மேலும் அறிய

"நான் அழகாக இல்லை” - உயிரை மாய்த்துக்கொண்ட 12-ஆம் வகுப்பு மாணவன்..!

குடும்பத்தினருடன் எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பதாகக் காட்டிக்கொண்டாலும் பூவேந்தனுக்கு, தான் அழகாக இல்லை என்ற வருத்தம் சிறு வயதில் இருந்தே ஏற்பட்டுள்ளது.

தான் அழகாக இல்லாத காரணத்தினால், இளம் பெண்கள் தன்னிடம் பேசுவதில்லை என்று தானாகவே நினைத்துக்கொண்டு, விரக்தியில் இருந்த 12 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கும்பகோணப்பகுதியில்  பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் மாவட்டம் சோழபுரத்திற்கு அடுத்த பணகுடம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவருக்கு பூவேந்தன் என்ற ஒரு மகனும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர்களது குடும்பத்தில் பூவேந்தன் ஒரே மகன் என்பதால் ஆசையுடன் வளர்த்து வந்துள்ளனர். இவர் அங்குள்ள அரசுப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். குடும்பத்தினருடன் எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பதாகக் காட்டிக்கொண்டாலும் பூவேந்தன் தான் அழகாக இல்லை என்ற வருத்தம்  சிறு வயதில் இருந்தே ஏற்பட்டுள்ளது. முன்பெல்லாம் அதனை கண்டுக்கொள்ளாமல் இருந்தாலும் டீனேஜ் வயதில் இது பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது.
 
தான் மாநிறமாக இல்லை, பார்ப்பதற்கு அழகாகவும் இல்லை என நினைத்து, தன்னிடம் இளம் வயது பெண்கள் யாரும் பேசாமல் செல்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. பூவேந்தனின்  மற்ற நண்பர்களுடன் சிரித்து பேசுகையில் ஏன் என்னிடம் பேசவிரும்புவதில்லை, அழகாக இல்லை என்பது தானோ என்ற தாழ்வு மனப்பான்மைக்கு தள்ளப்பட்டு விட்டார் இந்த மாணவன்.  ஒருவருக்கு வாழ்க்கையில் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டால் எந்தச் செயலையும் செய்துமுடிக்க முடியாது, மேலும் சந்தோஷமாக வாழ முடியாமல் போய் விடும் என்ற கூற்று உண்மைதான் என்பதை இந்தச் சோகச் சம்பவம் காட்டியுள்ளது. 

அப்படித்தான் தற்போது 12 ஆம் வகுப்பு படிக்கும் பூவேந்தனின் முடிவு அமைந்துவிட்டது. அழகாக இல்லை என்ற தாழ்வு மனப்பான்மையில் இருந்து வந்திருந்த நிலையில், விரக்தியில் பணகுடம் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில்  பூவேந்தன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இத்தகவலறிந்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவனின் உடலை மீண்டு பிரதேசப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தன் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான் என்ற செய்தியினை கேட்டப் பெற்றோர்கள் அலறி துடித்தனர். ஆசையாய் வளர்த்த என் செல்வத்தினை இழந்து விட்டோமே என்று பூவேந்தனின் உடலினைப்பார்த்து பெற்றோர்கள் கதறி அழுத நிகழ்வு பார்ப்போரையும் கண் கலங்க செய்தது.

இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சோழபுரம் காவல்நிலைய போலீசார் என்ன காரணத்திற்காக மாணவர் உயிரிழந்திருப்பார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். பூவேந்தனின் நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், வேறு எந்தப்பிரச்சனையும் அவனிடம் இல்லை எனவும் ஆனால் தான் அழகாக இல்லை என அடிக்கடி கூறுவதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். எனவே  மன அழுத்தத்தின் காரணமாக மாணவன் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


  • தான் அழகாக இல்லை என்று 12 வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.  அழகு என்பது அவரவர் கற்பனை என்றும், புறத்தோற்றத்தை விட குணம், படிப்பு போன்றவை முக்கியம் என்பதனை யாராவது உணர்த்தியிருந்தால், நிச்சயம் மாணவன் உயிரினை மாய்த்திருக்க மாட்டான் என்ற கருத்தினை சமூக ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர். பெற்றோர்களும் தங்கள் குழந்தை என்ன மனநிலையில் உள்ளார்கள்  என்பதை புரிந்துக்கொள்ள அவர்களுடன் நண்பர்களாய் பழகினால் நிச்சயம் இளம் வயது மாணவர்களுக்கு தற்கொலை என்ற எண்ணமே வரவாய்ப்பில்லை என்பது தான் நிதர்சன உண்மை.

