மேலும் அறிய

தென்காசியில் வட இந்தியர் வீட்டில் கைவரிசை காட்டிய டிப்டாப் ஆசாமி - போலீசில் சிக்கியது எப்படி?

தென்காசியில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவரின் வீட்டின் உள்ளே புகுந்து கொள்ளையடித்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

மேற்குவங்கம் பகுதியை சேர்ந்தவர் பிரந்தர் சக்கரவர்த்தி. இவர் சாப்ட்வேர் இன்ஜினியராக இருந்து வருகிறார். தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் உள்ள ராமாலயம் என்கின்ற பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார்.  இந்த நிலையில் இவர் கடந்த வாரம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னை சென்றுள்ளார்.

நகை, பணம் கொள்ளை:

பின்  மறுநாள் அந்த வீட்டில் வேலை செய்யும் பெண் அங்கு சென்று பார்க்கும் பொழுது வீடு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனே இது குறித்து பிரந்தர் சக்கரவர்த்திக்கு தகவல் கொடுத்துள்ளார்.  தகவல் அறிந்த அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டில் இருந்த 14 சவரன் நகை, 20 ஆயிரம் பணம் மற்றும் சில பொருட்கள் திருடு போயிருந்தது தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து குற்றாலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

டிப்டாப் ஆசாமி:

அப்போது சிசிடிவி கேமரா காட்சிகளில் கொள்ளை அடிக்க வந்த நபர் டிப்டாப்பாக முகக் கவசம் அணிந்தபடி ஒரு காரில் வந்து இறங்கி கொள்ளையடித்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதனை தொடர்ந்து, அந்த காரின் நம்பரை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது, அந்தக் கார் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த வேல்முருகன்(37) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதனையடுத்து கன்னியாகுமரி விரைந்த குற்றாலம் போலீசார் அங்கு வேல்முருகனை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, குற்றாலம் பகுதியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் வேல்முருகன் ஈடுபட்டதும், அவருடன் புதுக்குடி பகுதியை சேர்ந்த டேனியல் பிரகாஷ் (வயது 38) மற்றும் வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த மந்திரமூர்த்தி (வயது 35) ஆகிய இருவரும் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் மூவர் மீதும் பல்வேறு கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மூவரும் அந்த வழக்குகளில் கைதாகி சிறைக்கு சென்றுள்ளனர்.

பெரும் பரபரப்பு:

அங்கு வைத்து மூவரும் நண்பர்களாக பழகி பின் வெளியே வந்து பல்வேறு பகுதிகளில் சுற்றுலா பயணிகள் போல் டிப்டாப்பாக உடையணிந்து நோட்டமிட்டு காரில் வந்து தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து, அவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 78 கிராம் தங்க நகைகள் மற்றும் காரை பறிமுதல் செய்து, அவர்கள் மூவரையும் செங்கோட்டை நீதித்துறை நடுவர் சுனில் ராஜா முன்பு ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். டிப் டாப்பாக குற்றாலம் பகுதிக்கு சுற்றுலா வந்தது போல் உலா வந்து,  அங்குள்ள வீடுகளை நோட்டமிட்டு ஆட்கள் இல்லாத வீட்டிற்குள் நுழைந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட சம்பவம் குற்றாலம் பகுதிகளில் பெரும் பரபரப்பையும், அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

 EPS ADMK: அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
 அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 EPS ADMK: அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
 அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
Linked PAN number with Aadhaar number? பான் கார்டுடன் ஆதார் எண் இணைத்துவிட்டீங்களா.? ஒரு நொடியில் ஈசியா செக் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
பான் கார்டுடன் ஆதார் எண் இணைத்துவிட்டீங்களா.? ஒரு நொடியில் ஈசியா செக் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
India GDP Japan: புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
Embed widget