மேலும் அறிய

சென்னை ஏர்போர்ட்: தபாலில் வந்த 105 MDMA மாத்திரைகள் பறிமுதல்

சென்னை விமான நிலைய சோதனைகளில் தங்கம் மட்டுமே அதிகமாக பிடிபட்டு வந்த நிலையில் சமீப காலமாக போதைப்பொருட்களும் கைப்பற்றபடுகிறது.

சென்னை விமான நிலையத்தின் அயல்நாட்டு தபால் அலுவலகத்திற்கு நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இருந்து வந்த தபால்களை சோதனை செய்ததில் 5.25 லட்சம் மதிப்புள்ள 105 MDMA மாத்திரைகள் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

ஆந்திரமாநிலம் குண்டூர் பகுதியில் உள்ள ஒரு முகவரிக்கு நெதர்லாந்து நாட்டில் இருந்து வந்த தபாலை பிரித்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதித்ததில் HOERA! JIJ BENT JARIG  என்ற டச்சு மொழியில் வாழ்த்து அட்டை இருந்தது. இது உங்களின் பிறந்தநாள், துரிதம் என்பது அதற்கான தமிழ்ப்பொருளாகும்.மேலும் அந்த கவரிலேயே இருந்த சில்வர் நிறத்தாலான சிறிய கவரை பிரித்ததில் 2.5 லட்சம் மதிப்புள்ள JURASSIS என்று எழுதப்பட்ட நீல நிறத்தாலான 50 MDMA மாத்திரைகள் இருந்தன. 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் முகவரிக்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த கவரை பிரித்ததில் 2.75 லட்சம் மதிப்புள்ள பிங்க் நிறத்தில் மண்டை ஓடு வடிவத்தாலான 55 MDMA மாத்திரைகள் இருந்தன. NDPS சட்ட பிரிவு 1985-இன் படி 5.25 லட்சம் மதிப்புள்ள 105 மாத்திரைகளையும் சுங்கத்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை ஏர்போர்ட்: தபாலில் வந்த 105 MDMA மாத்திரைகள் பறிமுதல்

MDMA மாத்திரைகள் என்றால் என்ன?

MDMA மாத்திரைகளை உட்கொண்ட 15 நிமிடங்களில் ரத்த ஓட்டம் வழியாக மூளைக்கு சென்று பரவசத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. இந்த மருந்து மூளையில் உள்ள ஹார்மோன்களைத் தூண்டுகிறது, இது பாலியல் விழிப்புணர்வு, நம்பிக்கை, உணர்ச்சிபூர்வமான நெருக்கம் மற்றும் பிற பரவச பயனர்களுடன் பச்சாத்தாபம் போன்ற உணர்வுகளை அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த மாத்திரையின் விளைவுகளும் நேர்மறையானவை அல்ல. பரவசம் இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் இதயம் அல்லது இரத்த நாள பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்கும் தன்மை கொண்ட அபாயம் இதில் உள்ளது. அதீத போதை தன்மையால் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

சென்னை விமான நிலையத்தில் அரபுநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் இருந்து கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்படுவது அதிகரித்த நிலையில், கடந்த ஜூன் 4ஆம் தேதி கத்தார் நாட்டின் தோஹா நகர் வழியாக சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 2 பெண்களிடம் இருந்து 70 கோடி மதிப்புள்ள ஹெராயின் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில் அயல்நாட்டு தபால் பிரிவு அலுவலகத்தில் சுங்கத்துறையினர் நடத்திய சோதனையில் தற்போது போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தகக்து. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்வது அதிகரித்துள்ள நிலையில் எல்லா பகுதிகளிலும் சோதனையை தீவிரப்படுத்த சுங்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். கண்காணிப்பை தீவிரப்படுத்த உள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijayabaskar: கப்பலை ஓட்டிச் செல்வது எடப்பாடி பழனிசாமி என்ற மாலுமி  - விஜயபாஸ்கர்
கப்பலை ஓட்டிச் செல்வது எடப்பாடி பழனிசாமி என்ற மாலுமி - விஜயபாஸ்கர்
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Haryana BJP : முரண்டு பிடித்த சீனியர்கள் தூக்கியடித்த ஹரியானா பாஜக..குதூகலத்தில் காங்கிரஸ்PTR Palanivel Thiyagarajan :உதயநிதி விழாவை புறக்கணித்த PTR?இரவில் நடந்த சந்திப்பு!அறிவாலயம் EXCLUSIVEDindigul Rowdy Murder : பிரபல ரவுடி வெட்டிக்கொலை!திமுக பிரமுகர் கொலையில் தொடர்பு?Mallikarjun Kharge Fainted : மயங்கி விழுந்த கார்கே!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijayabaskar: கப்பலை ஓட்டிச் செல்வது எடப்பாடி பழனிசாமி என்ற மாலுமி  - விஜயபாஸ்கர்
கப்பலை ஓட்டிச் செல்வது எடப்பாடி பழனிசாமி என்ற மாலுமி - விஜயபாஸ்கர்
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Embed widget