மேலும் அறிய

‘19 வயதில் இந்தியா வந்தேன்’...இலங்கை தமிழர் தொடர் தற்கொலை முயற்சி - காரணம் என்ன..?

ராமநாதபுரம் மண்டபம் முகாமில் இருந்து தப்பிய ஜாய் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து தன்னை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும்படி மனு கொடுத்து வந்து உள்ளார்

சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் இல்லை என்றால் உரிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இலங்கை அகதி ஜாய் என்பவர் கண்ணாடியை உடைத்து  எடுத்து தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


‘19 வயதில் இந்தியா வந்தேன்’...இலங்கை தமிழர் தொடர் தற்கொலை முயற்சி - காரணம் என்ன..?

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் இருந்தவர் ஜாய். இவர் 19 வயதில் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வந்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர் ராமநாதபுரம் மண்டப முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளார். அங்கிருந்து தப்பிய ஜாய் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அங்கு உள்ள மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து தன்னை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும்படி மனு கொடுத்து வந்துள்ளார்.


‘19 வயதில் இந்தியா வந்தேன்’...இலங்கை தமிழர் தொடர் தற்கொலை முயற்சி - காரணம் என்ன..?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமாரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் அப்போது அவர் மீது நாகர்கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் அங்குள்ள நீதிமன்றம் உடனடியாக ஜாயை இலங்கையில் இருக்கும் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளனர். இவர் மீது வழக்குகள் உள்ள நிலையில் தன்னை தனது நாட்டிற்கு அனுப்பி வைக்கும்படி இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

பின்னர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தித்து மனு கொடுக்க சென்றபோது அங்கு இருந்த அதிகாரி ஒருவர் இலங்கைக்கு அனுப்ப முடியாது வேண்டுமானால் வேறு ஒரு அதிகாரியிடம் தெரிவியுங்கள் என தெரிவித்ததால் ஆத்திரமடைந்த வாலிபர் ஜாய் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் உள்ள கண்ணாடியில் தனது தலையை முட்டினார். இதனால் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. இதைத் தொடர்ந்து அந்த கண்ணாடியை கையில் எடுத்து கழுத்தை அறுக்க முயன்றால் சுதாரித்துக் கொண்ட காவலர்கள் அப்போது அங்கு தடுத்த காவலர் சண்முகவேல் கையில் லேசான காயம் ஏற்பட்டது.


‘19 வயதில் இந்தியா வந்தேன்’...இலங்கை தமிழர் தொடர் தற்கொலை முயற்சி - காரணம் என்ன..?

இதைத்தொடர்ந்து அவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்க காவல் துறை வாகனத்தில் கொண்டு சென்றனர். மேலும், ஜாய் தனது கழுத்தை அறுத்து  தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதைத் தொடர்ந்து அவரை சுமார் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் வளைத்து பிடித்துள்ளனர். இதனால் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் ஜாயை அங்கிருந்து பத்திரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.


‘19 வயதில் இந்தியா வந்தேன்’...இலங்கை தமிழர் தொடர் தற்கொலை முயற்சி - காரணம் என்ன..?

இதுகுறித்து ஜாய் கூறும் போது, "இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு 19 வயதில் வந்தேன். எனது பெற்றோர் இலங்கையில் உயிரிழந்து விட்டனர். இலங்கைக்கு செல்ல வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தேன். ஆனால் மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை தொடர்ந்து மண்டபம் முகாமில் இருந்து வெளியேறி பல்வேறு மாவட்ட ஆட்சியர்களிடம் அளித்தும் பயன் இல்லை. தற்போது நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவரிடமும் மனு அளிக்க வந்தேன்” எனத் தெரிவித்தார்.

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கோவையில் பைக் திருட்டு கும்பல் கைது... சிறுவன் உட்பட 6 பேர் ஜெயிலில்
கோவையில் பைக் திருட்டு கும்பல் கைது... சிறுவன் உட்பட 6 பேர் ஜெயிலில்
கோவையில் பெண் போலீசாருக்கு தொல்லை – பாலியல் குற்றச்சாட்டில் காவல் அதிகாரி சிறையில்...
கோவையில் பெண் போலீசாருக்கு தொல்லை – பாலியல் குற்றச்சாட்டில் காவல் அதிகாரி சிறையில்...
ரூ.20 லட்சம் மதிப்புள்ள கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல்... கூடுதல் விலைக்கு விற்ற உரிமையாளர் கைது
ரூ.20 லட்சம் மதிப்புள்ள கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல்... கூடுதல் விலைக்கு விற்ற உரிமையாளர் கைது
மயிலாடுதுறையில் காவல்துறையினர் அதிரடி: பஸ்பம் ஆன 740 கிலோ போதைப்பொருட்கள்...!
மயிலாடுதுறையில் காவல்துறையினர் அதிரடி: பஸ்பம் ஆன 740 கிலோ போதைப்பொருட்கள்...!
ABP Premium

வீடியோ

Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?
Tamilnadu Election | அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்பாடுகள் என்னென்ன?
Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
Netanyahu New Video: “நான் சாகவில்லை“; புரளிகளை போட்டு உடைத்த நெதன்யாகு; விரல்களை காட்டி வீடியோ வெளியீடு
“நான் சாகவில்லை“; புரளிகளை போட்டு உடைத்த நெதன்யாகு; விரல்களை காட்டி வீடியோ வெளியீடு
இந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக? 5 ஆண்டுகளில் அறநிலையத்துறை செய்தது என்ன?
இந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக? 5 ஆண்டுகளில் அறநிலையத்துறை செய்தது என்ன?
Assembly Election 2026: ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!
Assembly Election 2026: ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
FASTag Annual Pass Fee Hike: போச்சு.! உயர்த்தப்பட்ட ஃபாஸ்டேக் பாஸ் கட்டணம்; எவ்வளவு.? எப்போதிலிருந்து தெரியுமா.? இத படிங்க முதல்ல
போச்சு.! உயர்த்தப்பட்ட ஃபாஸ்டேக் பாஸ் கட்டணம்; எவ்வளவு.? எப்போதிலிருந்து தெரியுமா.? இத படிங்க முதல்ல
மதுரையில் பயங்கர தீ விபத்து: 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.. காரணம் என்ன?
மதுரையில் பயங்கர தீ விபத்து: 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.. காரணம் என்ன?
Assembly Election 2026: வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
Embed widget