தலைப்பு செய்திகள்

அமைச்சர்கள் சொன்ன 'அந்த' வார்த்தை.. குறைதீர் கூட்டத்தை மொத்தமாகப் புறக்கணித்த விவசாயிகள்.. பின்னணி என்ன?
அமைச்சர்கள் சொன்ன 'அந்த' வார்த்தை.. குறைதீர் கூட்டத்தை மொத்தமாகப் புறக்கணித்த விவசாயிகள்.. பின்னணி என்ன?
பணத்தைக் கேட்டா 'பிட்டு துணியோடு' அடிப்பாங்களா? - உயிருக்கு பயந்து ஓடிய ஏஜென்ட்கள் - நடந்தது என்ன?
பணத்தைக் கேட்டா 'பிட்டு துணியோடு' அடிப்பாங்களா? - உயிருக்கு பயந்து ஓடிய ஏஜென்ட்கள் - நடந்தது என்ன?
விழுப்புரம் அருகே சோகம்... வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட மினிவேன் டிரைவர் திடீர் மரணம்!
விழுப்புரம் அருகே சோகம்... வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட மினிவேன் டிரைவர் திடீர் மரணம்!
சோழபுரத்தில் அதிரடி: ரூ.50 லட்சம் மதிப்பிலான 2,500 கிலோ புகையிலைப் பொருட்கள் குழிதோண்டி அழிப்பு
சோழபுரத்தில் அதிரடி: ரூ.50 லட்சம் மதிப்பிலான 2,500 கிலோ புகையிலைப் பொருட்கள் குழிதோண்டி அழிப்பு

வீடியோ

Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance plan : கூட்டணியே வேண்டாம் என பிளான் போடும் ஸ்டாலின்.? அடுத்த நொடியே ஓடோடி சென்ற பிரேமலதா- பேசியது என்ன.?
கூட்டணியே வேண்டாம் என பிளான் போடும் ஸ்டாலின்.? அடுத்த நொடியே ஓடோடி சென்ற பிரேமலதா- பேசியது என்ன.?
Passport Price Hike: அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?
அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?
CM Vijay: திடீரென மெரினாவில் இறங்கி மாரத்தானில் ஓடிய முதலமைச்சர் விஜய்..! போதைப்பொருள் விழிப்புணர்வு
திடீரென மெரினாவில் இறங்கி மாரத்தானில் ஓடிய முதலமைச்சர் விஜய்..! போதைப்பொருள் விழிப்புணர்வு
Cm Vijay vs EV Velu : முதல் ரெய்டே தோல்வியா.? லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் எ.வ.வேலு வீட்டில் சிக்கியது என்ன.?
முதல் ரெய்டே தோல்வியா.? லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் எ.வ.வேலு வீட்டில் சிக்கியது என்ன.?
ADMK:
ADMK: "வெயிட் பண்ணுங்க.. முதலமைச்சர் ரீல்ஸ் எடுக்கனும்.." விஜய்யை விளாசிய அதிமுக!
KTM-க்கு டஃப் ஃபைட்! மிரட்டலான 457cc ட்வின் சிலிண்டர் எஞ்சினுடன் Aprilia Tuono 457! என்னென்ன புதுசு தெரியுமா?
KTM-க்கு டஃப் ஃபைட்! மிரட்டலான 457cc ட்வின் சிலிண்டர் எஞ்சினுடன் Aprilia Tuono 457! என்னென்ன புதுசு தெரியுமா?
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
என்எல்சி பங்குகள் விவகாரம்; பிரதமர் மோடிக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் - விஜய் சொன்னது என்ன?
என்எல்சி பங்குகள் விவகாரம்; பிரதமர் மோடிக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் - விஜய் சொன்னது என்ன?
Embed widget