மேலும் அறிய

17 வயது சிறுமிக்கு 2 ஆண்டுகளில் 4 வது திருமணம்: கொடுமைக்கார தாய், சகோதரன் கைது!

மஹாராஷ்டிராவில் 17 வயது சிறுமிக்கு 4 வது திருமணம் செய்ய முயற்சி செய்த தாய் உட்பட 13 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மஹாராஷ்டிரா அடுத்த அவுரங்கா பாத் மாவட்டம் போக்ரடன் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை அவரது தாய் மற்றும் சகோதரன் 4 வது திருமணம் செய்ய கட்டாயப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே, இந்த சிறுமிக்கு மூன்று முறை திருமணம் ஆனநிலையில் 4 வது திருமணம் செய்ய தாய் உட்பட 13 பேர் மீது மஹாராஷ்டிரா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இதுகுறித்து 17 வயது சிறுமி தெரிவிக்கையில், எனக்கு தற்போது 17 வயதாகிறது. கடந்த 2 ஆண்டுகளாக என் தாயும், சகோதரர்களும் சேர்ந்து மூன்று முறை கட்டாயப்படுத்தி எனக்கு திருமணம் செய்து வைத்தனர். அந்த கணவர்களிடம் வாழ பிடிக்காமல் பிரிந்து வந்துவிட்டேன்.இப்போது நான்காவது முறையாக எனக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி மேற்கொண்டதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்நிலையில் புகார் அளித்தேன் என்று தெரிவித்துள்ளார். 

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் தாய் மற்றும் சகோதரர்களும் தலை மறைவாகியுள்ளனர். தொடர்ந்து, காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கையில், சிறுமிக்கு ஏற்கனவே மூன்று முறை திருமணம் நடந்துள்ளது. முதல் முறை திருமணம் நடந்த பின், ஒரு மாதத்தில் தாய் வீட்டுக்கு திரும்பிய சிறுமி, கணவன் வீட்டுக்கு செல்ல மறுத்துள்ளார். அதனைத்தொடர்ந்து அந்த சிறுமியின் விருப்பமின்றி இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளனர்.

அடுத்த சிலநாட்களிலேயே தாய் வீட்டுக்கு திரும்பிய சிறுமிக்கு, மூன்றாவது முறையாக திருமணம் செய்து உள்ளனர். இப்போது ஒரு ஆண்டு கழித்து வீடு திரும்பிய சிறுமி, மூன்றாவது கணவரின் வீட்டுக்குச் செல்ல மறுத்தநிலையில், நான்காவது முறையாக திருமணம் செய்து வைக்க சிறுமியின் தாயும், சகோதரர்களும் முயற்சித்து உள்ளனர். 

இதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவிக்கவே தொடர்ந்து அடித்து கட்டாயப்படுத்தியுள்ளனர். இதையடுத்து அந்த சிறுமியின் தோழியின் உதவியுடன் போலீசில் அளித்துள்ளார். விசாரணையில் சிறுமியின் தாயும், சகோதரர்களும் மூன்று திருமணத்திலும் மாப்பிள்ளை வீட்டாரிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. 

தற்போது, சிறுமியின் தாய், சகோதரர்கள், அவரது மூன்று கணவர்கள் உட்பட 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவான அவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்பு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
Breaking News LIVE 6th OCT 2024: சென்னையில் இன்று விமானப்படை சாகசம் - காலை முதல் மெரினாவில் குவிந்த மக்கள்
Breaking News LIVE 6th OCT 2024: சென்னையில் இன்று விமானப்படை சாகசம் - காலை முதல் மெரினாவில் குவிந்த மக்கள்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Embed widget