மேலும் அறிய

Crime: சாதாரண தகராறில் வடமாநில வாலிபர் அடித்துக் கொலை - சேலத்தில் பரபரப்பு

சாதாரண தகராறில் வடமாநில வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலம் தாதகாப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் இங்கேயே தங்கி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சேலம் மாநகர், தாதகாப்பட்டி பகுதியில், மூனாங்கரட்டில் உள்ள முத்து குமார் என்பவரின் பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனத்தில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குரு சரண் சகானி (32) என்பவர் கடந்த ஒன்றரை மாதங்களாக தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் குரு சரண் சகானி மற்றும் நிறுவனத்தில் உடன் பணிபுரியும் அனில் (30), ராகேஷ் (32), அஜய் (29), ஆலோ (28) ஆகியோர் சேர்ந்து, தாதகாப்பட்டி கேட், காளியம்மன் கோவில் அருகே உள்ள கடையில் மளிகைப் பொருட்கள் வாங்க நடந்து சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 

Crime: சாதாரண தகராறில் வடமாநில வாலிபர் அடித்துக் கொலை - சேலத்தில் பரபரப்பு

அப்போது அவர்களுக்கு பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த மூணாங்கரடு திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜா (25), கருங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (28) ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் செல்வதற்கு சாலையில் ஒதுங்கி ஓரமாக போக சொல்லி ஹாரன் அடித்து சத்தம் எழுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் நகர்ந்து வழிவிடாமல், தொடர்ந்து நடந்து சென்றதாக தெரிகிறது. அப்போது சீனி என்பவன், தனது இரு சக்கர வாகனத்தை குரு சரண் சகானி மீது மோதியதால் கீழே விழுந்துள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு, வாக்கு வாதம், மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாவும், அப்போது ஆத்திரமடைந்த ராஜா, சீனிவாசன் இருவரும் சேர்ந்து குரு சரணை தாக்கி கீழே தள்ளி விட்டதில், அருகில் இருந்த தொட்டியின் மீது குரு சரண் விழுந்தார். இதில் தலையில் படுகாயமடைந்த அவரை, அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

Crime: சாதாரண தகராறில் வடமாநில வாலிபர் அடித்துக் கொலை - சேலத்தில் பரபரப்பு

இதனிடையே தகவலறிந்து விரைந்து வந்த காவல் உதவி ஆணையர் அசோகன், இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் காவல்துறையினர், குரு சரணை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பிளாஸ்டிக் நிறுவன உரிமையாளர் முத்து குமார் அளித்த புகாரின் பேரில் கொலை வழக்கு பதிவு செய்த அன்னதானப்பட்டி காவல்துறையினர், ராஜா, சீனிவாசன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த கொலை சம்பவத்திற்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்றும் ஏதாவது முன் விரோதத்தில் நடந்ததா? என அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினார். ‌பின்னர் சீனிவாசன், ராஜா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சாதாரண தகராறில் வடமாநில வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலம் தாதகாப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
Embed widget