கல்லூரிகளுக்கு இடையே கலாட்டா... டீஸ் செய்த மாணவர்கள்... மனமுடைந்து தற்கொலை செய்த மாணவன்!
பச்சையப்பாஸ் காலேஜ் பசங்க போட்ட உயிர் பிச்சையில் நான் வாழனுமா? அப்படியாப்பட்ட உயிர் எனக்கு தேவையில்லை’ என வாட்ஸ்-ஆப்பில் 14 நொடிகளுக்கான ஆடியோ வெளியிட்டு விட்டு குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்கள் தன்னை கிண்டல் செய்ததால் மனம் உடைந்த மாநிலக் கல்லூரி மாணவர் ஒருவர் திருவள்ளூரில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பச்சையப்பாஸ் கல்லூரிக்கும் மாநிலக் கல்லூரிக்கும் இடையே எப்போதும் முட்டல் போக்கு நிலவி வருவது தொடர்கதை. காவல்துறை தொடர்ந்து வலுவான நடவடிக்கைகள் மேற்கொண்டும் இந்த இரண்டு கல்லூரி மாணவர்களுக்கிடையிலான மோதல் கட்டுக்கடங்காமல் போய்வருகிறது. இதற்கிடையே மாநிலக் கல்லூரியில் முதலாம் ஆண்டு முதுகலை வரலாறு படிக்கும் குமார் என்கிற மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அரக்கோணத்தைச் சேர்ந்த அவர் தனது தற்கொலைக்கு முன்பு பதிவு செய்துள்ள ஆடியோவில் , ‘பச்சையப்பாஸ் மாணவர்கள் போட்ட உயிர் பிச்சையால் நான் வாழனுமா?’ என அழுதபடியே பதிவு செய்துள்ளார்.’ பச்சையப்பாஸ் காலேஜ் பசங்க போட்ட உயிர் பிச்சையில் நான் வாழனுமா? அப்படியாப்பட்ட உயிர் எனக்கு தேவையில்லை’ என வாட்ஸ்-ஆப்பில் 14 நொடிகளுக்கான ஆடியோ வெளியிட்டு விட்டு குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சில குமாரை திருநின்றவூர் பகுதியில் அவரை பிடித்து சென்று கேலி செய்து அடித்து அவமானம் செய்ததால் ரயில் முன் பாய்ந்து குமார் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.தனது வாட்சப் ஸ்டேட்டஸ் பகுதியில் இறுதியாகத் தனது தாயுடனான புகைப்படத்தைப் பதிவு செய்துள்ள அவர், ‘ஸாரி அம்மா’ என அவரிடம் தான் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு மன்னிப்பு கேட்டுள்ளார். மாநிலக்கல்லூரி மாணவர் இறந்ததை அடுத்து சக மாணவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்துள்ள திருவள்ளூர் காவல்துறை மாணவர் மரணம் குறித்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.
இந்த இரண்டு கல்லூரி மாணவர்களுக்கு இடையேதான் பஸ்டே கலவரங்கள் அடிக்கடி தலைதூக்கும்.ஒரு சில கல்லூரி மாணவர்களுக்கு இடையே ரயில் மற்றும் பஸ்களில் ரூட் தல யார் என்பதில் கடுமையான போட்டி நிலவும். இதனை தடுக்க ஆண்டுதோறும், மாதந்தோறும் காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், ஆங்காங்கே இதுபோன்ற தகராறுகள் நடைபெற்று வருகிறது.
அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே அண்மையில் மாணவர் ஒருவர் பைக்குடன் நின்று கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு பைக்கில் அங்கு வந்த ஒரு மாணவன், ரூட் தலபிரச்சனை தொடர்பாக இவருடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர். இருவரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதை பார்த்த அரும்பாக்கம் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் அங்கு திரண்டு தாக்குதலில் ஈடுபட்ட மற்றொரு கல்லூரி மாணவனை தாக்கினர்.
இதனால், அந்த பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது. தகவலறிந்து வந்த அரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் தப்பியோடினர். போலீசார் அவர்களை விரட்டி சென்று 2 பேரை மடக்கி பிடித்து. காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets