலும் அறிய

ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு விழா: பாதுகாப்பு பணிக்காக சென்ற காவலர் லாரி மோதி உயிரிழப்பு!

சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணிக்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த எதிரே வந்த கேரளாவில் சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரி மற்றும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது.

பாதுகாப்பு பணிக்காக சென்ற காவலர் லாரி மோதி உயிரிழப்பு. 


ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு விழா: பாதுகாப்பு பணிக்காக சென்ற காவலர் லாரி மோதி உயிரிழப்பு!

 

ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்காக சென்ற காவலர் லாரி மோதி விபத்தில் உயிரிழந்தார்.

 

 


ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு விழா: பாதுகாப்பு பணிக்காக சென்ற காவலர் லாரி மோதி உயிரிழப்பு!
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர் விஜயகுமார் ( 34). திருச்சி ஸ்ரீரங்கத்தில் வருகின்ற இரண்டாம் தேதி நடைபெற உள்ள சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணிக்காக விஜயக்குமார் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அரவக்குறிச்சியில் இருந்து கரூர் செல்லும் போது கரடிப்பட்டி பிரிவு அருகே எதிரே கேரளாவில் இருந்து வந்த சிமெண்ட் லோடு லாரி விஜயகுமாரின் இருசக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதியது.

இதில் இருசக்கர வாகனத்தில் வந்த காவலருக்கு வலது கால் மற்றும் உடல்களில் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்த பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காவலரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் கொண்டு செல்லும் வழியிலேயே  சிகிச்சை பலனின்றி காவலர் உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சம்பவ இடத்தில் அரவக்குறிச்சி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு விழா: பாதுகாப்பு பணிக்காக சென்ற காவலர் லாரி மோதி உயிரிழப்பு!

பைக் மோதிய விபத்தில் ஒருவர் பலி

நொய்யல், அருகே நாடார் புரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் நொய்யல் பகுதியில் இருந்து வேலாயுதம்பாளையம் நோக்கி சாலையின் ஓரமாக வந்து கொண்டிருந்தார். அப்போது முத்தனூர் வெள்ளக்கல் மேடு அருகே, வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்த ஒருவர் சாலையின் குறுக்கே திடீரென வந்ததால் மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த குமார் மற்றும் குறுக்கே வந்தவருக்கும் தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குமார் மற்றும் விபத்தில் சிக்கியவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய வரை மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் குறுக்கே நடந்து வந்த போது விபத்துக்குள்ளான ஊட்டி உமர் கட்டேஜ் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

மதுவிற்ற 14 பேர் கைது.

கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விட்டதாக 14 பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் எஸ்ஐ அலகு ராம் மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார் வாங்கல், வேலாயுதம்பாளையம், சின்ன தாராபுரம், வெங்கமேடு, தான்தோன்றி மலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாக சண்முகம், திலகவதி, ராஜ் கண்ணு, குழந்தைமணி, வெள்ளைப்பதேவன், முருகேசன், லோகநாதன், சடையன், குமார், மகேஸ்வரி, ஜீவா, சுப்ரமணியன், மலர்விழி, ஆகிய 14 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்தும் 90 மதிப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தலைப்பு செய்திகள்

"எல்லாம் காதலுக்காக.." எம்.எல்.ஏ-விடமே சினிமா பாணியில் கைவரிசை காட்டிய மேலாளர்: கிடுக்கிப்பிடி விசாரணையில் உடைந்த மயக்க நாடகம்!
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
" ஏற்கனவே திருமணமானதை மறைத்து , காதலியைக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் " அதிர்ச்சி சம்பவம்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Bday: பிறந்தநாள் பரிசாக சட்டப்பேரவை நேரலை - CM விஜயின் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு? எதிர்பார்ப்பில் தமிழகம்
பிறந்தநாள் பரிசாக சட்டப்பேரவை நேரலை - CM விஜயின் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு? எதிர்பார்ப்பில் தமிழகம்
TN Weather Update: மீண்டும் சென்னையில் மழையா? 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை
மீண்டும் சென்னையில் மழையா? 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
Embed widget